இடுகைகள்

மார்ச், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணாமலைப் பல்கலைக்கழத் தொலைதூரக்கல்வி தமிழ்ப்பிரிவில் கருத்தரங்கம்

படம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி தமிழ்ப்பிரிவின் சார்பாக இன்று சிற்றிலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் மூன்று தொகுதிகள் வெளியிடப்பெற்றன.மொத்தம்154 பேராளர்கள் கட்டுரை வழங்கியுள்ளனர். கட்டுரையாளர்கள் அமர்வில் கட்டுரைகளை வழங்கினர்.நாளையும் இக்கருத்தரங்க அமர்வுகள் தொடரும், மாலை நிறைவு விழா நிகழும்.

அரசர் முத்தைய வேள் ஆய்வரங்க நிறைவு விழா

படம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அரசர் முத்தையா வேள் ஆய்வரங்கம் தொடங்கப் பெறும்.இவ் ஆய்வரங்கம் மாணவர்கள் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் களமாத் திகழ்கின்றது.இந்த ஆண்டும் இவ்வாய்வரங்கம் தொடங்கப்பெற்று மாணவர்கள் தங்களது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினர்.அதன் நிறைவு விழா 30-3-2009 அன்று நடைபெற்றது. நிறைவுவிழாவில் மாண்பமை துணைவேந்தர்,பதிவாளர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . துறைத்தலைவர்&மொழிப்புல முதன்மையர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக தமிழகம் அறிந்த பேரறிஞர் பழ.கருப்பையா கலந்துகொண்டு காலமெனும் நதியினிலே கவிதை ஓடம் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.சங்க இலக்கியம் முதல் இன்று வரை செய்யுள் என்னும் கவிதைகள் வடிவம் பாடுபொருளிலும்,வடிவத்திலும் எவ்வாறு மாறுதல் அடைந்து வந்துள்ளன என்பதை எடுத்துரைத்தார்.திரைப்பட பாடலைப் பற்றி குறிப்பிடும் பொழுது பழைய பாடல்கள் மெதுவா தொடலாமா மேனியில் கை படலாமா என பெண்ணிடம் ஆண் அனுமதி வாங்கினான்.ஆனால் இப்பொழுது பெண் கட்டிப் புடி கட்டிப்புடிடா கண்டப்படி கட்டிப்புட

மேலைமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

ஆசிய மொழிகளில் பர்மியம் யு.மியோதாண்ட் (1964) சீனம் சிங்க உசி குலா சென்லயன் (1967) புசிலாமா (1978) அரபி முகமது யூசப் கோகன் (1976) ஜப்பானியம் மாத்சூனகா (1981) சிங்களம் மிசிகாமி (1961) சார்லஸ் தேசில்வா (1964) ருஷ்யன் யூரி கிலோ சோஷ் கிருஷ்ணமூர்த்தி (1963) அராப் இப்ராகி மோவ் (1974) மலாய் ராம்லி பதைக்கீர் (1964) உசேன் இஸ்மாயில் (1967,1977) ஐரோப்பிய மொழிகளில் போலிஷ் உமாதேவி வாண்டி தைநோவுசுகி (1958) ஸ்வீடிஷ் ஒய்.எங்கியா பரிகோம் (1972) இத்தாலியன் அந்தோணியா சோரென்றினோ (1985) ஆர்மினியன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை (1978) பிஜூ சாமுவேல் பெர்விக் (1964) செக் கமில் சுவலபில் (1952-1954) டச்சு காத்து (1964) பின்னிஷ் பெண்டி ஆல்தோ (1972) ஸ்பானிஷ் ஜி.அருள் (இன்பத்துப்பால்) லத்தீன் வீரமாமுனிவர் (1730) சார்லஸ் கிரால் (1856) -----(1860) ஜெர்மனி காமர்ஸ் (1803) ப்ரடிரிக் ரூக்கெர்த் (1847) வில்லியம் & நார்கேற்று (1856,66) கார்ல்கிரால் (1865) ஆல் பிரெக் & லலிதாம்பாள் (1977) பிரெஞ்சு -----(1767) ஏரியல் (1848,52) தூமாஷ் (1854,59) லெடிரா (1867) லாமாயிர்ஷ் (1867) லூயிசகோலியற்று (1867,76) பாரியிதே பாந்தேயினு

இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கபட்ட அற இலக்கியம் திருக்குறள்.இந்நூலை முதன்முதலில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் வீரமாமுனிவர்.1730-ஆம் ஆண்டு இவர் இலத்தின் மொழியில் திருக்குறளை மொழிபெயர்ந்தார். அதன்பிறகு பலவேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. மலையாளம் 1. கிருஷ்ண வைத்தியன் (1863,1984) 2. அழகாத்துக்குருபு (1875) 3. நீதிபதி கோவிந்த பிள்ளை (1915) 4. ராமசாமி ஐயா (1938,1941) 5. தாமோதரன் பிள்ளை (1951) 6. ராமகிருஷ்ணபிள்ளை (1957) 7. கோபால குருபு (1960) 8. பாலகிருஷ்ணநாயர் (1963) 9. பரமேஸ்வரன் (1966) 10. தாமோதரன்(சிறுவருக்கான பதிப்பு) (1966) 11. ரமேஷன் நாயகர் (1998) தெலுங்கு 1. களபர்த்தி வேங்கட வித்தியாநந்தநாதா (1887,1894) 2. சோக்கம் நரசிங்கலு நாயுடு (1892) 3. இலக்கும் நாராயண சாஸ்திரி (1905) 4. சீராமுலுரெட்டி (1948) 5. சக்கண்ண சாஸ்திரி (1952) 6. ராதாகிருஷ்ணசர்மா சால்வா (1954) 7. சாலய்யா (1955) 8. சிரபதி சாஸ்திரி (1966) 9. கோபாலராவ் 10. எல்லூர் சீரகரிமல்லா 11. சத்தியநாராயணா 12. ஸ்ரீராமலிங்ஙாச்சார்யா கன்னடம் 1. பி.எம்.சீர்கந்தையா (1940) 2. ப.குண்டப்பா (1955,1960) 3. ஸ்ரீகண்டைய
படம்
கருத்தரங்கில் பேரா.தி.நெடுஞ்செழியன்,பேரா.ப.டேவிட் பிரபாகர்,பேரா.மா.கணேசன்

கணினி மற்றும் இணையத்தமிழ் கருத்தரங்கம்

படம்
பெரம்பலூர் பாரதிதாசன் கல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 20,21-3-2009 ஆகிய இரண்டு நாள்கள் கணினி தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.இரண்டாம் நாள் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு வலைப்பூ உருவாக்கம் குறித்து ,பேராசிரியர் கணேசன் அவர்களின் தலைமையில் கட்டுரை வழங்கினேன்.இந்நிகழ்வால் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்,பேராசிரியர் ப.டேவிட் பிரபாகர்,பேராசிரியர் நா.ஜானகிராமன் போன்றோரைக் கண்டு , கலந்து பேச வாய்ப்பு ஏற்பட்டது. மேலும் நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்களையும் சந்தித்து க்கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது. கருத்தரங்கில் கலந்து கொண்டோர்.

இளைய சமுதாயமே சிந்திப்பீர்

இளமைப் பருவத்தில் நமக்கு கிடைக்கும் நண்பர்களைப் பொறுத்து அமைகிறது நம்முடைய வாழ்க்கை.எனக்குத் தெரிந்த ஒரு பையன் நல்லவனாகத்தான் இருந்தான்.கல்லூரி விடுதியில் தங்கி படித்தபொழுது தவறான நண்பர்களின் சேர்க்கையால்,தன் மதியிழந்து புகை,போதைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டுவிட்டான். அவனது வாழ்வு கேள்விக் குறியானது.இளைய சமூதாயமே சிறிது சிந்திப்பீர்.அறிவு கெடுக்கும் செயல்களை விடுத்து ,ஆக்கச் செயல்களில் ஈடுபடுங்கள்.அதற்கு நல்ல சிறந்த மனிதர்களைத் தேர்ந்து கொண்டு ,அவர்களின் வழி பின்பற்றும் பொழுது,எதிகால வாழ்க்கை ஒளிமயமாகத் திகழும்.பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல நல்லோர் தொடர்பு நாளும் நன்மையைக் கொடுக்கும்.

