இடுகைகள்

பழமொழிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழமொழி

பாம்பும் கீரியும் போல இத்தொடர் இன்றும் வழக்கில் இருப்பதைக் காணலாம். தீராத பகை கொண்ட இருவரைக் குறிப்பிடும் போது அவர்கள் இருவரும் எப்பொழுதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள் என்று கூறுவது வழக்கம். இன்றைக்கும் பாம்புக்கும் கீரிக்கும் இடையே சண்டை நடைப்பெறுவதைக் கிராம்புறங்களில் காணலாம்.இச் சண்டையில் சில நேரங்களில் பாம்பு இறக்கும் சில நேரங்களில் கீரி இறப்பதும் உண்டு.எப்பொழுதாவது மட்டும் இப்படி நிகழும். பொதுவாக பாம்பு மனிதனைக் கொத்தினால் இறந்துவிடுகிறான் . ஆனால் பாம்பு கீரியைக் கொத்தினால் இறப்பதில்லை பெரும்பாலும் காரணம், மனித மூளையில் தகவல்களை அனுப்பக்கூடிய அணு மூலக்கூறு ஒன்று உள்ளது.பாம்பு கொத்துவதால் மனித உடலினுள் கலக்கும் நஞ்சு இம்மூலக்கூற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.இதனால் மனிதன் இறக்கின்றான். இதே மூலக்கூறுகள் பாம்பு ,கீரி இவற்றிற்கு ஒன்று போலவே இருக்கும்.மேலும் கீரியின் உடலில் ஒரளவிற்கு நஞ்சு எதிர்ப்புத் தன்மை இருக்கும்.இதனால்தான் அதிக நஞ்சற்ற பாம்புகள் கொத்தினால் கீரி இறப்பதில்லை.ஆனால் நஞ்சு மிகுந்த பாம்புகள் கொத்தினால் கீரிகள் இறந்து விடும். பாம்பால் கொத்தப்பட்ட கீரி நஞ்சினை ...

பழமொழி

பாவிக்குப் பாம்பு கண் இப் பழமொழிக்குப் பொருள் நியாயத்திற்கும்,உண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர்களைக் குறிக்கும். பாம்புக்கு கண்ணிருந்தாலும் அது தனது உணர்திறத்தாலேதான் பிறவற்றைக் கண்டுணர்கின்றது.அதனால் தான் இதனை உவரையாக கூறி பழமொழி கூறியுள்ளனர். (ஊர்வனவற்றில் பாம்பிற்கு மிகவும் வேறுப்பட்ட கணமைப்புக் காணப்படும்.கண்களுக்கு இமைகள் இருப்பதில்லை.இமைகள் வளர்கருவில் பயனிழந்து நினையில் காணப்பெறும்.கண்ணின் மேல் இமை இணைச்சவ்வினால் இழுத்தவாறு மூடியிருக்கும்.)

பழமொழி........

படம்
மிளகு சிறுத்தாலும் வீரியம் போகுமா?(கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?) என்ற பழமொழிக்குப் பொருள் ஒருவரின் குள்ள உருவத்தினைக் கொண்டு அவரை எடை போடகூடாது என்பதாகும்.தோற்றத்தை வைத்து எந்த முடிவுக்கும் வரகூடாது என்பதாகும். இதனையே வள்ளுவர் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பர்.மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு என்ற வழக்கு தொடரும் இப்பொருளினையே உணர்த்தும். சிறுமையான தோற்றமுடைய மனிதனுக்கு மிளகும்,அவன் திறமைக்கு மிளகின் வீரியமும் ஒப்பு நோக்கப்படுகின்றன.மிளகு சிறுத்தாலும் வீரியம் போகுமா?போகாது குறையாது.வீரியம் என்று இங்கு சுட்டபெறுவது மிளகின் காரமாகும்.மிளகு அளவில் சிறிதாக இருந்தாலும் அதன் வீரியம் குறையாதது .இதன் மூலம் யாரிடமும் எத்திறமையும் ஒளிந்திருக்க கூடும் எனப் புலப்படுகின்றது.

