இடுகைகள்

டிசம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தாண்டே வருக.....

படம்
பொன்னொளி பூக்க பிறக்கும் புத்தாண்டே வருக! வாழ்வில் வசந்தம் தருக ! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்புடன் கல்பனா சேக்கிழார்

தேங்காய் எதற்கு தெரியுமா?.

ஒருமுறை கரந்தை கவிஞரான வேங்கடாசலம் பிள்ளை ஒரு நாள் தன நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கும் போது, " திருமணத்தில் ஏன் தேங்காய் போட்டு தாம்பூலம் கொடுக்கிறார்கள் தெரியுமா ? " என்று புதிராக கேள்விக்கணையைத் தொடுத்தார்.காரணம் தெரியாது நண்பர்கள் விழிக்க, நகைப்புடன் அதற்கான விளக்கத்தை அவர் பாணியிலேயே கூறினார். " தேங்குதல் என்றால் தங்குதல் என்று பொருள்.தேங்காய் என்றால் இவ்விடத்தில் தங்கியிருக்காதே என்று பொருள்.திருமண வீட்டில் நம் கையில் தேங்காயைக் கொடுத்து விட்டால் போய்வாருங்கள் என்று கூறுவதாகப் பொருள் " என்று விளக்கமளிக்க அங்கு கூடியிருந்த நண்பர்கள் அவரின் நயமானப் பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தனர்.

அங்கே போகாதே....

உளவியலின் தந்தை என்று போற்றப்படுபவரான சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒருமுறை தன் மனைவியுடனும் மகனுடனும் வெளியே சென்றார். குழந்தையை சற்று விளையாட விட்டு விட்டு ஃபாராய்டும் அவர் மனைவியும் தீவிரமாக எதைப் பற்றியோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.பேசிகொண்டு இருந்த ஆர்வத்தில் விளையாடிக்கொண்டு இருந்த மகனை கவனிக்க மறந்தனர். அவர்களுடைய உரையாடல் முடிந்து விளையாடியப் பையனைத் தேடினால் காணவில்லை.இருவரும் சேர்ந்து குழந்தையை எங்கே போயிருப்பான் என்று சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தனர்.கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தன் மனைவியைப் பார்த்து ஃப்ராய்ட் கேட்டார்," நீ அவனை ஏதாவது ஒரு இடத்திற்குப் போக வேண்டாம் என்று கூறினாயா?" என்று கேட்டார். "ஆமாம் ! அருகில் உள்ள நீருற்றுன் பக்கத்தில் மட்டும் போகாதே என்று சொன்னேன்!" என்றார். இருவரும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது,நீருற்றின் அருகே அவர்களது மகன் விளையாடிக் கொண்டிருந்தான்.இதைக் கண்ட அவரது மனைவிக்கு ஒரே ஆச்சரியம்! " இங்கே தான் அவன் இருப்பான் என்று எப்படி யூகித்தீர்கள் " , என்று தன் கணவனைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அவர் சொன்னார்" நம

