மனித வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது ’குழந்தைகளிடமிருந்தும் சரி உடல்,உள்ளம்,ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்’ என்பர். கல்வி ’வாழவின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் விளங்குவது’ எனக் கல்வியின் சிறப்புரைப்பர் அரிஸ்டாட்டில். நுண்ணறிவுப் பயிற்சியோடு மனத் தூய்மையையும் ஆன்மீக நெறியையும் கற்பிப்பது கல்வி என மொழிவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். இக் கட்டுரை மேம்பட்ட செம்மையான மானுடவாழ்விற்குத் தோன்றாத் துணையாகத் திகழும் சிறப்புமிக்க இக்கல்வி தமிழகத்தில் வளர்ந்தநிலையினைத் தமிழ் இலக்கிய சான்றுகளுடன் குறிப்பாக செவ்விலக்கியமாகத் திகழக்கூடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றிச் சான்றுகளை மையமிட்டு அமைந்துள்ளது. காட்டுமிராண்டியான மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுப்பிய ஒலி கருத்துடன் கூடியதல்ல. இந்நிலையில் மற்றவர்களின் துணையை நாடிய போது கூடி வாழும் நிலை ஏற்பட்டது.அப்போதுதான் ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள
சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும் சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள். பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை, அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார். 'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று. 'விருந்து தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237) என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். இல்லற நெறி 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும் பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும். தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது. \ 'வி
இப்பொழுது கோபம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றோம் அல்லவா? அச்சொல்லுக்கு பல பெயர்கள் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றன.கோபம் என்னும் சொல் சங்க நூல்களில் இந்திரகோபப் பூச்சிகளைக் குறிதனவே ஒழிய சினம் என்பதைக் குறிக்கவில்லை.பிற்காலத்தில் தான் சினம் என்பதற்கு கோவம் கோபம்,என்ற சொல்லட்சிகள் வழக்கில் வந்தன. கோபம் என்பதே சரியான சொல்வழக்கு.அனால் பேச்சு வழக்கில் கோவம் என்று கூறுகின்றோம். சங்க இலக்கியத்தில் கதம்,சீற்றம்,சினம்,வெகுளி முதலிய சொற்கள் கோபத்தை உணர்த்தும் சொற்களாகப் பயின்று வந்துள்ளன.அச்சொற்கள் எல்லாம் ஒரே பொருள் உடையன போல் இருந்தாலும் இவற்றுள் சிறு வேறுபாடு உண்டு. கதம் --- இச்சொல் இளஞ்சூட்டைக் குறிக்கும். கோபம் வந்தால் உடலில் சூடும் தோன்றுகிறது அல்லவா? கோபப்படுபவரைப் பார்த்து எதற்கு இதற்கெல்லாம் சூடாகிறாய் என்று இன்றும் நாம் வழக்கில் கூறுகின்றோம் தானே.சிறு கோபம் கொண்டு உடலில் இளஞ்சூடு பரவுவதற்குக் கதம் என்று பெயர்.உடல் எப்பொழுதும் வெதுவெதுப்பாக காய்ந்து கொண்டு இருப்பதால் அதனைக் காயம் என்று கூறுகின்றோம். சீற்றம் --- பாம்பு சீறுவது போல வெகுண்டெழுவது.கோபம் அதிகமாவது. வெகுளியும் சி
கருத்துகள்