இடுகைகள்

அக்டோபர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காந்தி வாழ்வில்.................

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்பரான் என்ற இடத்தில்தாகாந்தி முதன் முதலாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வெற்றிப்பெற்றார்.அங்கு வெள்ளைக்காரத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிகள் சார்பாக அவர் போராட்டத்துக்குச் சென்றார்.வெள்ளைக்காரத் தோட்ட முதலாளிகள் அவர் மீது மிகுந்த கோபமாக இருந்தனர். ஒருநாள் நள்ளிரவில் ஒரு வெள்ளைக்காரத் தோட்ட முதலாளியின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார் காந்தி.முதலாளி வெளியே வந்து கதவைத் திறந்தார். முதலாளி நீங்கள் தானே என்று கேட்டார் காந்தி. ஆமாம் நான்தான் ! ஆனால் நீ யாரென்று எனக்குத் தெரியவில்லையே என்றார் முதலாளி.அவர் அதற்கு முன்பு காந்தியைப் பார்த்தது இல்லை. நான்தான் காந்தி என்னைக் கொல்வதற்காக நீங்கள் ஏற்பாடு செய்வதாகக் கேள்ளவிப்பட்டேன்.அதற்காக ஆள்களைத் தேடிக்கொண்டு இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன்.உங்களுக்குத் தொல்லை எதற்கு என்றுதான் நானே நேரில் வந்து உங்கள் முன் நிற்கின்றேன்.இப்போது நீங்கள் என்னைக் கொல்லாம் என்றார் காந்தி. முதலாளி அதிர்ச்சி அடைந்தவராக் உங்களைப் பார்த்தப்பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன் என்று பதில் சொன்னான்.

பட்டத்தினால் என்ன பயன்?

உடல் சுக்காக உள்ளம் சுடரா இடமறிந்து காலமறிந்து உழைத்துக்கொண்டிருந்தால் மண்புழுவுக்குக் கூட மகுடாபிஷேகம் சூட்டலாம் என்பான் ஒரு கவிஞன். ஒருமுறை ஆசாரிய வினோபாபா தாம் பெற்றிருந்து உயர் கல்விக்கான பட்டச் சான்றிதழ்களைத் தீயில் இட்டு கொளுத்தினாராம்.அப்பொழுது அவருடைய தாயர்,அரும்பாடுப்பட்டு படித்துப் பெற்றபட்டங்களை இப்படி தீயிலிட்டுக் கொளுத்துகிறாயேப்பா உனக்கு புத்தி எதுவும் கெட்டுப் போய்விட்டதா?என்று கடிந்து கொண்டாராம். அதைக்கேட்ட வினோபாபா சிரித்துக்கொண்டு அம்மா நாம் எதிர் காலத்தில் வாழப்போவது சுதந்திர பாரதத்தில்,சுதந்திர சர்க்காரில் வெள்ளையர்களால் கொடுக்கப்பெற்ற பட்டங்களுக்கு மதிப்பு இருக்காது.தவிர வெறும் பட்டங்கள் மட்டுமே மனித வாழ்வை உயர்த்திவிடுவதில்லை.கடுமையான உழைப்புத்தான் வாழ்க்கையை உயர்த்தும்.அதனால் வெள்ளைக்காரர்களால் கொடுக்கப்பெற்ற பட்டங்கள் சாம்பலாகிப் போனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றாராம். என்றுமே உழைத்தால் தான் வாழமுடியும்.

