இடுகைகள்

எந்தையும் தாயும்

படம்
  நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய நூல் எந்தையும் தாயும். புதுமைப்பித்தனைத் தேடிதேடிப் படிக்கின்ற வாசகர்களுக்கு சிலவற்றை அவர் மகள் என்ற முறையில் கூற ஆசைப்படுகிறேன். இதில் அச்சேறாத சில பகுதிகளும் உண்டு. இது அப்பாவின் வரலாற்றின் பின்பகுதி என்று கூறலாம் எனத் தன்னுடைய இரண்டாவது வயதில் தந்தையை இழந்த தினகரி தன் அம்மா அப்பாவைப் பற்றித் தொடர்ச்சியாக உரையாடியதன் வழியாகவும் அப்பாவின் நண்பர்களோடும் அவருடைய எழுத்துகளோடும் குறிப்பாக அவர் எழுதிய கடிகளிலிருந்தும் தாம் பெற்ற அனுவபவங்களிலுருந்தும் எழுதுகிறார். புதுமைப்பித்தன் ஒரு புறம் தமது கூரிய மொழியால் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வை எழுதிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் வாழ்வின் துயரம் அவரைத் துரத்திக்கொண்டேயிருந்துள்ளதை தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு நூலை வாசிக்கும்   பொழுது உணரமுடியும். தமது 40 வயதில் இரண்டு குழந்தைகளை இழந்து மூன்றாவது குழந்தையாகப் பிறந்த தினகரின் மீது அளவு கடந்த அன்பும் நேசமும் உடையவராக இருந்துள்ளது அவர் தொடர்ந்து தன் மனைவி கமலாவிற்கு எழுதிய க...

மௌன சாட்சியாய் … இல்லாமல் இருப்போமே

  பெண்ணே அருகில் வா, நான் கூறுவதைக் கேள் பயனுள்ள விசயங்கள் மீது ஒருமுறை உனது ஆர்வத்தைத் திருப்பு. இயற்கை உனக்கு வழங்கிய இச்சமூகம் தட்டிப்பறித்த ஆதாயங்களைக் கருதிப் பார். நீ ஆணுடைய கூட்டாளியாகப் பிறந்து எப்படி அவனுடைய அடிமையானாய் என்பதை அறிவதற்கு அருகில் வா. செயற்கையான நிலைமைகளை எவ்வாறு இயற்கை என்று நினைத்து நீ அதனை விரும்பத் தொடங்கினாய் என்பதை அறிந்திட வா. நீண்டகால அடிமைப்பழக்கம் உன்னைக் கீழ்மைப்படுத்தியதை அறிந்திட வா. சுதந்திரம் புகழ் ஆகியவற்றின் மேன்மைகள் கடினமானவை என்று ஒதுக்கிவிட்டுச் சொகுசான இழிவுகள் போதுமென்று எவ்வாறு தெரிவு செய்தாய் என்பதை அறிந்திட வா. நான் வரைகிற இந்தச் சித்திரம் உன்னை உன் கட்டுக்குள் வைக்கும் என்றால் இதுபற்றி உணர்ச்சி கலவாமல் உன்னால் சிந்திக்க முடியும் என்றால் பயனற்ற உனது வேடிக்கை விளையாட்டுகளுக்குத் திரும்பிவிடு, இதற்கு மருந்து ஏதுமில்லை, இழிவுகள் பழகிவிட்டன. (Choderlos de Loclose, On the Education of W omen) உலகில் பெரும்பாலான பெண்கள் இன்னமும் அஞ்சுகிறார்கள், பசியோடுயிருக்கிறார்கள் மௌனமாகயிருக்கிறார்கள் எல்லாவித தளைகளையுடைய மதத்தால் நிரப்பப்பட்டுள்ளா...

