இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முல்லைப் பாட்டு

படம்
அண்மையில் அண்ணாமைலப் பல்கலைக்கழக மொழியியல் துறையும் இந்தியமொழிகளின் நடுவன் நிறுவனமும் இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான கதை எழுதுதல் பணிப்பட்டறைக்கு ஐந்திணைப் பதிப்பக உரிமையாளர் குழ. கதிரேசன் வந்திருந்தார்.  பத்துப்பாட்டிற்கு எளிமையான கவிதை வடிவில் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் எண்ணும் நோக்கத்தில் எழுதியிருப்பதாக  பத்துப்பாட்டு நூலினைக் கொடுத்தார். இந்நூல் பத்துப் பாட்டு குறித்த அடிப்படை புரிதலை உருவாக்கும். . அந்நூலில் இருந்து முல்லைப்பாட்டு. பாடிய புலவர் - காவிரிபூம்பட்டிணத்துப் பொருள்வாணிகனார் மகனார் நப்பூதனார். 103 அடியினைக் கொண்டது. பத்துப்பாட்டிலேயே மிகக் குறைந்த அடியினைக் கொண்ட பாடல்.  இதனை நெஞ்சாற்றுப் படை என்றும் கூறுவார்கள். பத்துப் பாட்டில் சிறியது முல்லை!- இதில் காதல் இன்ப நினைவுகள் கொள்ளை! நூற்று மூன்றே அடிகள் உடையது! - இது நப்பூத னாரின் நயமிகு படைப்பு! அகவல் பாவால் ஆகி வந்தது! - இது அகத்திணை ஒழுக்கம் பேணிக் காப்பது! குறித்த நேரம் தலைவன் வருவான் - எனத் தலைவனை நினைத்து ஆற்றி இருப்பது!