இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இகிரு (வாழ்தல்)

படம்
  மனித மனத்தின் நுண்ணுணர்வை திரைமொழியாக்கும் ஜப்பானிய இயக்குநர் அகிரா குரேசவாவின் படம் இகிரு. பணியாற்றும் காலத்தில் பிறருக்கு எந்த வகையிலும் பயன்படமால் முப்பது ஆண்டுகளாக அரசு பொதுப்பணித்துறையில் விடுப்பே எடுக்காத, தொடர்ந்து பணிப்பாதுப்பை மட்டுமே முன்னிருத்தி எப்பொழுதும் வேலை செய்துகொண்டிருப்பது போல தோற்றத்தைக் கொடுத்து, தலைமை அலுவலராக உயர்ந்து, சில மாதங்களில் ஒய்வு பெற இருக்கும் நிலையில், குடல் புற்று நோயால் சில மாதங்களில் இறந்துவிடுவோம் என்று தெரியும் போதும் தன் மகனால் புறக்கணிக்கப்படும் நிலையில் ஒரு மனிதன் எப்படியான முடிவை நோக்கி நகர்வான் என்பதையும்   அதனூடாக அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செயல்பாடுகளையும்   பேசுகிறது இகிரு . படத்தின் தொடக்கத்தில் ஒரு ஊடுகதிர் (எக்ஸ்ரே) காட்டப்படுகிறது. பின்னணியில் நமது கதாநாயகனுக்கு வயிற்றில் புற்று நோய் என்பதை அறியாமல். தன் பணியில் முழுமையாக செய்து கொண்டிருக்கிறார் என ஒலிக்கிறது.   கதாநாயகன் வடனபே பொதுப்பணித்துறையில் தற்போது தலைமை அதிகாரியாகப் கடந்த முப்பதாண்டுகளாகக் கடமையே கண்ணாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க...

வள்ளுவம் இதழ் (1999 – 2003)

படம்
    வள்ளுவம் இதழ் இரு திங்கள் இதழாக சனவரி பிப்ரவரி 1999 இல் தொடங்கப் பெற்றது. பண்புடையார்ப் பட்டுண்டு உலகு என்னும் தொடரை முதன்மைபடுத்தி வள்ளுவம் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 22 இதழ்கள் வெளிவந்துள்ளன.   சிறப்பாசிரியர் பேராசிரியர் ச. மெய்யப்பன். ஆசிரியர்கள் பல்லடம் மாணிக்கம், பேராசிரியர் இ. சுந்தமூர்த்தி, நெறியாளுகை குழு பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியம், புலவர் இரா. இளங்குமரன், பேராசிரியர் தி. முருகரத்தினம், மருதமுத்து, ஆசிரியர் குழு க.ப. அறவாணன், ஈரோடு தமிழன்னபன், இரா. இளவரசு, பா. வளவனரசு, சு. சண்முகசுந்தரம், இன்குலாப், கி. நாச்சிமுத்து வடிவமைப்பு இராம. கண்ணப்பன், வே. கருணாநிதி, ஒவியர் ட்ராஸ்கி மருது, பல்லடம் மாணிக்கம்   பண்பாட்டு ஆய்வு மையம் வழியாக வெளிவந்துள்ளது. ஐந்தாவது இதழில் (செப்டம்பர்- அக்டோபர், 1999) ஒவியர் ட்ராஸ்கி மருதுவுடன் மாரிமுத்து, புகழேந்தி இணைந்துள்ளனர். இதழ் வடிவாக்கம் வசந்தகுமார் என்று உள்ளது. 7வது இதழில்(சனவரி- பிப்ரவரி 2000) ஓவியர் மாரிமுத்து மட்டும் இடம்பெறுகிறார். வடிவமைப்பில் வே. கருணாநிதி மட்டு...