சொற்பொழிவு

படம்
இன்று அண்ணமலைப் பல்கலைக்கழத் தமிழியல் துறையில் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் பெயரில் தொடங்கப்பெற்றுள்ள அறக்கட்டளையின் சார்பில் பேராசியர் ப.மருதநாயகம் சொற்பொழிவாற்றினார். காலையில் துறைத்தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்கள் தலைமைதாங்க தமிழின் செவ்வியல் தகுதிகள் என்னும் தலைப்பில் பேரா.ப.மருதநாயகம் கருத்துரையாற்றினார். பிற செவ்வியல்மொழி இலக்கியங்களில் இல்லாத சிறப்பு தமிழில் உள்ளவற்றையும்,தமிழின் சிறப்பினை மேலைநாட்டார் எடுத்துக் கூறிய திறத்தினையும் எடுத்துரைத்தார். பன்மொழி வல்லுநராகத் திகழும் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் பிறமொழிகளோடு தமிழினை ஒப்பிட்டுத் தமிழ் மொழி உயர்ந்த ;பிறமரபுகளுக்குக் கடன்படாத ; தன்னளவில் நிறைவு கொண்ட ஒரு மொழி என்று கூறியதை எடுத்துக்காட்டினார். இவர் தமிழின் பால் கொண்ட காதலால் புறநானூற்றினையும் ,கம்பராமாயணத்தில் ஒரு காண்டத்தினையும் மொழிப்பெயர்ந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இவருக்கு சமஸ்கிரும் பயிற்றுவித்த இங்கால்ஸ் என்பவர் சமஸ்கிருத மொழியினையும் அதன் இலக்கியத்தினையும் ஆராய்ந்து சமஸ்கிருத்தில் உள்ள சில கவிதை மரபுகள் வேறு எங்கிருந்தோ வந்துள்ளது என்று ஆராய்ந்த

தேவதை இதழில்....

படம்
டிசம்பர் மாதம் வெளியான தேவதை இதழில்(16 -31 ,2009) வலையோடு விளையாடு என்னும் பகுதியில் என்னுடைய வலைப் பதிவினை அறிமுகம் செய்துளார்கள்.அதனோடு வலைப்பகுதியில் இடம் பெற்று இருந்த சில பகுதிகளை நவநீதன் அவர்கள் தொகுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கும் தேவதை இதழின் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விளக்கு.....விளக்கு...

பொதுவுடமைத் தோழர் ப.ஜீவானந்தம் ஒரு முறை ஒரு மண்டபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டுருந்தார் அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக மின் தடை ஏற்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த மக்களில் பலர் விளக்கு விளக்கு என்று குரல் எழுப்பினர். அந்த இருட்டிலும் ஜீவா அவர்கள் நகைச்சுவையுடன் ' தோழர்களே ! நான் உங்களுக்குப் பல செய்திகளை விளக்குவதற்காக வந்திருக்கின்றேன்.இத்தனை நேரம் உங்களுக்கு அவைகளை விளக்குவதற்காக உரையாற்றி வருகின்றேன்.எரிந்த விளக்குகள் வராவிட்டால்கூட,நான் உங்களுக்கு விளக்குவேன்.ஆகவே,அணைந்து போன விளக்கு பற்றி கவலைப்படாமல் நான் விளக்குவதைக் கேளுங்கள் ' என்று கூறினாராம். உடனே கூட்டத்தில் இருந்து சிலர் விளக்கு இல்லை என்றால் நீங்கள் விளக்குங்கள் என்று குரல் கொடுத்தனர்.

வால்காவிலிருந்து கங்கை வரை.....

நீண்ட நாட்களாக படிக்கவேண்டும் எண்ணிக்கொண்டிருந்த நூல் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூல். அண்மையில் அந்நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.கோவை சென்றிருந்த பொழுது தோழி மணிமேகலை நூலினைக்கொடுத்தார். இந்நூலினை கண.முத்தையா அவர்கள் தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்துள்ளார்கள்.இதுவரை இந்நூல் 28 பதிப்புகளைக் கண்டுள்ளது. தமிழ்ப்புத்தகாலயம் வெளியீடாக வந்துகொண்டு இருக்கின்றது. நூலின் நுவல் பொருள் கதையாக இருந்தாலும்,கற்பனையாக இருந்தாலும்,ஒரு சமுதாயம் என்பது இப்படி தான் உருவாக்கியிருக்க வேண்டும் என்னும் கருதுகோளை வைத்துக்கொண்டு அதனை நோக்கியே நகர்த்திச் செல்லுகின்றார் ஆசிரியர். தனி மனிதன் மட்டுமல்லாமல் ஒரு சமுதாயத்தின் படிநிலைகளையும் ,சமுதாயத்தில் மெல்ல மெல்ல நிகழ்ந்ந மாற்றத்தினையும் சுட்டிக் காட்டுக்கொண்டே செல்லுகின்றார். இந்நூல் புனைவாக இருந்தாலும் தர்க்க ரீதியாக,வரலாற்று நோக்கிலும் சில உண்மைகள் முன்வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. 20 தலைப்பில் கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. ஆரம்பக் கதைகளான நிஷா,திவா,அமிர்தாஸ்வன்,புருகூதன் என்ற நான்கு கதைகளும் கி.மு.6000 இல

சர்வதிகாரியாக நேரு...

