எந்தையும் தாயும்
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய நூல் எந்தையும் தாயும். புதுமைப்பித்தனைத் தேடிதேடிப் படிக்கின்ற வாசகர்களுக்கு சிலவற்றை அவர் மகள் என்ற முறையில் கூற ஆசைப்படுகிறேன். இதில் அச்சேறாத சில பகுதிகளும் உண்டு. இது அப்பாவின் வரலாற்றின் பின்பகுதி என்று கூறலாம் எனத் தன்னுடைய இரண்டாவது வயதில் தந்தையை இழந்த தினகரி தன் அம்மா அப்பாவைப் பற்றித் தொடர்ச்சியாக உரையாடியதன் வழியாகவும் அப்பாவின் நண்பர்களோடும் அவருடைய எழுத்துகளோடும் குறிப்பாக அவர் எழுதிய கடிகளிலிருந்தும் தாம் பெற்ற அனுவபவங்களிலுருந்தும் எழுதுகிறார். புதுமைப்பித்தன் ஒரு புறம் தமது கூரிய மொழியால் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வை எழுதிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் வாழ்வின் துயரம் அவரைத் துரத்திக்கொண்டேயிருந்துள்ளதை தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு நூலை வாசிக்கும் பொழுது உணரமுடியும். தமது 40 வயதில் இரண்டு குழந்தைகளை இழந்து மூன்றாவது குழந்தையாகப் பிறந்த தினகரின் மீது அளவு கடந்த அன்பும் நேசமும் உடையவராக இருந்துள்ளது அவர் தொடர்ந்து தன் மனைவி கமலாவிற்கு எழுதிய க...