சான்றோர் சிந்தனைகள்


தேவைகள் குறையக்குறைய,ஆன்மசுகம் பெருகிக்க கொண்டே வந்து சேரும்.தெய்வத் தன்மை உன்னருகே வந்து சேரும்.

உண்மையின் முகம் அழகுடையது .கம்பீரமானது.உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன் .உண்மை அறிவதொன்றே என் விருப்பம்.

பெண்களால் உலகத்தை அழிக்கவும் முடியும் ஆக்கிகாட்டும் வல்லமையும் அவர்களிடத்தில் நிறையவே உண்டு.

நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்.

உனது அறிவு ஆற்றல் உனக்கு மட்டும் சொந்தம் அல்ல .பகிர்ந்து கொள்ளக்கூடியது.சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் அதனைப் பொதுவுடமையாக்கிவிட்டால்,தனிமனித தேவைகளும்,ஆடம்பர வாழ்க்கையும் குறைந்து போகும்.

-------------சாக்ரட்டீஸ்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
யோசிக்க வேண்டிய சிந்தனைகள்
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
thanks for such an useful post, quote