கடலூரில் இணையப் பயிற்சி

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி 17.03.2009 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.30 மணி வரை நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் சார்ந்த கிளை நூலகர்கள்,ஊர்ப்புற நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கொண்டனர்.பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்கள் இணையம்,மின் நூலகம்,மின் இதழ்கள்,தமிழ் இணைய வளர்ச்சி குறித்த பயிற்சி வழங்கினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் திரு சி.அசோகன் அவர்களும் மாவட்ட மைய நூலகர் திரு.சு.பச்சையப்பன் அவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

உலா நூல்கள் அகர வரிசையில்

1. அப்பாண்டைநாதர் உலா 2. அவிநாசி உலா - அருணாச்சலக்கவிராயர் 3.அழகிய நம்பிஉலா 4.ஆளுடைபிள்ளையார் திருவுலாமாலை - நம்பியாண்டார் நம்பி 5. இராசராசன் சோழன் உலா - ஒட்டக்கூதைதர் 6.உண்மையுலா 7.ஏகாம்பரநாதர் உலா - இரட்டையர் 8.கடம்பர் கோயில் உலா 9.கயத்தாற்றரசன் உலா - அந்தகக் கவிவீர்ராகவ முதலியார் 10.கனகசபை நாதன் உலா - அம்மையப்பர் 11. காமராசர் உலா - அ.கு.ஆதித்தன் 12.காளி உலா 13.கீழ்வேளூர் உலா - அந்தக்கவி வீர்ராகவ முதலியார் 14.குலசை உலா 15. குலோத்துங்கன் உலா - ஒட்டக்கூத்தர் 16. குன்றக்குடி சண்முகநாதர் உலா - சிலேடைப்புலி பிச்சுவையர் 17. கோடீச்சுர உலா - சிவக்கொழுந்து தேசிகர் 18. சங்கர சோழன் உலா 19.சங்கரன் நயினார் கோயில் சங்கரலிங்க உலா 20.சிலேடை உலா - தத்துவராயர் 21.சிவசுப்பிரமணியர் திருமுகவுலா - கபாலமூர்த்திப் பிள்ளை 22. சிவத்தெழுந்த பல்லவராயன் உலா - படிக்காசுப் புலவர் 23. சிறுதொண்டரை உலா 24. செப்பறை உலா - அழகிய கூத்த தேசிகர் 25. சேயூர் முருகன் உலா - சே றைக் கவிராசப்பிள்ளை 26. சேனைத்தேவர் உலா - 27. ஞான உலா - சங்கராச்சாரியார் 28. ஞான உலா - சுவிசேடக்கவிராயர் வேதநாயக சாஸ்திரி 29. ஞானவிநோதன் உலா - தத்துவராய