பழமொழி

கீழேயுள்ள பழமொழி அனைத்துக்கும் ஒரே பொருள். சினத்துடன் இருக்கும் ஒருவனிடம் மேலும் சினத்தை ஊதி பெரிதாக்குவது என்பதே. இப்படிதான் சிலர் இடம், பொருள், தெரியாமல் நடந்து கொள்கிறார்கள். 1 . எரிகிற இடத்துல சுக்கை வைத்து ஊதினாற் போல. 2 . எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல் . 3 . எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக் கொள்ளி ? 4 . எரிகிற கொள்ளியில எந்த கொள்ளி நல்லது ? 5 . எரிகிற கொள்ளியை ஏற தள்ளினது போல். 6 . எரிகிறது நெஞ்சு சிரிக்கிறது வாய் . 7 . எரிகிறதை இழுத்தால் கொதிக்கிறது அடங்கும் . 8 . எரிகிற நெருப்புல எண்ணெய விடலாமா ? 9 . எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி . 10 . எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அடக்கலாமா ? 11 . எரிகிற புண்ணில் எண்ணெய் விட்டது போல . 12 . எரிகிற புண்ணில் புளி இட்டது போல. 13 . எரிகிற விளக்கானாலும் தூண்டிகோல் ஒன்று வேண்டும். 14 . எரிகிற விளக்கில் எத்தனை ஏற்றினாலுத் குறையுமோ ? 15 . எரிகிற வீட்டில் சுருட்டுக்கு எண்ணெய் கேட்டான். 16 . எரிகிற வீட்டில் பிடுங்குறது ஆதாயம் . 17 . எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்டநாள் பார்த்தது போல. 18 . எரிக்கு...

பழமொழி

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் விடாப்பிடியாக உதைத்தால், குற்றம் புரிந்த குற்றப் பரம்பரையினர் பெரும்பாலும் உண்மை உரைப்பர் என்று கூறுவதைவிட,குற்றம் புரிந்தவர்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு உண்மையை வரவழைக்க முடியும் என்பதே பொருத்தமாக உள்ளது. கேள்விமேல் கேள்வி கேட்க்கும் பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாகக் கூறி உண்மையைக் கூறிவிடுவர் என்பது இன்று நாம் காணும் உண்மை.

அரசன்

அரசன் எப்படியோ அப்படியே குடிகள் அரசனுக்கஞ்சி வலியார் எளியார்க்கனு கூலமாக்கிறது. அரசனும் ஆண்டியாவான்,ஆண்டியும் அரசனாவான். அரசன்ன்று கொன்றால் தெய்வம் நின்று கொள்ளும். அரசன் நினைத்த அன்றே அழிவு. எழுத்தறிந்த மன்ன்ன் கிழித்தெரிந்தான் ஓலை. கொடுமையான அரசன் கீழிருப்பதைப் பாக்கிலும் கடுமையான கீழ் புலியின் இருப்பது நன்று. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி. மீந்த சுண்ணாம்பையும்,மெலிந்த இராசாவையும் கைவிடல் ஆகாது. வளைந்த மூங்கில் அரசன் முடிமேல்,வளையாத மூங்கில் கழைக்கூத்தர் காலின் கீழ். அரசனுடைமைக்கு ஆகாசவாணி சாட்சி. அரசனைக் காட்டிக்கொடுப்பது அமைச்சனுக்குத் தர்ம்மல்ல. அரசனை நம்பி புருசனைக் கைவிட்டாள். அரசனில்லாப் படை வெட்டுமா? கோவுக்கழகு செங்கோன் முறைமை.

பழமொழி

'இலையும் பழுப்பும் எங்கும் உண்டு' வாழ்க்கை இன்பம் துன்பம்,ஏற்றத்தாழ்வு நிறைந்தது என்னும் கருத்தை இப் பழமொழி உணர்த்துகின்றது.இன்ப நிலைக்கு இலையின் இயல்பான தோற்றமும் துன்பநிலைக்கு இலையின் பழுப்பேறிய தோற்றமும் ஒப்புமை கூறப்பெற்றுள்ளன.

