இடுகைகள்

டிசம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொற்பொழிஞர் அண்ணா

நாமொழியால் நானில மக்களின் உள்ளத்துள் எழுச்சியை ஏற்படுத்தி,எண்ணத்துள் பகுத்தறிவு சிந்தனையைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பிகள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரறிஞர் அண்ணா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெறும் சி.என்.அண்ணாதுரையாவர். இவர் தம் நாமொழியால் தமிழ்நிலத்தை அசைத்துப் பார்த்தவர். பொதுமக்களிடம் மட்டுமின்றி வருங்கால இளைய சமுதாயத்தினரிடமும் பகுத்தறிவுச் சிந்தனையை வித்திட்ட பண்பாளர்.இவருடைய மேடைப் பொழிவினைக் கேட்பது திருவாடுதுறை இராஜரத்தினம் அவர்களின் நாதசுரத்தில் தோடியைக் கேட்பதை ஒக்கும் என்பர். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அண்ணாவின் பொழிவினைக் குறிப்பிடும் பொழுது ‘சிறந்த பேச்சாளர் பட்டியலின் முன்னணியில் டொமஸ் தெனியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது கிரேக்க நாடு; எட்மண்ட் பர்க்கைக் கொண்டு வந்து நிறுத்துகிறது இங்கிலாந்து;ராபட் கீரின்,இங்கர்சாலைக் கொண்டு வந்து நிறுத்துகிறது அமெரிக்கா;சிறந்த பேச்சாளர் வரிசையில் முதலிடத்தில் திராவிடம் நிலை நிறுத்துவதற்குரிய ஒரே ஒருவர் அறிஞர் அண்ணாதான்.இவரது சொற்பொழிவு சலசலவென்று ஓடும் சிற்றருவியின் பாங்கு போலவும் சொற்கள் நாணயச் சாலையில் அடிப்பட்டு ஒன்றன் ப

கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணாவினுடைய நூற்றாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்நாளில், அவருடைய இலக்கியப் பங்களிப்பினைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் கருத்தரங்கம் நடைப்பெறவுள்ளது.அது தொடர்பான கட்டுரைகள் 7-1-௨௦௦௮- க்குள் அனுப்பவும்.அனுப்ப வேண்டிய முகவரி பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர்-608002. பேராளர் கட்டணம்-400
படம்
படம்

அரசன்

அரசன் எப்படியோ அப்படியே குடிகள் அரசனுக்கஞ்சி வலியார் எளியார்க்கனு கூலமாக்கிறது. அரசனும் ஆண்டியாவான்,ஆண்டியும் அரசனாவான். அரசன்ன்று கொன்றால் தெய்வம் நின்று கொள்ளும். அரசன் நினைத்த அன்றே அழிவு. எழுத்தறிந்த மன்ன்ன் கிழித்தெரிந்தான் ஓலை. கொடுமையான அரசன் கீழிருப்பதைப் பாக்கிலும் கடுமையான கீழ் புலியின் இருப்பது நன்று. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி. மீந்த சுண்ணாம்பையும்,மெலிந்த இராசாவையும் கைவிடல் ஆகாது. வளைந்த மூங்கில் அரசன் முடிமேல்,வளையாத மூங்கில் கழைக்கூத்தர் காலின் கீழ். அரசனுடைமைக்கு ஆகாசவாணி சாட்சி. அரசனைக் காட்டிக்கொடுப்பது அமைச்சனுக்குத் தர்ம்மல்ல. அரசனை நம்பி புருசனைக் கைவிட்டாள். அரசனில்லாப் படை வெட்டுமா? கோவுக்கழகு செங்கோன் முறைமை.

பழமொழி

'இலையும் பழுப்பும் எங்கும் உண்டு' வாழ்க்கை இன்பம் துன்பம்,ஏற்றத்தாழ்வு நிறைந்தது என்னும் கருத்தை இப் பழமொழி உணர்த்துகின்றது.இன்ப நிலைக்கு இலையின் இயல்பான தோற்றமும் துன்பநிலைக்கு இலையின் பழுப்பேறிய தோற்றமும் ஒப்புமை கூறப்பெற்றுள்ளன.

நினைவுகள்

சின்ன வயசுல எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகள்.நான் நாலாவது படிக்கயில நடந்த சம்பவம்.எங்க வகுப்பாசிரியர் மறைமலையின்னு பேரு அவர் வெண்ணிலாங்குற பெண்ணை எப்ப பார்த்தாலும் திட்டிக்கொண்டே இருப்பார்.அந்த பொண்ணுக்கு அவரைக் கண்டாலே வெறுப்பு .ஒருமுறை அவள போயி காப்பி வாங்கிட்டு வரச்சொன்னாரு,அவ என்ன பண்ணுனானா காப்பியில அவளுடைய எச்சிய துப்பி கொண்ணாந்து கொடுத்துட்டா.இது மாதிரி நான் காப்பியால எச்சிய துப்பி குடுத்துட்டேனு என்னுக்கிட்ட சொன்னா.அதே கேட்டதிலிருந்து அவர பார்த்தாலே சிரிப்பா வரும். இப்போழுது நினைத்தா வருத்தமா இருக்கு.