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கொடிகட்டிப் பறந்த காலம்.நேருவை எதிருத்து ஒருவார்த்தை சொல்லவும் ஒருவருக்கும் துணிவில்லை.எதிர்க் கட்சிகலும் வலுவிழந்திருந்தன.அதிகாரிகளும்,மற்ற தலைவர்களும் அவர் சொல்வதற்கெல்லாம் 'ஆமாம்'போட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கல்கத்தாவிலிருந்து வெளியான ஆங்கில இதழ் ஒன்றில் ஒரு எழுத்தாளர் துணிச்சலாக இப்படி எழுதியிருந்தார்.'நேருவின் போக்கு சர்வதிகாரத்தனமாய் போய்க்கெண்டிருக்கின்றது.நாளை அவர சர்வாதிகாரியாய் மாறினால் அவரைத் தட்டிக் கேட்க எவருமில்லை'. இந்த செய்தியைப் படித்த அரசு அதிகாரிகள்,ஆலோசகர்கள் துள்ளிக்குதித்தனர்.உடனடியாக அந்த செய்தித்தாளின் 'கட்டிங்' ஒன்றை நேருவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.'இந்த ஆளை சும்மாவிடக் கூடாது என்று அவர்கள் கோபமாக கூறினர். நேரு அவர்களைப் பார்த்து 'என்னைப் பற்றி இந்த எதிர்ப்புக் கருத்தாவது வந்ததே! இதை நான் பார்த்துக் கொள்கின்றேன்.நீங்கள் போகலாம்' என்று அனைவரையும் அனுப்பி விட்டு அந்த ஃபைலைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டார். எழுதியவர் மீது அவர் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஏனெனில்,புனைப்

4-4-71 கல்கியில்.........

4-4-71 இல் வெளிவந்த கல்கி இதழில் வெளியான செய்தி.யு.எஸ்.ஐ.எஸ் நூலகத்தில் நடந்த உரையாடலின் குறிப்பு . வாலிபர் ஒருவர் அங்கிருந்த நூலகரிடம் சென்று,நான் அமெரிக்கா போக இருக்கின்றேன்.அமெரிக்காவைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவதற்கு நான் என்னென்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார். அதற்கு நூலகர் பின்வருமாறு பதில் அளித்தார். 'நண்பரே ,உங்களுக்கு அமெரிக்காவைப் பற்றி எவ்வளவு தெரியும் என்பதில் அமெரிக்கர்களுக்கு அக்கறை கிடையாது.அந்நாட்டைப் புரிந்துகொள்ளவதற்கு தானே நீங்கள் போகின்றீர்கள்? உங்கள் நாட்டைப் பற்றி உங்களிடமிருந்து தெரிந்து கொள்வதில் தான் அமெரிக்கர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும்.ஆகவே இந்தியாவைப் பற்றிய புத்தங்களை நிறையப் படித்துக் கொண்டுபோனால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