திணையியம்- தமிழின் ஆதி மெய்யியல்

படம்
  சுற்றுச்சூழல் இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில்     முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் மு. பாலசுப்பிரமணியம் என்னும் இயற்பெயரைக் கொண்ட பாமயன். நவீன வேளாண்மையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பழந்தமிழரின் திணையியல் வாழ்வியலைப் பற்றித் தமிழ் சமூகத்தோடு தொடர்ந்து உரையாடியும் எழுதியும் வருபவர் . வேளாண்மையை அடிப்படையாக் கொண்டு வாழ்வியலை அமைத்துக்கொள்ளும் ஓர் இயற்கைநேய வாழ்க்கைமுறையை பொதியைச் சோலை என்னும் ஊரினை (கூட்டுறவு வேளாண் நிலமாகத் தென்காசி, சிவகிரி, வாசுதேவன்நல்லூர் அருகே) ஏற்படுத்தி பகுத்துண்ணல், பல்லூயிர் ஓம்பல், தமிழர் வகுத்துள்ள திணை வாழ்வியல், உயிர்ம நேயம் காத்தல் அத்துடன் அன்பையும் நிறைவையும் கொண்ட வாழ்வை எதிர்கால தலைமுறைக்கு உருவாக்கி கொடுத்தல் என்னும் கனவுகளைச் சாத்தியப்படுத்தி வருபவர் பாமயன். வேளாணைமை இறையாண்மை, அள்ளித் தரும் நிலம், அணுகுண்டும் அவரை விதைகளும், நியாய வணிகம், தாணுமாலயன் ஆலயம், முன்னத்தி ஏர் என்னும் நூல்களின் வரிசையில்2025 இல் வெளிவந்துள்ள நூல் திணையியம் தமிழின் ஆதி மெய்யியல். தோற்றுவாய் தொடங்கி நிறைவாக வரை 37 தலைப்புக...

திருவள்ளுவரின் உருவப் படங்கள்

படம்
 

இலக்கிய இதழ்கள் வழி திருக்குறளாராய்ச்சி

படம்
    தமிழ்ச் சமூகத்தில் தாம் தோன்றிய காலம் தொட்டு இடையறவுபடாமல் தொடர்ச்சியாக ஊடாட்டம் நிகழ்த்தி வரும் நூல் திருக்குறள். படைப்பாளர்கள் திருக்குறளின் கருத்துகளைத் தழுவிக்கொண்டனர். பிறநூல் உரையாளர்கள் தங்கள் கருத்துக்கு வலுசேர்க்க அல்லது விளக்கப்புகும் பகுதியைத் தெளிவிக்க மேற்கோள்களாகத் தமது உரைகளில் எடுத்தாண்டனர். திருக்குறளைப் புரிந்துகொள்ள முயன்வர்களும் புரிய வைக்க முயன்றவர்களும், தமது அறிவாற்றலைப் புகுத்திப்பாக்க விரும்பியோருர் எனப் பலர் உரையெழுதினர். திருக்குறளைத் தமிழரின் பண்பாட்டு அடையாளமாக கண்டோர் திருக்குறளை அரசியல் ஆயுதமாக்கி பொதுவெளியில் அனைவரும் கற்கும்,கேட்கும், பார்க்கும் வகையில் பரவலாக்கம் செய்தனர். தமிழ்ப் புலமை மரபு   திருக்குறளுளை அகப் புறநிலைகளில் ஆய்ந்து ஆய்ந்து   அதைச் சுற்றிப் பிண்ணிப் பிணைக்கப்பட்ட தளைகளை விடுத்து திருவள்ளுவரின் மெய்யான சிந்தனையை நோக்கி நகர்த்த முற்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்நிலையில் இந்த நூல் கவனம் பெறுகிறது. முன்னுரை பகுதியில் திருக்குறள் வளர்ச்சி வரலாறு, தொகுப்பின் தேவையும் இதழ்க் குறிப்புகளும், இதழ்களின் வழி திருக்குறள்...

இகிரு (வாழ்தல்)

படம்
  மனித மனத்தின் நுண்ணுணர்வை திரைமொழியாக்கும் ஜப்பானிய இயக்குநர் அகிரா குரேசவாவின் படம் இகிரு. பணியாற்றும் காலத்தில் பிறருக்கு எந்த வகையிலும் பயன்படமால் முப்பது ஆண்டுகளாக அரசு பொதுப்பணித்துறையில் விடுப்பே எடுக்காத, தொடர்ந்து பணிப்பாதுப்பை மட்டுமே முன்னிருத்தி எப்பொழுதும் வேலை செய்துகொண்டிருப்பது போல தோற்றத்தைக் கொடுத்து, தலைமை அலுவலராக உயர்ந்து, சில மாதங்களில் ஒய்வு பெற இருக்கும் நிலையில், குடல் புற்று நோயால் சில மாதங்களில் இறந்துவிடுவோம் என்று தெரியும் போதும் தன் மகனால் புறக்கணிக்கப்படும் நிலையில் ஒரு மனிதன் எப்படியான முடிவை நோக்கி நகர்வான் என்பதையும்   அதனூடாக அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செயல்பாடுகளையும்   பேசுகிறது இகிரு . படத்தின் தொடக்கத்தில் ஒரு ஊடுகதிர் (எக்ஸ்ரே) காட்டப்படுகிறது. பின்னணியில் நமது கதாநாயகனுக்கு வயிற்றில் புற்று நோய் என்பதை அறியாமல். தன் பணியில் முழுமையாக செய்து கொண்டிருக்கிறார் என ஒலிக்கிறது.   கதாநாயகன் வடனபே பொதுப்பணித்துறையில் தற்போது தலைமை அதிகாரியாகப் கடந்த முப்பதாண்டுகளாகக் கடமையே கண்ணாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க...