சிராப்பள்ளி

படம்
சங்க கால சோழவேந்தரிகளின் தலைநகரமாக செழிப்புற்று விளங்கிய ஊர் உறையூர்(உறைவதற்கு அதாவது வாழ்வதற்றகு ஏற்ற இடமாக இருந்ததால் இப்பெயர் பெற்றது).இன்று உறையூர் பொலிவிழந்து திருச்சியின் ஒரு பகுதியாக இருப்பதைப் பார்க்கின்றோம்(ஒரு காலத்தில் புகழ்பெற்று இருந்த ஊரின் இன்றைய நிலை இது மனிதனுக்கும் பொருந்தும்) சிராப்பள்ளி என்று பின்னால் பெயர் வரக் காரணம் சமயங்களின் தாக்கமே.சமணர்கள் அதிகம் இப்பகுதியில் வாழ்ந்து மக்களுக்கு கல்வி முதலிவற்றைப் போதித்ததால் இப்பெயர் வந்தது என்று கூறுகின்றனர் பள்ளி என்பதற்குப் பொதுவாக வாழுமிடம் இல்லது தங்குமிடம் என்று பொருளுண்டு( பள்ளிவாசல், பள்ளி கூடம்,பள்ளியறை இங்கு வரும் பள்ளிகள் எல்லாம் பக்குவப்படுத்துதல் அல்லது பக்குவப்படுதல் என்ற பொருளில் வரும்) மூன்று தலையை உடைய அசுரன் இங்கு உள்ள இறைவன் வழிப்பட்டமையால் இப்பெயர் வந்தது எனப் புராணங்கள் கூறுகின்றன. சிராப்பள்ளியைப் பற்றி ஆய்வு செய்த தி.வை சாதாசிவபண்டாரத்தார்,கி.பி.5-ஆம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமணதுறவிக்ள தங்கி தவம் புரிந்துக்கொண்டிருந்தனர்.அவர்களுள் சிரா என்னும் பெயருள்ள முனிவர் தலைமை முனிவராக இருந்து ,மற்ற முன

சீலையா சேலையா ?

படம்
இன்று வழக்கில் நாம் கூறகூடிய சேலை என்ற சொல்லட்சி சரியா?(பொதுவாக இப்பொழுது புடவை,அல்லது saree என்பது பெருவழக்காவிட்டது வேறு) எனபதைப் பார்த்தால் அது தவறு என்றே சொல்லத் தோன்றுகிறது.நம் கிராம்புறங்களில் சீலைத்துணி,சீலைக்காரி,சீலையைக் கிழித்துக்கொண்டா திரிந்தேன்,சீலைப்பேன் வழங்கி வருதலைக் காணலாம்(இப்பொழுது இங்கும் படித்தவர்கள் மத்தியில் வழங்கக் கூடிய சேலை என்ற சொல்லதான் சரியெனக் கிராம்புறங்களிலும் இவ்வழக்கு இன்று மாறி வருகின்றது) சீரை என்பது பழஞ்சொல் 'ஆள்பாதி ஆடை பாதி 'என்னும் தமிழ் சொல்லுக்கு மூலமாவது சீரை என்னும் சொல்.ஒருவனுக்கு சிறப்பாக அமைந்தது சீரை எனப்பட்டது. சீரை சுற்றித் திருமகள் பின் செல்ல எனபது கம்பர் வாக்கு.சீலை என்னும் சொல் திரிந்து சீலையாக நின்றது. சீர்த்தி மிகு புகழ் என்பது தொல்காப்பிம்.சிர்த்தி என்னும் பெண்பாற் பெயர் பண்டை வழக்கில் இருந்துள்ளது.சீர்த்தி என்ன்ற சொல்தான் பிற்காலத்தில் கீர்த்தி என வழங்கப்பெற்றது.(இது வட சொல் என்றும் மாற்றினர்) சீரம் என்பது சீரைப் பொருளதே.சீரம் அழகுப் பொருள் தருவது போல் சீலமும் அழிகுப் பொருள் தரும்சிறப்புப் பொருள் தரும்.ஆதலால் சீரை சீலைய

