இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் பெயர் சிவப்பு

  இயற்கையால் அது வரையும் நுண்ணோவியங்களினால் வசீகரிக்கப்பட்டு  மூழ்கிதிளைத்த நுண்மையர் அதனை தங்களின் கலைவழி வெளிப்படுத்த பெரிதும் முனைந்து,  இயற்கையை அதன் நிலையிலேயே / இலக்கிய படைப்பில் மரபு வழி காணப்படும் நுண்ணோவியங்களைப் தீட்டுவது என இரு நிலைகளில் வெளிப்படுத்துகின்றனர்.   என் பெயர் சிகப்பு (My Name is Red )  என்னும் நாவல் ஒவியம் குறித்து நுட்பமாக பேசுகிறது. ஒவியம் குறித்தான புரிதலுக்கான அனைத்து சாத்தியங்களையும் திறந்துவிடுகின்றது.

கனவு ஆசிரியர் என்னும் நூலிலிருந்து

படம்
 இன்று பொருளியல் தேவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் கல்வி முறையில், மானுட விழுமியங்கள், அற மதிப்பீடுகள்  குறித்த இடம் தெரியவில்லை. இவற்றை கற்பிப்பதில் ஆசிரியரின் பங்கு பெரிது என்றாலும், இன்றை சூழல் உகந்ததாக உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.  க. துளசிதாசன் தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள கனவு ஆசிரியர் என்னும் நூல் தமிழகப் படைப்பாளுமைகள் பலர் தங்களுக்கும் ஆசியருக்குமான உறவினைக் கூறுவதாக அமைந்துள்ளது. தன்னுடைய மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஆப்ரஹாம் லிங்கன் எழுதிய கடிதம்  எல்லா மனிதர்களும் நீதிமான்கள் அல்லர். அனைத்து மனிதர்களும் வாய்மையானவர்கள் அல்லர் என்பதை அவன் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் அதே சமயம் ஒவ்வொரு அயோக்கியனுக்கும் ஒரு நாயகன் இருக்கிறான் என்பதையும் ஒவ்வொரு சுயநல அரசியல்வாதிக்கும் ஒரு தன்னலம் கருதாத தலைவர் இருக்கிறார் என்பதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள். ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் சொல்லிக் கொடு
தமிழிலக்கியத் திறனாய்வு – வினாக்கள் 1.     இலக்கியத் திறனாய்வு என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் . அ . ச . ஞானசம்பந்தம் 2.     விமர்சனம் எம்மொழிச் சொல் வடமொழி 3.     ஆய்தல் என்பதன் பொருள் உள்ளதன் நுணுக்கம் 4.     இலக்கியத்திறனாய்வு இலக்கியத்தைக் கற்கிற திறனாய்விலும் தனித்துறையாக இயங்க வேண்டும் என்று கூறியவர் நார்த்த ரோப் ஃரை 5.     தீர்ப்பளிக்கும் திறனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் டி . எஸ் . எலியட் 6.     மற்ற கலைகள் எல்லாம் உமையாக கிடக்கும் பொழுது திறனாய்வு ஒன்றுதான் வாய்திறந்து பேசுகிறது என்று கூறியவர் நார்த்த ரோப் ஃரை இலக்கியத் திறனாய்வாளர்களும் திறனாய்வு நூல்களும் 1.     க . பூரணச்சந்திரன்                                   - தமிழிலக்கியத் திறனாய்வு 2.     எம் . பாலு                                                  - தமிழில்விமர்சனஇலக்கியம் -        ஒரு முன்னுரை 3.     சிட்டி சிவபாதசுந்தரம்                            -  தமிழ்ச்சிறுகதை வரலாறு 4.     எம் . வேதசகாயகுமார்