இடுகைகள்

மார்ச், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர் திருமணமுறை -2

வாழ்வியல் வழிகாட்டி (அ) திருவள்ளுவர் வழிபாடு மக்கள் அனைவரும் உலகில் தக்க வகையில் எவ்வாறு வாழவேண்டும் என்று வழிகாட்டியவர் திருவள்ளுவர். அறத்தால் பொறுள் தேடி, அப்பொருளால் இன்புற வேண்டும் என்பதற்காக முப்பால் அருளியவர் அப்பெருமகனார். அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும் அறத்தால் வருவதே இன்னபம் என்றும் தெளிவு படுத்தியவர் அவர். இரு சிறகு வீசுப் பறக்கும் ஒரு பறவையைப் போல், மணமக்கள் இருவரும் ஒருமைத் தன்மையராய் இல்வாழ்க்கை நடத்தினால் அவர்கள் வாழ்வே வீடுபேறு இன்பம் என்றும், அமிழ்தம் அருந்தும் அமர வாழ்வு என்றும் கூறியவர் அவர். கணவனுக்கு மனைவியும்,மனைவிக்கு கணவனும் துணையாக அமைந்து குடும்பக் கதமையை இருவரும் ஒப்பாகத் தாங்கி, வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்தால் அவர்கள் வாழ்வு தெய்வ வாழ்வு என்று உறுதி மொழி தந்தவர் அவர். ஆதலால், நலவாழ்வு வேண்டு அவரைப் போற்றுவோம், எனக் கூறி, வள்ளுவர் சிலைக்கோ, படத்திற்கோ திருக்குறள் நூலுக்கோ மலர் தூவி மணமக்கள் வழிப்படச் செய்தல். வள்ளுவம் வாழ்க ! வாழ்வியல் வாழ்க ! என மும்முறை அவர்களைக் கூறச் செய்தல். சான்றோர் வழிபாடு மணவிழாவுக்கு வந்துள்ள பெருமக்கள்,தாய்மார்கள், செல்வர்கள் அ