இடுகைகள்

தமிழ்ப் பண்பாடு வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவ சக்திகள்

மனோண்மணி - பக்குவம் எய்திய உயிர்களை மலத்தினின்று நீக்கிச் சிவத்துடன் சேர்க்கும் சர்வபூத்தமணி - உயிர்களிலெல்லாம் ஒன்றி உடன் கலந்து நின்று, அவற்றின் புண்ணிய பாவங்களை அகற்றுவிக்கும். பலப்பிரதமணி - சூரியனிடத்தில் பதிந்து நின்று தீய கிருமிகளை அழித்து, நல்ல பொருள்கள் பெருகி வளர்வதற்கு ஆக்கம் அளிக்கும். பலவிகரணி - சந்திரனிடத்தில் நிலைபெற்ற அமுதத் துளிகளைச் சொரிவித்துப் பயிர்பச்சைகளும் உயிர்த் தொகுதிகளும் தழைத்துச் செழித்தோங்க உதவி செய்யும் கலவிசரணி - வானத்தில் இருந்த எல்லாப் பொருள்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னிற் கலந்து இணைய இடம் தந்து நிற்கும். காளி - காற்றின்கண் இனிது கலந்து பிராணமயமாய் விளங்கி, உயிர்களுக்கு நலம் விளைவிக்கும். இரவுத்திரு - நெருப்பின் கண் தங்கி அதற்கு வெப்பம் அளித்து நிற்கும். சேட்டை - நீரில் நிலைபெற்று அதற்றுகுக் குளிர்ச்சியையும் சுவையையும் உண்டாக்கும். வாமை - மண்ணில் விளங்கி ஐம்பூதங்களின் இயல்புகளும் செயல்களும் நிகழுமாறு செய்யும்.

சக்தி - தத்துவ நோக்கு

தனக்கு நிலைக்களமான பரப்பிரமத்தின் வெளித்தோற்றமே சக்தி என வழங்கப் படுகிறது. சக்தியை முக்குணங்களின் காமியாவஸ்தை என்றும் அவ்வியக்தம் என்றும் மூலப் பிரகிருதியான மாயையென்றும், சத்தான பிரமத்திற்கும் அசத்தான பிரபஞ்சத்திற்கும் விலட்சணமானது என்றும் கூறுவர். அதன் பொருள் யாவற்றையும் இயற்றும் திறமை என்பதாகும். இத்தன்மை வாய்ந்த சக்தியானது சத்துவ குணத்தையடைந்தால் காப்பாற்றும் சக்தியெனவும், இராசத குணத்தையடைந்தால் சிவராசிகளைப் படைக்கும் சக்தியெனவும், தாமத குணத்தையடைந்தால் அழிக்கும் சக்தியெனவும் அழைக்கப்பெறும். இதனால் மும்மூர்த்திகளின் ஆற்றல்களும் சக்திக்கு உண்டென்பது அறியவேண்டிய தத்துவமாகும். சக்தியைத் த்ததுவ நோக்கில் உணர்ந்து உபாசிக்கும் சாக்தர்கள் தம் வழிபாடு கடவுள் மனத்தால் நினைக்கவோ ,கண்ணால் காணவோ, இலக்கணங்களால் தெரிவிக்கவோ முடியாத சிறப்புடையது அப்பாலுக்கு அப்பாலான நிலையினையுடைய அரும்பொருளாக மதிக்கின்றனர். தொடக்கம் சக்திநடுநிலைமை, முடிவு என்ற மூன்றும் அற்றதாக அப்பொருள் இரிப்பினும், பெரும்பாலும் சக்தி என்ற பெண்ணாலான சொல்லினாலே பக்தியுடன் வழங்கப் படுவதால் அது பெண்பாலாகவே கருதப்படுகிறது. பக்தர்களின்...

சாக்த மதம்

இந்து மத்தத்தில் சிறப்பாகச் சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம்,கௌமாரம்,சௌரம் என ஆறு சமய வழிபாடுகள் உண்டு. சக்தியை சிவபெருமானுக்குத் தேவி என்றும், திருமாலுக்குத் தங்கை என்றும்,கணபதி முருகன் ஆகியோருக்குத் தாய் என்றும் கூறுகின்ற புராணப் போக்குகளால் இந்து சமயங்கள்களிடையே நிலவ வேண்டிய ஒற்றுமை புலப்படும்.இதனை உணரவேண்டுவது மக்களின் கடமையாகும். சக்தி வழிபாடு காஷ்மீரத்தில் சஷிரா பவானியும், மகாராட்டிரத்தில் துளஜா பவானியும், குஜராத்தில் அம்பாஜியும் உத்திரப்பிரதேசத்தில் விந்தியாவாசினியும், வங்களாத்தில் காளியும், அசாமில் காமரூபியும், மைசூரில் சாமுண்டீஸ்வரியும், கேரளத்தில் பகவதியும், காஞ்சியில் காமாட்சியும், மதுரையில் மீனாட்சியும், தில்லையில் சிவகாமியும், திருவாரூரில் கமலாம்பிகையும், திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியும், திவண்ணாமலையில் உண்ணாமுலையம்மையும், திருக்கடவூரில் அபிராமியும் பெருஞ் சிறப்புடன் வழிப்படுகின்றனர். காசி விசாலாட்சியும் தென் கோடியில் கன்னியாகுமரியம்மனும் அம்பிகை வழிபாட்டிலே ஒருமைப்பாட்டின் நிலைக்களங்களாக விளங்குவதைக் காணலாம். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அம்மையின் அருள் தலங்கள் சக்த...