இயற்கையே தெய்வம்

இயற்கையைப் பாடி இன்புறாத கவிஞர்களே இல்லை எனலாம்.இயற்கையில் இறைமையைக் கண்டவர்கள் தான் கவிஞர் ஆனார்கள்.சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் இயற்கையின் தன்னமையினை அதனோடு கலந்து,அதன் மடியில் தவழ்ந்தனவாகத் தான் இருக்கும். கார்லைன் இயற்றகை எழிலை எடுத்துக்காட்டுவது இலக்கியம் என்பர்(Literature is an apocalypse of Nature)இயற்கையைப் போற்றும் வோட்ஸ்வொர்த் இயற்கை மனிதனுக்கு அனைத்தும் கற்றுத் தருகிறது ,நீதிப்புகட்டுகிறது என்பான்.

ON IMPULSE FROM A VERNAL SOAD
MAY TEACH YOU MORE OF MAN
OF MORAL EVIL AND OF GOOD
THEN ALL THE SAGES CAN
கீட்ஸ் என்ற கவிஞனும்

A thing of beauty for ever
என்றும்,

Beauty is truth,Truth Beauty
என இயற்கையின் அழகை வனப்பை போற்றாத கவிஞர்கள் இல்லை.
`சங்க இலக்கியப் புலவர்கள் ,
கைபுனைந்து இயற்றா கவின்பெறு அழகு என்பார்கள்.

பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்தவா யாம்பல்
கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள்
எருவை நறுந்தோ டெரியிணர் வேங்கை
உருவமிகு தோன்றி ஊழிணர் நறவம்
பருவமில் கோங்கம் பகைமல ரிலவம்
நிணந்தவை கோத்தவ்வை நெய்தவை தூக்க
மணந்தவை போல வரைமலை யெல்லாம் நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும்
விடியல் வியனவானம் போலப் பொலியும்
நெடியாய்நின் குன்றின் மிசை (பரிபாடல்,19.75-84)

இப்பாடலில் இயற்கையில் இறைமையைக் காணுகின்றார் புலவர்.

இயற்கையை இன்று எப்படி போற்றுகின்றோம் எங்கும் செயற்கை மண்டிவிட்டது.இயற்கையை நின்று அதன் சுவையைப் பருக நேரமில்லை.ஒடிக்கொண்டே இருக்கின்றோம்.அதனை காக்கவும் முற்படுவதில்லை.இயற்கையோடு இணைந்த வாழ்வே வாழ்வு.அதனை வாழ இயற்கையிற் இறைமையைக் காண முயற்சிக்கலாமே.

கருத்துகள்

புலவன் புலிகேசி இவ்வாறு கூறியுள்ளார்…
கோவில்களுக்கு செய்யும் செலவை இது போன்ற இயற்கையை காக்க செய்தால் மனிதனின் ஆயுலாவது நீளக்கூடும்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க புலிகேசி நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே......இயற்கை நம் ஆயுளை நீட்டிக்கும்,செயற்கை குறைக்கும் இதனை ஏனோ மறக்கிறோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
"கீட்ஸ் என்ற கவிஞனும்

A thing of beauty for ever"

keats wrote like this

A thing of beauty is a joy for ever

dont do this ara kurai velai. dont try to show off.
மங்கை இவ்வாறு கூறியுள்ளார்…
அமுதனின் வலைசரத்தில் உங்களின் அறிமுகம் கண்டேன்...

//ஒடிக்கொண்டே இருக்கின்றோம்.அதனை காக்கவும் முற்படுவதில்லை.இயற்கையோடு இணைந்த வாழ்வே வாழ்வு.அதனை வாழ இயற்கையிற் இறைமையைக் காண முயற்சிக்கலாமே.//

உண்மை தான்...இந்த அலட்சியமும், நேரம் தவறிய செயல்பாடும் மனித இனத்தை எங்கே கொண்டு போய் விட போகுதோ தெரியவில்லை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்