இடுகைகள்

ஆகஸ்ட், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆவுடையம்மாள்

கி.பி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் தென்காசிக்கருகிலுள்ள செங்கோட்டை என்னும் ஊரைச் சேர்ந்தவர். வேதாந்த கொள்கை உடையவராக விளங்கியவர். வேதாந்த கோட்பாட்டினை நன்குணர்ந்து அதனை விளக்கும் நூல்கள் எழுதியுள்ளார். வேதாந்த வித்தியா சோபனம் என்னும் நூல், வேதாந்த கருத்துக்களைச் சோபனப் பாட்டில் அமைத்து விளக்குகின்றது. இந்நூல் கி.பி 1890 வெளிவந்தது. கி.பி. 1896 -இ ல் வெளிவந்த வேதாந்த பள்ளு என்னும் இவரது நூல் வேதாந்த கொள்கைகளை, எளிய மக்களின் பேச்சு மொழியில் அமையத்தக்க பள்ளு என்னும் சிற்றிலக்கிய வாயிவாக விளக்குகிறது. என ஆவுடை அக்கா பற்றிய செய்தி வாழ்வியற் களஞ்சியத்தில் காணப்படுகின்றது. இச் செய்தியின் வாயிலாக ஆவுடையம்மாள் என்னும் பெயர் பின்னால் ஆவுடை அக்காள் என வழங்கலாயிற்று என அறியமுடிகின்றது. செங்கோட்டையில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவுடை அக்கா. இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, கணவரை இழந்த கைம்பெண்ணாக வீட்டுக்குள் வளர்ந்தார். ஊரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அக்காவின் தாயார் அவர் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பண்டிதர்களை வீட்டுக்கு வரவழைத்து அக்க

அக்கா என்னும் ஆளுமை...

நீயூ செஞ்சுரியின் உங்கள் நூலகத்தில் பாவண்ணன் எழுதிய அக்கா என்னும் ஆளுமை கட்டுரையை அண்மையில் படித்தேன். சு. வேங்கடராமன் எழுதிய அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு என்னும் நூலில் தமிழிலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்படாத, தமிழுலகம் அறியாத ஆவுடை அக்காவைப் பற்றிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரையை ஆக்கியுள்ளார். அந்நூலுள் சு.வேங்கடராமன் அவர்கள் மன ஆதங்கத்துடன் ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளதைக் குறிப்பிடுகின்றார். பாரதியார் அக்காவை நன்றாக அறிந்திந்திருந்தார், அக்காவின் பாடல்களை அவர் மனம்நெகிழச் சுவைத்தார், ஆனாலும் அக்காவைப் பற்றி ஒரு சிறு குறிப்பைக் கூட எங்கும் அவர் எழுதி வைக்கவில்லை. செங்கோட்டை ஆவுடை அக்கா அவர்களின் பாடல்களை ஏறத்தாழ முந்நூறு பக்கங்களில் வரிசைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தபோவனம் கிராமத்தில் உள்ள ஞானாந்த நிகேதன் வெளியீடாக இத்தொகுதி வெளிவந்துள்ள குறிப்பையும் தந்துள்ளார். எந்த ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது என்னும் குறிப்பு காணப்படவில்லை. அக்கா பாடல்கள் அனைத்தும் நாட்டுப்புற மெட்டுகளின் வடிவத்தில் எளிய பமரனுக்கும் வேதாந்த கருத்துக்களை கொண்டு சே

மலரும் தற்குறிப்பேற்றமும் -2

சீவக சிந்தாமணியில் தற்குறிப்பேற்ற அணிநலத்துடன் ஒரு காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கட்டியங்காரனின் சூழ்ச்சியால் சச்சந்தன் போரில் மடியவே விசயைக்கு நேரவிருக்கும் துன்பங்களை முன் கூட்டி யறிந்ததே போல் இயற்கையே புலம்பி கண்ணீர் வடிக்கின்றதாம். மரங்களின் இலைகள் மீதும் மலர்கள் மீதும் படர்ந்த பனிநீர்துளிகள் கீழே சொட்டுவது கண்ணீர் வடிப்பதாகவே காட்சியளிக்கிறது என்பதைச் சிந்தாமணியில், அந்தோ விசையை பட்டனகொண் டகங்கை புறங்கை நானாற்போற் கந்தார் களிற்றுத் தங்கோமான் கழிய மயிலோர் மயிலூர்ந்து வந்தாற் போலப் புறங்காட்டுள் வந்தாள் தமியே யெனமரங்கள் சிந்தித் திரங்கி யழுவனபோற் பனிசேர் கண்ணீர் சொரிந்தனவே என இயற்கை நிகழ்வின் மீது ஏற்றி கூறப்படுகின்றது. இராமன் அயோத்தி நகரை விட்டுக் காட்டிற்குச் செல்வதை அறிந்ததும் தயரதன் புலம்பி நிற்கின்றான். தயரதனைப் போலவே இயற்கையெல்லாம் இராமனின் பிரிவை பொறுக்கமுடியாமல் புலம்பின என்பதைக் கம்பராமயணத்தில் தற்குறிப்பு அணிநலத்துடன் காட்டிச் செல்லுகின்றார் கம்பர். ஆவும் அழுததன் கன்றழுத அன்றலர்ந்த பூவும் அழுதபுனற் புள்ளழுத கள்ளொழுகும் காவும் அழுத களிறழுத கால்வயப்ப