வள்ளுவம் இதழ் (1999 – 2003)

படம்
    வள்ளுவம் இதழ் இரு திங்கள் இதழாக சனவரி பிப்ரவரி 1999 இல் தொடங்கப் பெற்றது. பண்புடையார்ப் பட்டுண்டு உலகு என்னும் தொடரை முதன்மைபடுத்தி வள்ளுவம் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 22 இதழ்கள் வெளிவந்துள்ளன.   சிறப்பாசிரியர் பேராசிரியர் ச. மெய்யப்பன். ஆசிரியர்கள் பல்லடம் மாணிக்கம், பேராசிரியர் இ. சுந்தமூர்த்தி, நெறியாளுகை குழு பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியம், புலவர் இரா. இளங்குமரன், பேராசிரியர் தி. முருகரத்தினம், மருதமுத்து, ஆசிரியர் குழு க.ப. அறவாணன், ஈரோடு தமிழன்னபன், இரா. இளவரசு, பா. வளவனரசு, சு. சண்முகசுந்தரம், இன்குலாப், கி. நாச்சிமுத்து வடிவமைப்பு இராம. கண்ணப்பன், வே. கருணாநிதி, ஒவியர் ட்ராஸ்கி மருது, பல்லடம் மாணிக்கம்   பண்பாட்டு ஆய்வு மையம் வழியாக வெளிவந்துள்ளது. ஐந்தாவது இதழில் (செப்டம்பர்- அக்டோபர், 1999) ஒவியர் ட்ராஸ்கி மருதுவுடன் மாரிமுத்து, புகழேந்தி இணைந்துள்ளனர். இதழ் வடிவாக்கம் வசந்தகுமார் என்று உள்ளது. 7வது இதழில்(சனவரி- பிப்ரவரி 2000) ஓவியர் மாரிமுத்து மட்டும் இடம்பெறுகிறார். வடிவமைப்பில் வே. கருணாநிதி மட்டு...

தையல் சிட்டும் நானும்

படம்
  தாயின் பராமரிப்பிலிருந்து பறக்கும் நிலையில் பறக்க எத்தனித்த போது கீழே விழுந்து கிடந்த தையல்சிட்டு குருவியைத் தமிழ்த்துறையின் நூலகர் திரு ஜோசப் அவர்கள் எடுத்துவந்து (காலை 10மணி வாக்கில்) முனைவர்பட்ட மாணவர்களிடம் கொடுத்துள்ளார். தையல்சிட்டு வந்த செய்தியை அறிந்து பார்க்க சென்றேன். அதனை உள்ளங்கையில் பொத்தி வைத்துக்கொண்டு இருந்தார்கள். அதனால் எதுவும் செய்ய இயலாது என்றார்கள். நான் அதனை வாங்கி கொண்டு வந்து சொட்டுச் சொட்டாகச் சில சொட்டுகள் தண்ணீர் கொடுத்தேன். சிறிது நேரத்தில் கண்விழித்துப் பார்த்தது. அடுத்து என் கையிலிருந்து என் மேலே ஏறியது. பையப்பைய நகர்ந்து தோளில் அமர்ந்து பிறகு என் கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் சங்கிலியைப் இறுக பற்றிக்கொண்டது. இறங்கவேயில்லை. அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டது. எனக்கு வகுப்பு இருந்தது. வகுப்பு எடுக்கச் சென்றேன். எந்த சத்தத்திற்கும் அசங்கவில்லை. கண்விழித்து விழித்துப் பார்த்துவிட்ட பழைய நிலைக்கே சென்றது. அது கையில் பிடித்திருந்த பிடியை நகர்த்தவே இல்லை. வகுப்பு மாணவர்கள் பிடித்து இழுத்துப்பார்க்கின்றார்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை...

