இடுகைகள்

ஜனவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நூல் தொகுப்பு வரலாறு

படம்
தமிழ்ச்சூழலில் பல்வேறு தொகுப்பு மரபுகள் உருவாகி வருகின்றன. ஒரு மையப் பொருண்மையில் அறிஞர்கள் எழுதிய கட்டுரையைத் தொகுப்பது/புதிதாக எழுதி தொகுப்பது என்ற வகையில் அமைகின்றன. இது போன்ற தொகுப்புகள் தமிழியல்/ தமிழ் சமூகச் சூழலைப் புரிந்து கொள்வதறாகான வாய்ப்பும் மறு வாசிப்பு செய்வதற்கான சாத்தியத்தையும் உருவாக்கிறன்றன. அந்தவகையில் பாரதி புத்தகாலயாவின் புதிய புத்தகம் பேசுகின்றது இதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு மலர் ஒன்றினை வெளிய்ட்டு வருகின்றது. இவ்வாண்டு தமிழ்ச் சமூகம் தொகுப்பு மரபினை எவ்வாறு உள்வாங்கி செயல்பட்டிருக்கின்றது என்பதை சங்க காலம் தொடங்கி நவீன காலம் வரையான பதிவாக தமிழ்நூல் தொகுப்பு வரலாறு என்னும் சிறப்பு மலரை வெளிட்டுள்ளது. 12 கட்டுரைகள் மரபிலக்கியத் தொகுப்புகளாகவும் 8 கட்டுரைகள் இருபதாம் நூற்றாண்டு கட்டுரைகளாகவும் 6 கட்டுரை தனிநபர் தொகுப்புகளாகவும் 3 கட்டுரைகள் இயக்கம் சார்ந்த கட்டுரைகளாகவும் 3கட்டுரைகள் நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகளாகவும் மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய மலராக மலர்ந்துள்ளது.

பொங்கல் வாழ்த்துகள்

படம்
அ திகாலை விழித்தெழுந்து மகிழ்வுடன் நீராடி ஆ தித்தன் பட்டொளி கண்டு இ ன்பமுடன் வண்ணமிகு புத்தடை புனைந்து ஈ சன் முன் அழகுமிகு கோலமிட்டு அடுப்பமைத்து நெருப்பூட்டி உ வகையுடன் புதுப் பானையில் திருநீரும் சந்தனமும் குங்கும பொட்டுமிட்டு மாவிலையும் மஞ்சளும் கட்டி ஊ ட்டமுள்ள கணுக்கரும்பின் சாறெடுத்து பாலோடு நெய்மணக்க பச்சரிசி தேன் கலந்து பொங்களும் பொங்கி எ ம் குல தகடூரான் அதியமான் தந்த செங்கரும்பினையும் சுவைத்து ஏ ற்றமிகு சொந்தம் பந்தம் சுற்றமும் குவிந்து கொண்டாடிவோம். ஐ வளமும் பெருக்கிட பொங்கள் திருநாளை பொங்க வைப்போம் செல்வம் தங்க வைப்போம். ஒ ற்றுமை செழிப்புடன் நம் குலம் வளர்ந்திடவே ஆதித்தனை மகிழ்வுடன் வேண்டிடுவோம். ஓ ங்கார ஓசையுடன் நம் வாழ்வு நிறைந்திருக்க வேண்டிடுவோம் ஈசனை. உறவினை ஒன்றினைக்கும் இன் நன்நாளில் இனிமை பொங்கும் பொங்கள் நல் வாழ்த்துக்கள்.

திருவள்ளுவர் சைநர்

திருவள்ளூவர் அறிவுறுத்தியது பொதுநெறி அருணெறி ஜீவகாருண்ய ஒழுக்கம் அந்நெறியை எவர் எப்பெயரிட்டழைப்பினும் அழைக்க. திருவள்ளுவரைச் சைவரெனில், வைணவரெனில் , பிறரெனில் ,அவரது சைவமும் வைணவமும் பிறவும் அருகதேவர் கண்ட அருநெறிபாற் பட்டனவென்க. திருவள்ளுவர் சமயத்தைப் பற்றி இது காறும் எழுந்த ஆராய்ச்சிகள் பல ; வாதப்போர்கள் பல. இந்நூலாசிரியருந் திருவள்ளுவர் சமயம் குறித்து ஆராயப் புகுந்து, தாங்கண்ட முடிவைத் தெரிவித்துள்ளார். இவர் கண்டு தெரிந்த முடிபு திருவள்ளுவர் ஜைன சமயத்தவ ரென்பது. இங்கே ஜைநம்,ஆதியில் - திருவள்ளுவர் காலத்தில் - அவர் பின்னை எவ்வெவ்வாறு மக்களால் கொள்ளப்பட்டது என்று முறையே ஆராய்ந்து முடிபு தெரித்தல் சிறப்பு. அதற்கு அணிந்துரை இடந்தாராதாகலான், சிலவுரை பகர்ந்து, எனது உள்ளக்கிடக்கையை கிளத்த முயல்வல். 1932 இல் திரு.விக எழுதிய கட்டுரையிலிருந்து