கல்வி என்பது...
தொடக்க கல்வியிலிருந்து உயர்நிலை கல்வி வரை நாம் பின்பற்றும் முறைகள் சரியாகத்தான் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. கிட்டத்தட்ட இரண்டே முக்கால் வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிடுகின்றோம். அவர்களின் குழந்தைமையைப் பற்றி கவலை கொள்வதே கிடையாது. குழந்தைகள் பள்ளிக்கூடங்கள் சென்று அந்த வயதில் நிறைய கற்றுக்கொள்ளுவார்கள் ஒழுக்கம் வரும் என்பது பெற்றோர்களின் நினைப்பாக உள்ளது. அதனை கல்வி நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளுகின்றன. சிறந்த கல்விமுறை கொண்ட நாடாகவும் மகிழ்ச்சியான நாடாகவும் ஐக்கிய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு பின்லாந்து. இங்கு கல்விக்கட்டணம் கிடையாது. கல்விக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மருத்துவ பல் மருத்துவ வசதிகளும் செய்து கொடுப்பதுடன் உளவியல் நிபுணர்களும் ஆசிரியர்களும் மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்துகின்றார்களாம். அத்துடன் மாணவர்கள் ஏழு வயதில் தான் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஒருநாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றனவாம். ஆண்டுக்கு மாணவர்கள் 670 மணி நேரம் பள்ளியில் கற்றலில் ஈடுபடுகிறார்கள். பள்ளியில்...