அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே - மூதுரை,9 நாள் ஒன்றுக்கு ஒரு நூறு பக்கங்களுக்குக் குறையாமல் படித்தலும், பதினாறு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுதலும், இரவில் படுக்கையில் வரும் சிந்தனைகளைப் பாடல் ஆக்குதலும் நாள் வழிக்கடமையாகக் கொண்டு, தமிழ் மொழிக்காவும் இனத்திற்காகவும் இறுதி காலம் வரை எழுத்து, பேச்சு எனச் செயல்பட்டவர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார். ஐயாவின் திருக்குறள் தொடர்பான நூல்கள், இலக்கண வரலாறு, சுவடியியல் போன்ற நூல்களின் வழியாக அறிந்திருந்தேன். நேரில் சந்திக்கும் வாய்ப்பு 2005 - இல் கிட்டியது. நெய்வேலிக்குச் சொற்பொழிவு நிமித்தமாக ஐயா வந்தபொழுது, நானும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழாரும் திருக்குறள் ஆய்வுத் தொடர்பாக அவர்களைச் சந்தித்தோம். அன்று தொட்டு ஐயா அவர்களுடன் ஏற்பட்ட சில நினைவுகளைப் பகிர்வதாகவே இக்கட்டுரை அமைகிறது. என்னுடைய ஆய்வு திருக்குறள் பரிதியார் உரையைப் பற்ற...