காந்திக்குச் சட்டை

ஒருமுறை மாகாத்மாகாந்தி ஒரு பள்ளிக்குச் சென்றிருஃந்தார்.காந்தியைக் கண்டதும் மாணவர்கள் எழுந்து நின்று வணங்கினார்கள்.காந்தி சட்டைப்போடாமல் இருந்ததைக் கண்ட ஒரு சிறுவன் 'பாபு! உங்களுக்குச் சட்டைக் கிடையாதா? என் அம்மா அழகான சட்டைத் தைத்துத் தருவார்கள் .உங்களுக்கும் ஒரு சட்டை தைத்துத் தரட்டுமா?' என்று வெகுளிஃத்தனமாக துணிச்சலுடன் கேட்டுவிட்டான். ஆசிரியர்களும் அதிகாரிகளும் காந்தி என்ன நினைப்பாரோ என்று பதறினபோனார்கள். காந்தியடிக்ள சிரித்துக்கொண்டே 'தம்பி எனக்கு 40 கோடி சகோதரர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு சட்டை தைத்துத் தர உன் அன்னையால் முடியுமா? அப்படியானால் நானும் சட்டைப் போட்டுக் கொள்கின்றேன்'என்றார். இதைக் கேட்ட சிறுவன் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் திகைத்து நின்று விட்டான். இப்படி இன்றுள்ள அரிசியல் வாதிகளைக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்?

ஓஒ...இனிதே....

ஏடெடுத்தேன் எழுத எனை எழுதென்றது வான் என்பான் பாரதிதாசன்.எழுதவேண்டுமென வந்தவுடன் எனை எழுது என்றது குறள்.ஒரு அழகான குறள். களவு காலம் அப்பொழுது விழி முந்து கொண்டு தலைவனைக் கண்டு இன்புற்று,அவனைக் கண்டு நாணியது.கண்ணோடு கண் நோக்கிய பிறகு காதல் வளர்ந்தது.அது கற்பில் முடிந்தது. திருமணம் நடந்து விட்டது.தலைவன் பொருள் காரணமாக அவளை விட்டு பிரிந்து செல்கின்றான்.அவன் வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற காலமும் வந்து விட்டது.ஆனால் தலைவன் வரவில்லை. உடனே அவளுடைய உடல் பசலை கொள்கின்றது.இணவு உட்செல்லவில்லை.கண் கலங்குகின்றது.உடனே தலைவி கண்ணைப் பார்த்து கூறுகின்றாள்.நீ தானே முதலில் அவரைக் கண்டாய்.நீ பார்த்ததால் தானே எனக்கு இந்த நிலை நன்றாக அழு உனக்கு வேண்டியது தான் என்கின்றாள். பாருங்களேன் அந்த குறளை. ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது.

சிஷ்யன் என்றால்...

சிறுகதை இலக்கியத்தில் புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியவரும்,சிறுகதையின் தந்தை என்று போற்றப்படுபவருமான புதுமைப்பித்தனைச் சந்திக்க ஒரு புதிய எழுத்தாளர் ஒருவர் வந்தார்.வந்தவருக்கு எப்படியாவது புதுமைப்பித்தனைப் பாராட்டி,குளிர்வித்துவிடவேண்டும் என்று நினைப்பு ஏற்றபட்டது.அவருக்கு நன்றாக அறிமுகமில்லாத அந்த புதிய எழுத்தாளர்,புதுமைப்பித்தனைப் பார்த்து,ஐயா! நான் உங்கள் சிஷ்யன் உங்களைப் பின்பற்றி எழுதுகின்றேன் என்றார். உடனே புதுமைப்பித்தன் அவரைப் பார்த்து கடுப்பாக சொன்னார் ,'நண்பரே! சிஷ்யன் என்றால் என்ன என்று தெரியுமா? சிஷ்யன் என்று கூறாதீர்கள் என்றார். புதிய எழுத்தாளருக்கு குழப்பமாகிவிட்டது.ஏன் இவர் சிஷ்யன் என்று கூறவேண்டாம் என்கின்றார் என்று எண்ணிக்கொண்டு இருந்தார். அவர் எண்ணத்தை உணர்ந்த புதுமைப்பித்தன் 'சிஷ்யன் என்றால் மண்டையில் மாசாலா இல்லாதவன் என்று பொருள்' என்றாரே பார்க்கலாம். அந்த புதிய எழுத்தளார் முகத்தில் அசடு வழிய சொல்லாமல் கொள்ளாமல் நழுவி சென்றுவிட்டார்.

