இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பு

படம்
  சரீரத்தால் அடிமைப்பட்டிருப்பதைப் பார்க்கிலும் அறிவினால் அடிமைப்பட்டிருப்பது மிகவும் கொடுமையாகும்                                                                                               பேராசிரியர் ச . வையாபுரிப்பிள்ளை தமிழ்ப் பதிப்புச் சூழலில் ,   பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் அறிமுகமாகிய அச்சு ஊடகத்தின் காரணமாக , சுவடி எழுத்துக்கள்   அச்சு எழுத்துக்களாகப் பதிப்பிக்கப்பட்டன . ஆறுமுக நாவலர் , சி . வை . தாமோதரன் பிள்ளை ,  உ . வே . சாமிநாதையர் போன்றோர்   தமிழ் தொல்சீர் இலக்கண இலக்கியங்களைத் தேடித்தேடி கிடைத்தப் பிரதிகளை ஒப்பு நோக்கி மூலபாடம் இதுவெனத் தெளிந்தும் , பாடவேறுபாடுகளைச் சுட்டியும் , உரைகள் காணப்பாட்டால் உரைகளோடும் பதிப்பித்தனர் . இப்பதிப்புகள் அக்கால பதிப்புமுறைகளை உள்வாங்கி செயல்பட்டிருந்தாலும் ,   ·          தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலையிலும் ·          தமிழியல் ஆய்வுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும் , பதிப்பிக்கப்பட்டிருப்பதை உணரமுடியும் . இருபதாம் நூற்றாண