இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பால் அரசியல் தாய்ப்பால் - புட்டிப்பால் - மாட்டுப்பால் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்

படம்
பால் குறித்த விவாதங்கள் அண்மை காலத்தில் மேற்கிள ம்பியுள்ளன. அனைத்திலும் கலப்படம் என்ற சூழல் இன்று நிலவுகிறது. நூகர்வோருக்குப் பெரும் சவாலான காலகட்டமாக இருக்கிறது. எந்த பொருளை நம்பி வாக்குவது என்ற புரியாத நிலை. ஒவ்வொரு செயல்களுக்குப் பின்னும் நுண் அரசியல் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. பால் விற்பனை பெருக்கத்திற்காகச் செயப்படும் அரசியல் மிக ஆபத்தானதாக இருக்கிறது. மனித உணர்வுகள் காயடிக்கப்படுகின்றன. இதனுள் செயல்படும் தன்மையை தக்க தரவுகளின் பின்புலத்தோடு பால் அரசியல் என்னும் நூலினை நக்கீரன் அவர்கள் எழுதியுள்ளார்கள். தன் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரக்கவில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை நிலை அல்ல. எந்தவொரு தாய்க்கும் அவருடைய குழந்தைக்குத் தேவையான அளவுக்குப் பால் சுரக்கும் என்பது தான் இயற்கை. ஆனால் ஒரு தாயை அப்படி நினைக்க வைப்பத்தன் பின்னே மறைந்திருக்கும் அரசியலை அத்தாயே அறியமாட்டார். அது மட்டுமன்றி தாய்ப்பால் சுரப்பதை உண்மையிலேயே குறைக்கச் செய்வதன் பின்னணியில் பெரும் மருத்துவ அரசியல் மறைந்திருக்கிறது.  
படம்
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் இவ்வுரைகியையுமாறு சென்னை இந்துதியாலஜிகல் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் கோ.வடிவேல் செட்டியார் அவர்கள் இயற்றிய தெளிப்பொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும், சென்னை சித்தாரிப்பேட்டை ஆங்கிலோவர்னாகுலர்ஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் வல்லி. ப. தெய்வநாயக முதலியார் அவர்களாலும், சென்னை திருவல்லிக்கேணி, கம்மர்ஷியல் அச்சியந்திரசாலையில் இரண்டு பகமாக 1904 ல்  பதிப்பிக்கப்பட்டது. அந்நூலை மீள் பதிப்பாக 2015 ல் சிவாலயம் ஜெ.மோகன் பதிப்பித்துள்ளார். அண்மையில் சிவாலயம் மோகன் அவர்களைத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன் அய்யா அவர்கள் சந்திக்க சென்றார். அவரோடு நானும் எனது கணவர் மருத்துவர் சேக்கிழாரும் உடன் சென்றோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் அவரோடு உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் மென் பொருள் பொறியாளர் என்றாலும் தமிழ் மீது அளப்பறிய காதலால் தமிழின் தொன்மையான நூல்களைத் தேடித்தேடி சேகரித்து அவற்றைப் பாதுகாப்பதும், அந்நூல்களை மீள்பதிப்பாக்கம் செய்வது குறித்தும் சிலாகித்தார். அவருடைய உரையாடலின் பெரும்பகுதி தமிழுக்கு தான் ஏதேனும் செய்யவேண்டும் என்பது

கக்கூஸ் ஆவணப்படம்

படம்
இன்று இணையத் தளத்தில் இயக்குநர் திவ்யா எடுத்த கக்கூஸ் ஆவணப்படம் பார்த்தேன். மனம் கனத்து உலுக்கி பல்வேறு கேள்விகளை என்னுள் எழுப்பியது. இந்த படத்தைப் பார்க்கும் போது சில இடங்களில் கண்களை மூடிக்கொண்டேன், சில காட்சிகளைப் பார்க்கும் போது குமட்டிக்கொண்டு வந்தது. பார்க்கும் போதே இப்படியான நிலை உருவாகிறதே, இவ்வேலைகளைச் செய்யும் அவர்களின் நிலை? இவர்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம். https://www.youtube.com/watch?v=-UYWRoHUpkU

மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

படம்
மகாவித்துவான்  ச. தண்டபாணி தேசிகர் (சிதம்பரம் சடையப்ப தண்டபாணி தேசிகர்) தோற்றம் - 02. 04. 1903 மறைவு     - 25. 04. 1990       சிதம்பரத்தை அடுத்துள்ள நன்னிலம் திருகைட்டங்குடி, கிராமத்தில் பிறந்தவர். தந்தை பெயர் சடையப்ப தேசிகர். தாயார் பாலம்மாள். சு. பொன்னோதுவார் மூர்த்திகள் மற்றும் மகாவித்துவான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யரின் மாணவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவன் எனும் பட்டம் பெற்றவர். பின் திருவாரூரில் இவர் பணிசெய்யும் போது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இவருடைய மாணவர். மீனாட்சி கல்லூரி, மதுரை ஆதீனக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, மதுரை காமராசர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பணியாற்றினார்.           திருக்குறள், திருவாசகம் போன்றவற்றின் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் சிறந்த இரு நூல்களை இயற்றிய தண்டபாணி தேசிகர் அவர்கள் சைவத்தின் மறுமலர்ச்சி, முருகன், ஆடவல்லான் மற்றும் திருமந்திரம் விளக்கக் கூடிய பஞ்சாச்சர தீபம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.        இவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி தமிழக