மலரும் தற்குறிப்பேற்ற அணியும்

படம்
கலை ஆக்கங்களுக்கு இயற்கை மூல ஊற்று . இயற்கையை அணுகாமல் எவ்விலக்கியங்களும் சிறப்பு பெறாது.படைப்பாக்கத்தில் இயல்பான வாழ்க்கை சித்திரங்களே உயிரோட்டம் தரவல்லன. இருப்பினும் சில இயற்கை நிகழ்வுகளின் மீது படைப்பாளர்கள் தங்களது கற்பனையை ஏற்றிப் பாடுவதும் உண்டு. அவ்வாறு படப்படுவது தற்குறிப்பேற்றம் என்று கூறுவார்கள். பொதுவாக தற்குறிப்பேற்றத்திற்கு மதுரையை நோக்கி கோவலனும் கண்ணகியும் செல்லும் போது மதுரை கோட்டையில் இருந்த கொடி காற்றில் அசைந்தாடிய இயற்கையான நிகழ்ச்சியைப் புலவர் தன் கற்பனைத் திறத்தால் கோவலன் கண்ணகியை இங்கு வராதீர் என்று தடுப்பது போல் இருந்து என்று புனைந்துரைக்கும் நிகழ்ச்சி எடுத்துக் கூறப்படும். சிலப்பதிகாரத்தில் மற்றுமொரு இடத்தில் கண்ணகிக்கு நேரவிருக்கும் பிரிவுத் துன்பத்தை முன்கூட்டியை உணர்ந்த அகழியில் மலர்ந்த கரிய நெடிய குவளை மலரும், ஆம்பல் மலரும் தாமரை மலரும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் பரிவுடன் இரங்கி நின்றனவாம். அதுவும் எப்படி எனக் காட்டுகின்றார் இளங்கோவடிகள் ; அவர்கட்கு இரங்கிய நிலையில் பண்களின் தன்மையோடு தம் பால் முரலுகின்ற வண்டுகளாகிய வாயினாலே அழுது ஏங்கி கண்ணீர் மல்கப் பெற்றுத

அடியார்க்கு நல்லார்

சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய சான்றோருள் ஒருவராவார். உரை சிறப்புப் பாயிரச் செய்யுள்கள் இவர் வரலாற்றினை ஒரளவு உய்த்துணரச் செய்கின்றன. இவர் நிரம்பர் என்னும் ஊரினர் என்பதையும், இவருக்கு நிரம்பையர் காவலன் என்று மற்றொரு பெயரும் உண்டு என்பதையும், இவரை ஆதரித்து உரை செய்வித்தவர் பொப்பண்ண காங்கேயர் கோன் என்பதையும் அப்பாடல்களால் அறியலாம். இவ்வுரையாசிரியர் அடியாருக்கு நல்லான் என்றே அப்பாடல்களில் குறிப்படப்பட்டுள்ளார். நிரம்பையர் காவலர் என்னும் பெயர் ஊரால் வந்தது என்றும், நிரம்பை என்னும் ஊர் கொங்கு மண்டலத்தில் விசயமங்கலத்தின் அண்மையில் உள்ளதென்றும் டாக்டர் உ. வே. சாமிநாதையர் கூறுவர். திருஞான சம்பந்தர் தம் தேவாரப் பாடலில் சிவபெருமானை அடியார்க்கு நல்லார் என்னும் பெயரால் அழைக்கின்றார். அப்பெயரைத் தாங்கியுள்ள இவ்வுரையாசிரியர் சைவ சமயத்தை சார்ந்தவர் என்பது ஒரு சாரார் கருத்தாகும். உரையாசிரியர் சிவபெருமானை இறைவன் என்றே சுட்டுவதையும் துறவறம் யோகம் ஆகிய சொற்களின் உரைகளில் சைவச் சமயக் கருத்துக்களை விரித்துரைப்பதையும், பிறவா யாக்கைப் பெரியோன் என்னும் அடிக்கு என்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவன் என்று பொருள