பழமொழி-அதிஷ்டம்

1. அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம். 2. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. 3. பால் குடிக்கப் பாக்கியம் இல்லாதவன் பால் வாங்கினானாம்.அதையும் பூனை குடித்ததாம். 4. ஆசை இருக்குகிறது தாசில் பண்ண,அதிஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க. 5. இடுக்கிறவள் புடைக்கிறவள் இங்கே இருக்க எட்டிப்பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள். 6. கொடுக்கிற தெய்வம் கூறையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும். 7. ஏர் பிடித்தவன் என்ன செய்வான்,பானை பிடித்தவள் பாக்கியம். 8. குபேரன் பட்டனம் கொள்ளைபோனாலும் அதிர்ஷ்ட வீணனுக்கு அகப்பைக் காம்பூ அகப்படுமா? 9. சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கேடனுமில்லை,ஐப்பசி மாததில் பிறந்த அதிர்ஷ்டவானுமில்லை. 10 அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். 11. சனியன் புடிச்சவளுக்குச் சந்தைக்குப் போனாலும் புருசன் அகப்படமாட்டான். 12. ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்,பலரைக் கொன்றவன் பட்டமாள்வான். 13. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்திலே சனி,ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்திலே ராசா. 14. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை. 15. அவிசாரியானாலும் முகராசி வேண்டும்.

பழமொழி-அதிகாரம்

௧. அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியையும் உடைக்கும் ௨. தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டும் ௩. மாமியார் உடைத்தால் மண்குடம் ,மருமகள் உடைச்சா பொன்குடம் ௪. வழியே போய் வழியே வந்தால் அதிகாரி செஙெகோல் என்ன செய்யும். ௫. ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார் இடம் கொடார்கள். ௬. அம்மான் வீட்டு வெள்ளாட்டியை வடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா? ௭. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்,செய்கிறவனுக்கு தலைச்சுமை. ௮. தகப்பனுக்கு கட்டக் கோவணமில்லை,மகன் தஞ்சாவூர் மட்டும் நடைபாவாடை போடச் சொன்னானாம். ௯. நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு இரண்டாடு கேக்குமாம். ௧0. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டான். 11. நாற்கலம் கூழுக்கு நானே அதிகாரி. 12. வீடு வெறும் வீடு வேலுர் அதிகாரம். 13. தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம். 14. அதுதான் இராயர் கட்டளையாய் இருக்கிறதே. 15. அரி என்கிற அச்சரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம்.

காந்தியடிகள் பின்னபற்றிய நூல்கள்

நல்ல நூல்கள் மனிதனை நல்வழிப்படுத்தும்,நீடு புகழைத் தரும் என்பதற்குச் சான்றாக காந்தியடிகள் படித்து அதன் வழி நடந்த நூல்களைக் கூறலாம்.அப்புத்தகங்கள் ஜான் ரஸ்கின் எழுதிய கடையருக்கும் கடைத்தேற்றம் ஹென்றி தோரா எழுதிய சிவில் ஒத்துழையாமை டால்டாய்ஸ் எழுதிய கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்கு இருக்கிறது. என்பவையாகும்.

பழமொழி

நம் கிராமத்து மொழிகளில் முக்கிய இடம் பழமொழிக்கு உண்டு.பழமொழியின் சிறப்பை உணர்த்தவே எழுந்த நூல் பழமொழி நானூறு.இன்று வழக்கில் பழமொழிகள் பயன்படுத்துதல் குறைந்து கொண்டு வருகின்றன.அவற்றையெல்லாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.அச்சிறு முயற்சியாக நம் முன்னோர் அச்சம் தொடர்பாக பயன்படுத்திய பழமொழிகளைக் கீழே தருகிறேன்.தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பிலும் வரும். ௧. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ௨. மடியிலே கனமிருந்தால் வழியிலே பயம். ௩. முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம். ௪. முட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை இடிப்பார்களா? ௫. அச்சமற்றவன் அம்பலம் ஏறுவான். ௬. அடிக்கிற காற்றுக்கும்,பெய்கிற மழைக்கும் பயப்படு. ௭. இடிக்கொம்புகாரன் கோழிக்குஞ்சு சத்தத்திற்கு அஞ்சுவானா? ௮. என்றும் பயப்படுதலினும் எதிரே போதல் உத்தமம். ௯. கரடி கையிலுதைபட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால் பயம். ௧0. நயத்திலாகிறது பயத்திலாகாது. ௧௧. பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா? ௧௨. கள்ளன் அச்சம் காடு கொள்ளாது. ௧௩. கிளி பிடித்த்தோ,புலி பிடித்த்தோ? ௧௪. அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான். ௧௫. விழுந்த