இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூனையும் நானும்

கதிரவன் தன் கதிர்களால் மெல்ல வருடிக்கொடுக்கும்  நேரம். வீட்டின் பின்புறம் மதில் மீது ஒரு பூனை அதன் குட்டியுடன் இருந்தது.  புதிய வரவு. முன்பின் அதனை நான் பார்த்தது இல்லை. அன்று தான் பார்க்கிறேன். நான் அதனையேப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அங்கு முதல் முறையாக மாமரம் ஒன்று பூத்திருந்தது. சாத்துக்குடி மரம் இரண்டு மூன்று காய்களை ஈன்றிருந்தது. நார்த்தங் குருவி, சிட்டுக்குருவி முணுமுணுத்துக்கொண்டிருந்தன. அணிற்பிள்ளைகள் வேகமாக மரத்தில் தாவிக்கொண்டிருந்தன. பூனையைப் பார்த்தேன் அது என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது. உனக்குப் பசிக்கிறதா என்றேன். மியாவ் என்றது. உணவு எடுத்துவரவா என்றேன் மியாவ் என்றது. உணவு எடுத்து வந்து வைத்துவிட்டு தூர நின்று கொண்டேன். பூனை  கண்களிலும், நடையிலும் அச்சத்துடன் இறங்கி வந்தது. அதன் குட்டியை அழைக்கவில்லை. உணவு அருகே  வந்தது. என்னைப் பார்த்தது. அச்சப்படாமல் சாப்பிடு உன்னை நான் ஒன்றும் செய்யமாட்டேன் என்றேன். சாப்பிடத் தொடங்கியது. சுற்றும்முற்றும்பார்த்தவாறே. என் மீதும் கண் வைத்துக் கொண்டு. மெல்ல மெல்ல தன் நாவால் உணவினை நக்கி நக்கிச் சாப்பிட்டது. அப்பொழுது அதன் அர