விடுமுறை நாட்களும் கழிந்த பொழுதுகளும்

நீண்ட நாள்களாக வலை பக்கத்தில் எழுத முடியாத சூழல் ஏன் இப்படி ஒரு இடைவெளி ஏற்பட்டது என்று கூட தெரியவில்லை. கடந்த 20 நாட்களாக விடுமுறை. திங்களில் இருந்து பல்கலைக்கழகம் திறப்பு.

விடுமுறையில் நிறைய நூல்கள் வாசிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

ஐந்து நூல்கள் மட்டுமே வாசிக்க முடிந்து.

பெருமாள் முருகனின் ஏறுவெயில்,நிழல்முற்றம், கூளமாதாரி,மாதொருபாகன், ஆளண்டாப்பட்சி என அவருடைய புனைகதைகளை ஏற்கனவே வாசித்திருந்தேன். நீண்ட நாள்களாக அவருடைய கங்கணம் வாசிக்க வேண்டும் என நினைத்தேன். இந்த விடுமுறையில் அதற்கான நேரமும் வாய்த்தது.

அவருடைய கதைகளின் ஊடே பயணிக்கும் போது வெவ்வேறு விதமான மனிதர்கள் வேவ்வேறு விதமான தேவைகள், அதனை நோக்கி தேடல் என்னும் நிலையில் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாசிப்பனுபவம்.

கங்கணத்தை அணியப்போகும் நாள் எந்நாளோ எனத் தவித்துகிடக்கும் திருமண வயது கடந்த ஒருவனின் ஆதங்கம், துடிப்பு, வலி அதனால் தோன்றும் வக்ர எண்ணம் என விரிந்து செல்கிறது பெருமாள் முருகனின் கங்கணம்.
 கதைக்கான  நிலம், அதன் ஆளுமைகள், மொழி  நம்மை வசிகரிக்கின்றன.







கருத்துகள்

muththu இவ்வாறு கூறியுள்ளார்…
Hi akka ...ur expression about book ,stimulate me to. Read it...by muththu
muththu இவ்வாறு கூறியுள்ளார்…
Hi akka ...ur expression about book ,stimulate me to. Read it...by muththu

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்