இட்டவி

படம்
நம் தமிழ்நாட்டின் அனைவரும் விரும்பி உண்ணக்கூடியதும்,தொல்லை இல்லாத உணவு எது என்றால் இட்டிலி என்று கூறிவிடலாம்.இந்த பெயர் எப்படி வந்தது என்று சிந்திப்போமா? இட்டலி,இட்லி,இட்டிலி,இட்டெலி என்றெல்லாம் கூறுகின்றோம் இதில் எது சரியென்று எண்ணியிருக்கோமா! இட்லி,இட்டெலி என்று கூறுவதைக்காட்டிலும் இட்டிலி என்று கூறுவதே பொருத்தமுடையது என்பர்.காரணம் 'ட்' என்னும் வல்லினப் புள்ளியெழுத்துக்கு அடித்து அதே உயிர்மெய் வருவதே இலக்கணமுறைமை ஆகையில் இட்டலி என்பது சரியென்பர். கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்கள் செல்லமும் சிறுமியும் என்னும் தலைப்பில் ஒரு பாடல் இயற்றிருப்பார்கள். இட்டெலி ஐந்தாறு தின்றோம் என்பீர் -நீங்கள் ஏதும் கருணை இலீரோ?அம்மா பட்டினியாக இறந்திடினும் -நாங்கள் பாவம் பழிசெய்ய மாட்ட்டோம் அம்மா! செல்வ சீமான் வீட்டுப்பெண்ணொருத்தி தங்கள் வீட்டிலில் இட்டெலி சாப்பிடதைக் கூற,இட்டிலியைப் பார்த்திராத,உண்டிராத ஏழ்மையான சிறுமி இட்டெலி எனபதனை எலி என்று எண்ணி,எலிதான் அவள் உண்டிருக்கின்றால் என்று எண்ணுகிறார்.எலியைத் தின்பதைப் பாவச்செயல் என்றும் கருதுகின்றாள். ஆக இட்டலி,இட்டிலி,இட்டெலி -இம்மூன்று சொற்களிலு

அறுவை கதை

படம்
என்னங்க அறுவை என்றவுடன் உங்களை எதுவும் சொல்லி அறுக்க போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.அறுவை என்றால் துணி என்று பொருள்.தமிழ்நாட்டில் துணியினுடைய பயன்பாடு எப்படி இருந்து எனபதைப் பற்றி தான் பார்க்கப்போகின்றோம்.அதனை அதனுடைய வாயில் இருந்தே கேப்போமா! இன்று எத்தனையோ விதவிதமாய் நான் பவனி வந்தாலும் ,அரம்பத்தில் தமிழ்நாட்டில் பருத்திதுணியா மட்டும் தான் இருந்தேன்.பருத்தி இந்த பகுதியில் நிறைய விளைந்தது.அதனால் நூல்நூற்கும் தொழிலும்,நெசவு தொழிலும்,அதனை விற்றகும் வணிகத் தொழிலும் நன்றாக இங்கு நடைபெற்றது.இங்கு மட்டும் இல்லாமல் என்னை அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளார்கள்.இந்த செய்தி சங்க இல்க்கியத்தின் மூலம் தான் என்னால் அறிந்து கொள்ளமுடிந்து. கல்சேர்பு இருந்த கதுவாய் குரம்பைத் தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி(அகம்,129-6,8) பருத்திவேலி கருப்பை பார்க்கும்,புன்புலந்தழிஇய அங்குடிச் சீறூர்(புறம் 304,7,8) காஞ்சியின் அகத்துக் கரும்பருத்தி யாக்கும் தீம்புனல் ஊரன் (அகம்,156-6,7) பருத்தி வேலிச் சீறூர் மன்னன்(புறம் ,290) கோடைப் பருத்தி வீடு நிறைபெந்த மூடைப்பண்டம் இடை நிறைந்தனன்(புறம் 393;12,13) வில் அடித

மிளகின் கதை

படம்
நான் தாங்க மிளகு என்னைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லாம் என்று இருக்கிறேன்.நான் எவ்வளவு பழமையாவள் என்பது உங்களுக்குத் தெரியுமா?என்னை யார் யார் எல்லாம் விரும்பி வாங்கினார்கள் தெரியுமா?என்னுடை பிறப்பிடம் என்னுடைய சிறப்பு இதுவாது உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள். எதுவுமே ஆதாரத்துடன் சொன்னால் தானே நீங்கள் நம்புவீர்கள்,நான் பழமையானவள் என்பதற்குக் கட்டியம் கூறும் நம்முடைய பழமையான சங்க இலக்கியம்.வாங்க கொஞ்சம் பார்த்துவிட்டு என்னைப் பற்றி சங்க இலக்கியம் என்ன சொல்லுதுனு பார்ப்போம். எனக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறனும் உள்ளது.அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராமப் பகுதியில் கூறுவார்கள்.எல்லா இடத்திலையும் நான் விளைந்து விடமாட்டேன்.மலை சாரல் பகுதிதான் மிகவும் பிடித்த பகுதி. அதனால் தான் முன்பிருந்த சேரநாட்டில் மலைச்சாரல் பகுதியில் வளர்ந்தேன்.அங்கு மட்டும் இல்லாமல் கிழக்கிந்திய தீவுகளாக இருந்த சாவக நாட்டிலும் வளர்ந்தேன்.ஆனாலும் சேர நாட்டில் வளம் மண்ணின் தன்னமையால் நல

