பால் அரசியல் தாய்ப்பால் - புட்டிப்பால் - மாட்டுப்பால் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்

பால் குறித்த விவாதங்கள் அண்மை காலத்தில் மேற்கிள ம்பியுள்ளன. அனைத்திலும் கலப்படம் என்ற சூழல் இன்று நிலவுகிறது. நூகர்வோருக்குப் பெரும் சவாலான காலகட்டமாக இருக்கிறது. எந்த பொருளை நம்பி வாக்குவது என்ற புரியாத நிலை. ஒவ்வொரு செயல்களுக்குப் பின்னும் நுண் அரசியல் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பால் விற்பனை பெருக்கத்திற்காகச் செயப்படும் அரசியல் மிக ஆபத்தானதாக இருக்கிறது. மனித உணர்வுகள் காயடிக்கப்படுகின்றன. இதனுள் செயல்படும் தன்மையை தக்க தரவுகளின் பின்புலத்தோடு பால் அரசியல் என்னும் நூலினை நக்கீரன் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

தன் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரக்கவில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை நிலை அல்ல. எந்தவொரு தாய்க்கும் அவருடைய குழந்தைக்குத் தேவையான அளவுக்குப் பால் சுரக்கும் என்பது தான் இயற்கை. ஆனால் ஒரு தாயை அப்படி நினைக்க வைப்பத்தன் பின்னே மறைந்திருக்கும் அரசியலை அத்தாயே அறியமாட்டார். அது மட்டுமன்றி தாய்ப்பால் சுரப்பதை உண்மையிலேயே குறைக்கச் செய்வதன் பின்னணியில் பெரும் மருத்துவ அரசியல் மறைந்திருக்கிறது.  என்னும் அதிசியூட்டும் உண்மையை இந்நூலில் வெளிப்படுத்துகிறார்.

பால் உருவாக்கும் விதமும், அதனைச் சந்தைப்படுத்துவதற்கு கார்பரேட் நிறுவனங்கள் செய்தும் தந்திரங்களும், அப்ப ப்பா.... எத்தனை சூழ்ச்சிகள் அதற்கெல்லாம் நாம் பலியாடுகள்.

 நம் சுயத்தை இழக்க வைத்து, உளவியல் சார்ந்து அல்லாதவற்றை உண்மை என்றும், அதுவே உடலுக்கு நலம் என்றும், அதுவே உயர்வான செய்ல்பாடு என்றும் நம்மை சிந்திக்க விடாமல் செய்யும் அரசியலை என்னவென்று சொல்வது.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நாம், செயற்கையின் கவர்ச்சியால் மதிமயங்கி கிடக்கிறோம். அதனை தெளிவிபடுத்தும் வேலையை செய்கிறது இந்நூல்.

நக்கீரன்
எதிர் வெளியீடு, சென்னை
விலை -60 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்