இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகப் பெருந்தமிழர் பேராசிரியர் பி.விருதாசலனார்

படம்
  தலைநாள் போன்ற விருப்பினர் கல்பனாசேக்கிழார்               வாடா … வாடா … எப்படிடா இருக்க என்று   உள்ளன்பு ததும்ப கூறும் சொற்கள். பாசாங்ற்ற புன்னகை. கம்பீரமான உருவம் , உடல்   மொழி,   சிம்மக் குரல் மொழி. குழந்தை மனம். பண்பின் உரு. வாழ்நாளில் சேகரித்த அறிவுசார் வாழ்வியல் அனுபவங்கள். மரபு இலக்கண இலக்கியங்களையும் -- நவீன இலக்கியங்களையும் கேட்டார் பிணிக்கும் வகையில் எடுத்துரைத்தல்.   கேளாதாரும் விரும்பும் அறிவாற்றல்.   இருமொழிப் புலமை. தமிழ் மொழிப் பற்று அதற்கான செயலாக்கம். தமிழ் , திராவிட   கருத்தியல் வழி உலகப் பார்வை   நோக்கியதாகவே தன் எண்ணம் செயல் வாழ்வு   அனைத்தையும் அமைத்துக்கொண்டவர் ஐயா முனைவர் பி. விருதாசலனார் அவர்கள்.             காவிரிகரையினிலே பிறந்து வாழ்க்கையே போராட்டமாக இருப்பினும் தடை கடந்து தானும் வளர்ந்து உறவுகளுக்கு கைகொடுத்து, தமிழ்ச் சமூகத்தின் அடையாளமான மொழியை வளர்தெடுத்த பன்முகஆளுமை பேராசிரியர் பி. விருதாசலனார்.   ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்த சென்னைப் பல்கலைக்கழக அடையாளச் சின்னத்தைப் போராடி தமிழில் மாற்றி அமைத்தமை, பல்கலைக்கழகப் பட்டங்கள் தமிழில் வழங்கப்பட வே