மிட்டாய் தாத்தா

படம்
  புன்னகைத் தவழும் முகம். மழலை மொழி. தெளிவான பேச்சு. காண்பவரை வாழ்த்தும் வாய்மொழி. தள்ளாட்டம் இல்லா சொல்லாட்டம். தீர்க்கமான கண்கள்.முதுமையின் ரேகை புறத்தில் மட்டுமே. உழைப்பை நம்பி வாழும் மனிதர்   உழைத்துப் பெற்றதைப் பிறருக்கு உதவும் மனம் என வாழ்ந்து வரும் 121 வயதான மிட்டாய் தாத்தா என்ற முகமது அபுசலி அவர்களை 28.08.2025 அன்று தஞ்சாவூர் மானம்பூச்சாவடி ஆடக்காரத் தெருவில் சந்தித்தேன்.               இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பர்மாவைக் கைபற்றிய பொழுது இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அந்த காலக்கட்டத்தில் தன் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பின்களையும் படையினர்   தம் கண் முன்னே வெட்டிக் கொன்ற நிலையில் இவர் தப்பித்து அந்தமான் கப்பலில் தமிழகம் வந்து சேர்ந்துள்ளார்.             தஞ்சாவூர் வந்தடைந்த பொழுது அவருக்கு 50 வயது. மிட்டாய் செய்யும் தொழிலைக் கற்றுக்கொண்டு தன் வாழ்நாள் முழுதும் அத்தொழிலையே மேற்கொண்டதால் மிட்டாய் தாத்தா என அழைக்கப்பெறுகிற...

மனித குலத்தின் நம்பிக்கை - டாக்ஸி டிரைவர்

படம்
             தென் கொரியாவின் அரசியல் சூழல் 1980 இல் மிக கொந்தளிப்பான காலக்கட்டமாக இருந்தது. காரணம் 1979 அக்டோபரில் அதிபர் பார்க் சுங் –ஹீ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து   ஜெனரல் சுன் டூ ஹ்வானின் இராணுவ ஆட்சியும், அடக்குமுறையும், நாடு முழுதும் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் வெடித்தெழுந்தன. குறிப்பாக குவாங்ஜூ பகுதியில் ஏற்பட்ட மக்களெழுச்சி காரணமாக இராணுவம் மக்களை அடித்து கொடுமை படுத்தி,   பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், துப்பாக்கி சூட்டில் பலர் மாண்டனர். இச் செய்தியை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கில் வந்த ஜெர்மன் பத்திரிக்கையாளரை தென்கொரியாவின் நகரமான சியோலில் இருந்து குவாங்ஜூ அழைத்துச் சென்ற ஓட்டுநரின் கதையும் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதனைக் கடந்து அவர்கள் குவாங்ஜூவிலிருந்து எப்படித் தப்பி வந்தார்கள் என்பதைப் பற்றி பேசும் படம் TAXI DRIVER. தென் கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி டுக்கின் உதவி இயக்குநர் ஜாங் கூன் 2017 இல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் - உறவுகளின் மொழி

  உறவு என்னும் பெயர்ச்சொல்லுக்கு அடைதல், தொடர்பு (பிணைப்பு), நட்பு, சுற்றம், அன்பு, விருப்பம் என்னும் பொருள்கள் உள்ளன [1] . மனித வாழ்க்கைக்கு உறவு என்பது அடிப்படை. ஒருவரோடு ஒருவர் தொடர்பு இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. குடும்ப உறவு, உற்றார் உறவினர், சுற்றத்தார் உறவு, சமூகத்தோடு கொள்ளும் உறவு, இனம், மொழி கடந்த உறவு என விரிந்து மானுடம் இயக்குகிறது. உறவு என்பது அன்பின் வெளிப்பாடு, பண்பின் செயற்பாடு. நல்ல உறவு முறைகளும் நல்ல உணர்வு முறைகளுமே ஆறறிவு உருவத்தை மனிதனாக்கும். மனித வாழ்க்கையில் உறவுகள் காலங்களை எல்லாம் கடந்து நிற்கின்றன. தொடர்புகள் நிலைக்க ஒன்று பிறிதொன்றுடன் தொடர்பில்லாமல் வாழ்தல் இயலாது. ஒன்று பிறிதொன்றைச் சார்ந்து வாழ வேண்டும். அந்த சார்பு நிலையில் ஒழுங்கு அமைய வேண்டும் அதுதான் மனித உறவு. உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே [2]   நாகரீக காட்டாற்று வெள்ளத்தில் நீந்தி திளைத்த மனிதக்கூட்டம், பண்பாடு என்னும் கரைகளை மெல்ல மெல்ல உருவாக்கி உறவுகளைச் சீர்படுத்தி வாழத் தொடங்கினர். அவர்களே உயர்திணை எனப் போற்றப்பெற்றனர். தமிழ் மொழி பேசும் தமிழ...