பழமொழி

பாம்பும் கீரியும் போல இத்தொடர் இன்றும் வழக்கில் இருப்பதைக் காணலாம். தீராத பகை கொண்ட இருவரைக் குறிப்பிடும் போது அவர்கள் இருவரும் எப்பொழுதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள் என்று கூறுவது வழக்கம். இன்றைக்கும் பாம்புக்கும் கீரிக்கும் இடையே சண்டை நடைப்பெறுவதைக் கிராம்புறங்களில் காணலாம்.இச் சண்டையில் சில நேரங்களில் பாம்பு இறக்கும் சில நேரங்களில் கீரி இறப்பதும் உண்டு.எப்பொழுதாவது மட்டும் இப்படி நிகழும். பொதுவாக பாம்பு மனிதனைக் கொத்தினால் இறந்துவிடுகிறான் . ஆனால் பாம்பு கீரியைக் கொத்தினால் இறப்பதில்லை பெரும்பாலும் காரணம், மனித மூளையில் தகவல்களை அனுப்பக்கூடிய அணு மூலக்கூறு ஒன்று உள்ளது.பாம்பு கொத்துவதால் மனித உடலினுள் கலக்கும் நஞ்சு இம்மூலக்கூற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.இதனால் மனிதன் இறக்கின்றான். இதே மூலக்கூறுகள் பாம்பு ,கீரி இவற்றிற்கு ஒன்று போலவே இருக்கும்.மேலும் கீரியின் உடலில் ஒரளவிற்கு நஞ்சு எதிர்ப்புத் தன்மை இருக்கும்.இதனால்தான் அதிக நஞ்சற்ற பாம்புகள் கொத்தினால் கீரி இறப்பதில்லை.ஆனால் நஞ்சு மிகுந்த பாம்புகள் கொத்தினால் கீரிகள் இறந்து விடும். பாம்பால் கொத்தப்பட்ட கீரி நஞ்சினை

இயற்கையே தெய்வம்

இயற்கையைப் பாடி இன்புறாத கவிஞர்களே இல்லை எனலாம்.இயற்கையில் இறைமையைக் கண்டவர்கள் தான் கவிஞர் ஆனார்கள்.சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் இயற்கையின் தன்னமையினை அதனோடு கலந்து,அதன் மடியில் தவழ்ந்தனவாகத் தான் இருக்கும். கார்லைன் இயற்றகை எழிலை எடுத்துக்காட்டுவது இலக்கியம் என்பர்(Literature is an apocalypse of Nature)இயற்கையைப் போற்றும் வோட்ஸ்வொர்த் இயற்கை மனிதனுக்கு அனைத்தும் கற்றுத் தருகிறது ,நீதிப்புகட்டுகிறது என்பான். ON IMPULSE FROM A VERNAL SOAD MAY TEACH YOU MORE OF MAN OF MORAL EVIL AND OF GOOD THEN ALL THE SAGES CAN கீட்ஸ் என்ற கவிஞனும் A thing of beauty for ever என்றும், Beauty is truth,Truth Beauty என இயற்கையின் அழகை வனப்பை போற்றாத கவிஞர்கள் இல்லை. `சங்க இலக்கியப் புலவர்கள் , கைபுனைந்து இயற்றா கவின்பெறு அழகு என்பார்கள். பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்தவா யாம்பல் கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள் எருவை நறுந்தோ டெரியிணர் வேங்கை உருவமிகு தோன்றி ஊழிணர் நறவம் பருவமில் கோங்கம் பகைமல ரிலவம் நிணந்தவை கோத்தவ்வை நெய்தவை தூக்க மணந்தவை போல வரைமலை யெல்லாம் நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும்