சான்றோர் சிந்தனைகள்

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும். விளைவுகளை வைத்துதான் செய்லகளின் சிறப்பை மதிப்பிட முடியும். ஆரோக்கியமான மனிதர்களும் ஆரோக்கியமான நாடும் நிகழ்காலத்து நடவடிக்கைகளில் தெளிவாகவும் ,திட்பமாகவும் செயல் பட்டு வருங்காலத்தை நோக்க வேண்டும். என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல; என்ன செய்கிறாய் என்பது தான் முக்கயம் .ஆகவே உறுதியான உள்ளமும்,நன்னடத்தையில் வலிமையும் நேர்மையான போக்கும் கொண்டவர்களுக்கு இந்த வையகம்,அளிக்கும் ஏராளமான நல்ல சந்தர்பங்களை எண்ணிப்பார். சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன். நேரு............

உணவு எப்படி இருந்தால் என்ன?

குழந்தைகளின் ராஜாவான ரோஜா சூடிய முன்னால் பிரதமர் ஜவர்கலால் நேரு ஒருமுறை சுதந்திரப்போராடத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அப்பொழுது உணவில் ஏராளமான கற்கள் இருந்தன என்று சிறைவாடனிடம் புகார் செய்துள்ளார். சிறைவாடன் நேருவை கிண்டல் செய்யும் முகமாக ' சுதந்திரப் போராட்டக் கைதியாக நீங்கள் வந்திருக்கிறீர்கள் .உங்களுக்கு உணவில் கல் இருப்பது பெரும் பிரச்சனையா? இந்த நாட்டை நேசித்து தானே நீங்கள் இங்கு வந்தீர்கள் என்று நான் நினைத்தேன் ' என்றார். நேரு அவருக்குச் சரியான பதிலடி கொடுக்க எண்ணி 'நாங்கள் எங்களது நாட்டையும் மண்ணை நேசிக்கின்றோம் என்பது உண்மையே ! அதனால் தான் அந்த மண்ணைத் தின்பதற்கு நாங்கள் விரும்பவில்லை ! என்றார்.

ஆட்டுக்குத் தூரோகம்

சர்தார் வல்லபாய் பட்டேல் ஒருமுறை காந்தியைச் சந்திக்க சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றிருந்தாராம்.அப்பொழுது காந்தி உண்வருந்தும் வேளை.அவருடன் பட்டேலும் சாப்பிட்டாராம்.உணவில் வேப்பிலைச் சட்டினியும் இருந்தாம். அதனைக் கண்ட பட்டேல் காந்தியடிகளைப் பார்த்து ஏன் பாபுஜி! உங்களுக்கு எப்போதும் பாலைத் தந்துக்கொண்டிருக்கும் வெள்ளாட்டுக்கு நீங்கள் இப்படி துரோகம் இழைக்கலாமா? என்று கேட்டாராம். காந்தியும் என்னவோ ஏதோவென்று பதறிபோய் , 'நான் என்ன துரோகம் செய்தேன்? விளக்கமாகச் சொல்லுங்கள் !' என்று பட்டேலிடம் கேட்டாராம். அதற்கு பட்டேல் சொன்னாராம் ' பாபுஜி அவர்களே ! நீங்கள் இது நாள் வரை வெள்ளாட்டின் பாலை மட்டும்தான் உணவாக எற்றுக்கொண்டு இருந்தீர்கள்! ஆனால் , இப்போது வெள்ளாடு விரும்பி உணவாக உண்ணும் வேப்பிலையும் அல்லவா நீங்கள் உண்ணத்தொடங்கிவிட்டீர்கள்! இது வெள்ளாட்டுக்கு நீங்கள் செய்யும் துரோகம் ஆகாதா? என்று கேட்க அதனைக் கேட்ட காந்தி கலகலவெனச் சிரித்தாராம்.