உலாவின் வளர்நிலை

தமிழ் இலக்கிய உலகு காலந்தோறும் பல்வேறு இலக்கிய வகைகளைக் கண்டுள்ளது. அவற்றுள் சிற்றிலக்கியங்கள் காலத்துக்கு ஏற்றார் போல பாடுபொருள்,வடிவம்,சுவையுணர்வு போன்றவற்றில் மாற்றம் பெற்று வந்துள்ளன.தொல்காப்பியர் காலத்தில் அரும்பிய இச் சிற்றிலக்கியங்கள்,நூற்றாண்டு தோறும் அரும்பி, பல்வேறு வண்ண மலர்களாக மலர்ந்து மணம் பரப்பி வருகின்றன.அவ்வாறு மலர்ந்த சிற்றிலக்கிய வகைகளைப் தொண்ணூற்றாக கூறுவர் படிக்காசுப் புலவர்.இதனை இவர் பாடிய பல்லவராயன் உலா என்னும் நூலில் , “தொண்ணுற்றாறு கோலப்ர பந்தங்கள்” என்று குறிப்பிடுவதில் இருந்து அறியமுடிகின்றது.இவருக்குப் பின் தோன்றிய வீரமா முனிவரும் தமது தொன்னூல் விளத்திலும்,சதுரகராதியிலும் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களையே வரையறைப் படுத்துகின்றார்.பிரபந்த மரபியலும், “பிள்ளைக் கவிமுதல் புராண மீறாத் தொண்ணூற்றாறு எனும் தொகையாம்” இவ்வரையறை இயம்புகின்றது.ஆனால் பின்னால் தோன்றிய பாட்டியல் நூல்கள் பலவும் தம்முள் வேறுபாடு கொண்டுள்ளன.சிதம்பரம் பாட்டியல் அறுபத்திரண்டு எனவும், இலக்கண விளக்கப் பாட்டியல் அறுபத்தெட்டு எனவும் பிதபந்த தீபிகை தொண்ணூற்றேழு எனவும் சிற்றிலக்கியங்களின் வகைகளை

சங்க இலக்கியக் கரூவூலம்

படம்
தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட சங்க இலக்கியக் கரூவூலம் நற்றிணை,ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து,புறநானூறு ஆகிய நூல்களுக்கு உரை வேந்தர் ஔவை சு,துரைசாமிப் பிள்ளை அவர்கள் உரையும்,பத்துப்பாட்டு,அகநானூறு,பரிபாடல் ஆகிய நூல்களுக்கு ஈழத்துத் தோன்றல் நா.சி.கந்தையா அவர்களின் உரையும்,கலித்தொகை,குறுந்தொகைக்கு சக்திதாசன் சுப்பிரமணியனார் அவர்களின் உரையும் தொகுத்து ௧௪ தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர் தமிழ்மண் பதிப்பகத்தார்.இறுதியாக உள்ள 15வது தொகுதி ஆய்வாளர்களுக்கு மிகப் பயணளிக்க கூடியது.

அண்ணாமலைப் பல்கலைகழகத் தமிழியல்துறை

படம்

தமிழ்மண்

படம்
பதிப்புத் துறையில் கால் பதித்து வெற்றி கண்டோர் பலர். ஆனால் தமிழ் உணர்வோடு ,மொழிப் பற்றோடு பதிப்புத்துறையில் ஈடுபட்டவர்கள் மிகக் குறைவே. தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன் அவர்கள் தமது மொழி உணர்வாலும்,இன உணர்வாலும் ஈக்கப்பட்டு,தமிழுக்குத் தொண்டு செய்யும் நோக்குடன் பல அரிய பணிகளைச் செய்து வருகிறார்கள். நம் தமிழ் மண்ணின் பெருமையை,மொழியின் திண்மையா,இலக்கியச் செறிவினை, வெளிகொணர்ந்து ஆவணப்படுத்தும் எண்ணத்தில் தமிழில் எழுந்த நூல்களையெல்லாம் திரட்டி தொகுப்பு நூலாக்கி தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கிவருகிறார். தஞ்சை மண் ஊருக்குப் படியளந்து,உறவுக்குக் கை கொடுத்த மண் மட்டுமல்ல.தமிழ் வளர்த்த மண்.எத்தனையோ தமிழறிஞர்களை உருவாக்கிய மண்,பல கலைகளுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கிய மண்.இப்பெருமை மிகு தஞ்சை பகுதியில் தோன்றியவர் கோ.இளவழகனார்.03.07.1948 ஆம் ஆண்டு உரத்தநாடு வட்டம்,உறந்தையராயன் குடிக்காடு என்னும் ஊரில் திருமிகு அ.கோவிந்தசாமி,திருமதி அமிர்தம் அம்மையார் இணையருக்கு மகவாய் தோன்றினார். 1965 இல் பள்ளி மாணவராக இருந்த காலத்தில் இருந்தே மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டு ,மொழிப்போராட்டங்களில் தீவிரமாகப் பங்கே