பழமொழி-அதிஷ்டம்

1. அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம். 2. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. 3. பால் குடிக்கப் பாக்கியம் இல்லாதவன் பால் வாங்கினானாம்.அதையும் பூனை குடித்ததாம். 4. ஆசை இருக்குகிறது தாசில் பண்ண,அதிஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க. 5. இடுக்கிறவள் புடைக்கிறவள் இங்கே இருக்க எட்டிப்பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள். 6. கொடுக்கிற தெய்வம் கூறையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும். 7. ஏர் பிடித்தவன் என்ன செய்வான்,பானை பிடித்தவள் பாக்கியம். 8. குபேரன் பட்டனம் கொள்ளைபோனாலும் அதிர்ஷ்ட வீணனுக்கு அகப்பைக் காம்பூ அகப்படுமா? 9. சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கேடனுமில்லை,ஐப்பசி மாததில் பிறந்த அதிர்ஷ்டவானுமில்லை. 10 அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். 11. சனியன் புடிச்சவளுக்குச் சந்தைக்குப் போனாலும் புருசன் அகப்படமாட்டான். 12. ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்,பலரைக் கொன்றவன் பட்டமாள்வான். 13. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்திலே சனி,ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்திலே ராசா. 14. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை. 15. அவிசாரியானாலும் முகராசி வேண்டும்.

பழமொழி-அதிகாரம்

௧. அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியையும் உடைக்கும் ௨. தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டும் ௩. மாமியார் உடைத்தால் மண்குடம் ,மருமகள் உடைச்சா பொன்குடம் ௪. வழியே போய் வழியே வந்தால் அதிகாரி செஙெகோல் என்ன செய்யும். ௫. ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார் இடம் கொடார்கள். ௬. அம்மான் வீட்டு வெள்ளாட்டியை வடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா? ௭. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்,செய்கிறவனுக்கு தலைச்சுமை. ௮. தகப்பனுக்கு கட்டக் கோவணமில்லை,மகன் தஞ்சாவூர் மட்டும் நடைபாவாடை போடச் சொன்னானாம். ௯. நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு இரண்டாடு கேக்குமாம். ௧0. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டான். 11. நாற்கலம் கூழுக்கு நானே அதிகாரி. 12. வீடு வெறும் வீடு வேலுர் அதிகாரம். 13. தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம். 14. அதுதான் இராயர் கட்டளையாய் இருக்கிறதே. 15. அரி என்கிற அச்சரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம்.

பழமொழி

நம் கிராமத்து மொழிகளில் முக்கிய இடம் பழமொழிக்கு உண்டு.பழமொழியின் சிறப்பை உணர்த்தவே எழுந்த நூல் பழமொழி நானூறு.இன்று வழக்கில் பழமொழிகள் பயன்படுத்துதல் குறைந்து கொண்டு வருகின்றன.அவற்றையெல்லாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.அச்சிறு முயற்சியாக நம் முன்னோர் அச்சம் தொடர்பாக பயன்படுத்திய பழமொழிகளைக் கீழே தருகிறேன்.தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பிலும் வரும். ௧. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ௨. மடியிலே கனமிருந்தால் வழியிலே பயம். ௩. முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம். ௪. முட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை இடிப்பார்களா? ௫. அச்சமற்றவன் அம்பலம் ஏறுவான். ௬. அடிக்கிற காற்றுக்கும்,பெய்கிற மழைக்கும் பயப்படு. ௭. இடிக்கொம்புகாரன் கோழிக்குஞ்சு சத்தத்திற்கு அஞ்சுவானா? ௮. என்றும் பயப்படுதலினும் எதிரே போதல் உத்தமம். ௯. கரடி கையிலுதைபட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால் பயம். ௧0. நயத்திலாகிறது பயத்திலாகாது. ௧௧. பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா? ௧௨. கள்ளன் அச்சம் காடு கொள்ளாது. ௧௩. கிளி பிடித்த்தோ,புலி பிடித்த்தோ? ௧௪. அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான். ௧௫. விழுந்த...