சங்க காலச் சோழமன்னர்கள்

செவ்வியல் பண்புகள் நிறைந்த செவ்விலக்கியமாகத் திகழ்வது சங்க இலக்கியங்கள்.இவ் இலக்கியங்களை அணுகும் போது,மன்னன் உயிர்த்தே மக்கள் வாழ்ந்துள்ளதையும் ,அம்மன்னர்களும் மக்கள் நலங்களைப் பேணி அவர்களுக்கு வேண்டுவன வற்றைச் செய்த்தையும் அறியமுடிகின்றன.சங்க இலக்கியங்கள் மூவேந்தர்களைப் பற்றி பேசுகின்றன.அவர்களுள் சோழமன்னர்கள் யார் யார் இருந்துள்ளனர் என்பதைக் கீழே காண்போம்.அவர்களுடைய சிறப்புகள் ஒவ்வொன்றாக பிறகு காணலாம். சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவன் குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி இலவந்தைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி நெல்தலாங்கானல் இளஞ்சேட்சென்னி முடிதலைப் பெருநற்கிள்ளி இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளி வேல் பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி போர்வைக் கோப்பெருநற்கிள்ளி நலங்கிள்ளி நெடுங்கிள்ளி மாவளத்தான் கோப்பெருஞ் சோழன் கரிகால்பெருவளத்தான்.

பழமொழி

பாவிக்குப் பாம்பு கண் இப் பழமொழிக்குப் பொருள் நியாயத்திற்கும்,உண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர்களைக் குறிக்கும். பாம்புக்கு கண்ணிருந்தாலும் அது தனது உணர்திறத்தாலேதான் பிறவற்றைக் கண்டுணர்கின்றது.அதனால் தான் இதனை உவரையாக கூறி பழமொழி கூறியுள்ளனர். (ஊர்வனவற்றில் பாம்பிற்கு மிகவும் வேறுப்பட்ட கணமைப்புக் காணப்படும்.கண்களுக்கு இமைகள் இருப்பதில்லை.இமைகள் வளர்கருவில் பயனிழந்து நினையில் காணப்பெறும்.கண்ணின் மேல் இமை இணைச்சவ்வினால் இழுத்தவாறு மூடியிருக்கும்.)

சிலேடை நயம்..

பண்டைய புலவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது அதிக சிலேடை நயம் ததும்ப பேசிக்கொள்ளுவது உண்டு .அதனைக் கேட்போருக்கு முதலில் புரியவில்லை என்றாலும் ,அதன் பொருள் தெரிந்த பின்பு அப்பொருளினைச் சுவைத்து மகிழ்வர். ஒருமுறை யாழ்பாணத்துப் புலவரும் உரைநடையின் தந்தை என்று சிறப்பிக்கப்படுபவருமான ஆறுமுக நாவலர் அவர்கள் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை(உ.வே.சா வின் ஆசிரியர்) அவர்களை மதுரையில் சந்தித்தார்.அப்போது இருவரும் அளாவி மகிழ்ந்தனர்.மறுநாள் காலை அவர்கள் இருவரும் தம் மாணக்கருடன் ஆற்றுக்கு நீராடச் சென்றனர்.அது பனிக்காலம்.பனிக்கொடுமையால் மிகுதியாக வாடிய ஆறுமுக நாவலர் அவர்கள் பிள்ளையை நோக்கி ஐயா பனிக்காலம் மிகக் கொடிது என்றார். உடனே பிள்ளை அவர்கள் ஆம் என்று கூறாமல்.நான் பனிக் காலம் நல்லது என்பேன் என்றார். மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆறுமுக நாவலரோ பனிக் காலம் கொடுமை என்று கூற பிள்ளை அவர்களோ பனிக்காலம் நல்லது என்று கூறுகிறார்களே ஏதேனும் உட்பொருள் இருக்குமோ என்று எண்ணி மாணவர்கள் அவரை நோக்க பிள்ளை அவர்க்ள நான் ஆறுமுக நாவலர் அவர்கள் கூறியதை மறுக்கவில்லையே ,அவர் பனிக்காலம் மிகக் கொடிது என்றார். பனிக்கு

சேலத்தில் லினக்ஸ் கருத்தரங்கம்....