கருத்தரங்க செய்தி

படம்
கருத்தரங்க செய்தி05-03-2009 வியாழன் அன்று திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில்தமிழ்த்துறைச் சார்பாக “இணையத்தில் தமிழ்” என்ற காட்சி விளக்க தொடர்பானகருத்தரங்கம் ந்டைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லுரியின் முதல்வர்கு.அன்பரசு, சுய நிதிப்பாடப்பிரிவின் பொறுப்பு பேராசிரியர் முனைவர்மதியழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமித்துறைத்தலைவர் திருஇரா.மாணிக்கவாசகன் முன்னிலை வகித்தார். இணையத்தில் தமிழ் என்ற கருத்தரங்கில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர்துரை.மணிகண்டன் இணையம் என்றால் என்ன?அதனின் தொற்றம் வளர்ச்சி பற்றிவிரிவாகக் கூறினார்.1995 ஆம் ஆண்டு சிங்கபூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர்கோவிந்தசாமி அவர்களால் முதன்முதலில் இணையத்தில் தமிழை ஏற்றம் பெறவைத்தவர் என்ற செய்தியைக் குறிப்பிட்டார். தமிழ் இணைய இதழ்களின் தோற்றமும்,வளர்ச்சியும் குறித்துக்காட்சிவிளக்கமாக எடுத்துக்கூறினார். மேலும் தமிழ் இணையை இதழ்களானமுத்துகமலம்,திண்ணை,பதிவுகள், வார்ப்பு, தமிழ்த்திணை, நிலாச்சாரல்,கீற்று,போன்ற இதழ்களை விளக்கிக்காட்டினார். இவ்விதழ்களுக்குப் படைப்புகளைஎவ்வாறு ஒருங்குறியில் அடித்து அனுப்புவது என்ற விபரத்தையும்எடுத்துக்

நாகலிங்கப் பூ

படம்
இயற்கையில் எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா என வியந்து பாடத கவிஞர்களே இல்லை எனலாம்.இயற்கை அழகினைச் சுவைக்கும் பொழுது நம்மை அறியாமல் ஒரு இன்பநிலை எய்துவதை நாம் உணரலாம்.இயற்கையுடன் இரண்டறக் கலக்கும் பொழுது இறைநிலையை அடையலாம்.நம்முடைய சங்க இலக்கியப் புவர்கள் எல்லாம் இயறைகையோடு இயைந்து வாழ்ந்து,அவற்றை எல்லாம் தங்கள் படல்களில் பதிவு செய்தனர். நம் முன்னோர் இயற்கையை தெய்வமாகவே வணங்கினர்.இயற்கை அனைத்திலும் இறைவன் வீற்றிருப்பதாகப் பாடுவர் கடுவனிள வெயினனார் என்னும் புவர். நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள; நின் தண்மையும் சாயலும் திங்களுள; நின் சுரத்தலும் வண்மையும் மாரியுள; நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்துல; நின் நாற்றமும் ஒண்மையும் பூவையுள; நின் தோற்றமும் அகலமும் நீரினுள; நின் உருவமும் ஒலியும் ஆகாயத்துள; நின் வருதலும் ஒடுக்கமும் மருந்திலுள; நல்லழிசியார் என்னும் புலவர் பரங்குன்றத்தைக் காணுகிறார்,அதன் இயற்கை அழகில் தோய்த்து போகிறார். குன்றத்தில் நடக்க கூடிய ஒவ்வொரு நிகழ்வுகளையும் இயற்கை நிகழ்வகளோடு ஒப்பிடுகிறார். ஒரு திறம் பாணர் யாழின் தீங்குரல் எழ ஒருதிறம் யாணர் வண்டின் இமிரிசை எழ ஒருதிறம் கண்ணன

