'இலையும் பழுப்பும் எங்கும் உண்டு' வாழ்க்கை இன்பம் துன்பம்,ஏற்றத்தாழ்வு நிறைந்தது என்னும் கருத்தை இப் பழமொழி உணர்த்துகின்றது.இன்ப நிலைக்கு இலையின் இயல்பான தோற்றமும் துன்பநிலைக்கு இலையின் பழுப்பேறிய தோற்றமும் ஒப்புமை கூறப்பெற்றுள்ளன.
மனித வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது ’குழந்தைகளிடமிருந்தும் சரி உடல்,உள்ளம்,ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்’ என்பர். கல்வி ’வாழவின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் விளங்குவது’ எனக் கல்வியின் சிறப்புரைப்பர் அரிஸ்டாட்டில். நுண்ணறிவுப் பயிற்சியோடு மனத் தூய்மையையும் ஆன்மீக நெறியையும் கற்பிப்பது கல்வி என மொழிவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். இக் கட்டுரை மேம்பட்ட செம்மையான மானுடவாழ்விற்குத் தோன்றாத் துணையாகத் திகழும் சிறப்புமிக்க இக்கல்வி தமிழகத்தில் வளர்ந்தநிலையினைத் தமிழ் இலக்கிய சான்றுகளுடன் குறிப்பாக செவ்விலக்கியமாகத் திகழக்கூடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றிச் சான்றுகளை மையமிட்டு அமைந்துள்ளது. காட்டுமிராண்டியான மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுப்பிய ஒலி கருத்துடன் கூடியதல்ல. இந்நிலையில் மற்றவர்களின் துணையை நாடிய போது கூடி வாழும் நிலை ஏற்பட்டது.அப்போதுதான் ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள
சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும் சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள். பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை, அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார். 'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று. 'விருந்து தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237) என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். இல்லற நெறி 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும் பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும். தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது. \ 'வி
வாழ்க்கையின் நெறியை ,வாழும் முறையை நல்லந்துவனார் கலித்தொகைப் பாடலில் மிக அழகாக வடித்துக்கொடுத்துள்ளார்.வாழ்க்கை என்பது எப்படியெல்லாம் வாழ்வது என்பதில்லை,இப்படிதான் வாழவேண்டும் என்பதை வரையறுத்துக் கொண்டு வாழ்வது.அவ் வாழ்க்கை கலையினை அறிந்து நாம் வாழ்ந்தால் மண்ணுலகம் பொன்னுலகமாக மாறும்.அவ்வாறு வாழும் கலையைக் கொண்டு இலங்குவது தான் சங்க இல்க்கியப் பாடல்கள்.இதோ .......படியுங்கள் இல்வாழ்க்கை வாழுகிறேன் என்பதன் பயனே பொருள் அற்ற வறியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியினைச் செய்தல். ஒன்றைப் பாதுகாத்தல் என்பது கூடியவரைப் பிரியாமல் இருப்பது தான். மக்களுக்குரிய உயர்ந்த பண்பு என்பது உலக ஒழுக்கம் அறிந்து நடத்தலே. அன்பு என்பது தன் சுற்றத்தாருக்கு தீங்கிழைக்காமல் இருத்தல். அறிவு என்பது என்ன தெரியுமா? அறியாமல் ஒருவர் நம்மிடம் தவறான சொற்ளைப் பயன்படுத்தி பேயுகிறார் என்றால் அதனைப் பொறுத்து போதல் தான். உறவு என்பது நெருக்கமுடையவர்கள் கூடியவர்களின் சொற்களை மறுக்காது இருத்தல். நிறை என்பது பிறரைப் பற்றி சொல்லக்கூடாத செய்திகளைப் பிறர் அறியாமல் காத்தல். முறை என்பது நமக்கு வேண்டியவர் தவறு இழைத்தால் இவர் நம்மவர் தானே
கருத்துகள்