படம்
விசுவல் மீடியா நிறுவனம், சென்னை லிமேசன் டெக்னாலஜிஸ் நிறுவனம், மற்றும் சங்கமம்லைவ்.காம் ஆகியவை இணைந்து நடத்தின ஒருநாள் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று சேலத்தில் நடைப்பெற்றது.இதில் 100 மேற்பட்ட பயனாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நண்பர் செல்வமுரளி அவர்கள் இது தொடர்பான மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்கள்.அவரிடம் இக்கருத்தரங்கு பயனுள்ளதாக இருக்குமா என்று வினவினேன்.கண்டிப்பாக பயனுள்ளதா இருக்கும் என்றார்.சரி சென்று வரலாம் என்று நேற்று சொன்றோம் பயனுள்ளதாக இருந்தது. உபந்து-தமிழ் ஒருங்கிணைப்பாளர் ராமதாசு அவர்கள் உபந்து பற்றிய அறிமுகம் கொடுத்தார்,அதனைத்தொடர்ந்து கணினியில் உபந்துவை எவ்வாறு பதிவிறக்கி கொள்ளுவதென ஈரோடு மாணவர் கனகராசு விளக்கமளித்தார்.அவர் அளித்த விளக்கத்தின் அடிப்பதையில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அது தொடர்பான வினா கேட்கப்பட்டது.அதற்கு விடையிறுத்த மாணவருக்கு ஒரு பரிசினையும் வயங்கி சிறப்பித்தார்கள். மதியத்திற்கு மேல் கணினியில் உபந்து நிறுவிய பிறகு அதில் மெனபொருள்களை எப்படி இணைப்பது,அவற்றை எங்கெல்லாம் பெறலாம் என்பதைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பெற்றன. கே.ஜி.ச

வள்ளுவர் கண்ட சமுதாயம்....

இன்றைய நாள்களில் மனிதன் சாதி,மதம் என்னும் தளையினால் கட்ப்பட்டு,சுயசிந்தனை இன்றி தம் மதம் பெரிதென எண்ணுவதும்,அதற்காக தீவிரவாதத்தைக் கையில் எடுப்பதும் வழக்கமாகிவிட்ட ஒன்றாகிவிட்டது.இதனால் என்ன பயன் விளைகின்றது என்பதனை யாரும் சிந்திப்பதில்லை.ஒவ்வொரு மலருக்கும் மணம் வேறுபடுவது போல ,ஒவ்வொரு சமயங்களின் புறம் வேறுபட்டிருந்தாலும் ,மணம் என்பது பொதுவானது போல அச்சமயங்கள் கூறும் அடிப்படைப்படை அழ்பொருள் ஒன்றுதான்.இதனை நாம் மறக்கிறோம்,மறுக்கிறோம் அதனால் பல பூசல்களும்,மோதல்களும்,உயிர்வதைகளும் ஏற்படுகின்றன. இந்நிலையினைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை தாம் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பத்திலும் இறைவனைப் பற்றிய எந்த குறிப்பும் தரவில்லை.(கடவுள் வாழ்த்தினை வள்ளுவர் பாடவே இல்லை என்று சிலர் கூறுவர்)பத்துப்பாடல்களில் ஏழு இடங்களில் இறைவனின் அடி சிறப்பை கூறிகின்றாரே ஒழிய கடவுளின் முகத்தினைக் கூறினாரிலர்.நற்றாள்(2),மாண்டி(3),இலானடி(4),தாள்சேர்ந்தார்(7,8),தாள்(9),இறைவனடி(10) முதல் பாடலில் வரும் பகவன் என்று வரும் சொல் சமணசமயக் கடவுளான அருகனைக் குறிக்கும் அதனால் அவர் சமணசமயத்

சான்றோர் சிந்தனைகள்

படம்
தேவைகள் குறையக்குறைய,ஆன்மசுகம் பெருகிக்க கொண்டே வந்து சேரும்.தெய்வத் தன்மை உன்னருகே வந்து சேரும். உண்மையின் முகம் அழகுடையது .கம்பீரமானது.உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன் .உண்மை அறிவதொன்றே என் விருப்பம். பெண்களால் உலகத்தை அழிக்கவும் முடியும் ஆக்கிகாட்டும் வல்லமையும் அவர்களிடத்தில் நிறையவே உண்டு. நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள். உனது அறிவு ஆற்றல் உனக்கு மட்டும் சொந்தம் அல்ல .பகிர்ந்து கொள்ளக்கூடியது.சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் அதனைப் பொதுவுடமையாக்கிவிட்டால்,தனிமனித தேவைகளும்,ஆடம்பர வாழ்க்கையும் குறைந்து போகும். -------------சாக்ரட்டீஸ்.