உன்னநிலை

சங்க கால மக்களிடத்துப் பல நம்பிக்கைகள் இருந்துள்ளதை சங்க பாடல்களின் வழி அறியமுடிகிறது. அவற்றுள் ஒன்று நிமித்தம் காணுதல்.அதாவது ஒரு நல்ல செயலைச் செய்ய செல்லும் முன் நிமித்தம் காணுதல்.நிமித்தம் என்பதற்கு அறிவிப்பது என்பது பொருள். அது நன்மை தீமை இரண்டினையும் சுட்டும்.இதனை தொல்காப்பியம் ஓம்படை எனக் கூறும். அச்சமும் உவகையும் எச்ச மின்றி நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் காலம் கண்ணிய ஓம்படை. இந் நிமித்தங்களுள் உன்ன மரத்தின் முலமாக காணும் நிமித்தம் உன்ன நிமித்தம் எனப்படும். உன்னம் என்பது ஒருவகை மரம் .இதனை இலந்தை மரம் என்றும் கூறுவர்.இதனுடைய இலை சிறிதாகவும் பூ பொன்னிரமாகவும் புல்லிய அடியை உடைதாகவும் இருக்கும்.உன்னநிலைப் பற்றி தொல்காப்பியம் ஓடா உடல் வேந்தன் அடுக்கிய உன்னநிலை எனக் குறிப்பிடுகிறது. இதற்குப் புறங்கொடத சினமுடைய வேந்தனை,உன்னமரத்தொடு சார்த்தி வெற்றி தோல்விகளை அறிவதற்குக் காரணமானது உன்னமரம் என்பது பொருள். புறப்பொருள் வெண்பாமால் இதன் இலக்கணத்தைத், துன்னரும் சிறப்பின் தொடுகழல் மன்னனை இன்னம் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று என்று இயம்பும். சங்க இலக்கியத்தில் உன்னநிலை பற்றிய செய்திகள் பத

முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

படம்
நுங்கள் பாரியைப் பார்த்தேன் முற்றும் சரிதான்.என் அணுக்கராக நீங்கள் இருந்தால் என்னைப் போலவே சொற் பிறப்பு அமைப்பீர்கள் எனத் தேவநேயப்பாவணரால் பாரி என்னும் ஆய்வுக் கட்டுரைக்காகப் பாராட்டப் பெற்று ,அண்மையில் திருச்சி பாவேந்தர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ. அவர்களால் மதிப்புறு முது முனைவர்ப் பட்டமும்,மதுரைப் பல்கலைக் கழகத்தால் செந்தமிழ் காவலர் என்ற பட்டமும் வழங்கப் பெற்று ,தேவநேய பாவணர் வழி நின்று நீடு தோறும் இனியராய் தனித்தமிழ் காவலராய் வாழ்பவர் புலவர் இரா.இளங்குமரனார். 80 வயதை கடந்த நிலையிலும் ஒய்வு இல்லாமல் அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உறுதுணையாக விளங்குகின்றார். 400 மேற்பட்ட நூல்களை தமிழுலக்கு வழங்கி சிறப்புச் செய்துள்ள பெருமகனாரின் பெருமையையும் நுண்ணிய அறிவு நுட்டபத்தையும் இனங்கண்டு கொண்ட பாரதிதாசன் பல்கலைகழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னம்வைக்கோ அவர்கள் செம்மொழி அந்தணர் இளங்குமரனாரை கலைச்சொல்லாய்விற்கும் சொல்லாய்விற்கும் பயன்படித்திக் கொள்ள இசைந்துள்ளார். நெல்லை மாவட்டத்தின் வடக்கு எல்லையும்,முகவை மாவட்டத்தின் தெற்கு எல்லையும் சந்திக்கக் கூடிய இடத