காவேரி........

படம்
தஞ்சை பகுதியில் பிறந்து காவேரித் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவள் என்றாலும் காவேரியின் அழகை,அதன் வனப்பை ரசித்ததில்லை.அண்மையில் திருவையாறு செல்லவேண்டியிருந்து,சிதம்பரத்தில் இருந்து சென்றதால்,பாபநாசம் கணபதி அக்ரகாரம்,கபிஸ்தலம் வழியாக மகிழ்வுந்தில் சென்றோம்.அப்பகுதியை அதுவரை நான் பார்த்தில்லை.காவேரி கரையின் ஓரேமாகவே செல்லும் அந்த சாலையின் இருமருங்கும் வேலி வைத்துப் போல தென்னை, ஒரு பக்கம் காவேரி மறுபக்கம் பச்சைக் கம்பளத்தை விரித்துப் போன்று பசுமை செழித்து கொழுத்திருந்தது.பார்க்க பார்க்க பரவசமாய் இருந்து.இத்தனை நாள் இப்பகுதிக்கு வரவில்லையே என்று ஏக்கமாகவும், வருத்தமாகவும் இருந்து.அப்பகுதியைப் பார்த்தில் இருந்து காவேரி செல்லும் பகுதிக்கெல்லாம் காவேரி கரையின் ஓரேமாகவே சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. காவேரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய போது,சைவசித்தாந்து காவேரி வளம் என்னும் நூலினையும் தி.ஜானகிராமனும் சிட்டி அவர்களும் இணைந்து நடந்தாய் வாழி காவேரி என்னும் நூலினையும் எழுதியுள்ளதை அறிந்தேன்.சைவசித்தாந்ததில் கேட்டபொழுது அந்நூல் இல்லை என்று கூறினார்கள். நூலகத்தில் தேட

அருவினை என்ப உளவோ..........

காலப்பெருவெளியில் எத்தனையோ நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் வாழுங்கலையை வாழ்க்கையில் இருந்து பிழிந்து, சாறாய் வடித்துப் பருக கொடுத்திருக்கும் நூல் திருக்குறள். இந்நூல் வாழ்க்கையின் பிழிவாய் இருப்பதனால் தான் உலகப் பொதுமறையாக வாழ்கின்றது. 1330 குறளிகளையும் அவதானிக்கும் போது காலத்தின் தேவைக்கு ஏற்ப கருத்துக்களை உட்செரித்து, தனித்தன்மையுடன் திகழ்வதைக் காணலாம். காலம் கண் போன்றது என்பர். காலம் கிடைத்தற்கரிய ஒன்று.அதை நிருவகிக்க இயலாவிட்டால் வேறு எதனையும் நிருவகிக்க இயலாது எனபர் கால நிருவாக மேலாணமை பற்றி நிருவாக மேதை பீட்டர் டிக்கரின்.என்னிடம் எதனை வேண்டும் என்றாலும் கேள் காலத்தைத் தவிர என்றார் காலத்தின் அருமையை உணர்ந்த நெப்போலியன்.நீ தாமதிப்பாய் ஆனால் காலம் தாமதிக்காது என்று காலத்தின் தேவையை வலியுறுத்துவார் பெஞ்சமின் பிராங்கிளின். காலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக இன்றியமையாது.காலத்தை ஒருவன் சரியாக திட்டமிட்டு பயன்படுத்த தொடங்கினால் அவன் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே போவான். இன்று நாம் கால மேலாண்மையைப் பற்றி பேசுகின்றோம்,படிக்கின்றோம்,ஆனால் இரண்டாயிரம் ஆண்டுக்கும் முன் தோன்றிய வள்ளுவ