பாரதியைப் பற்றிய நினைவலை.....


முண்டாசு கவிஞனாய், விடுதலையில் மூர்கனாய் ,முறுக்கிய மீசையுடன் ,தமிழின் காதலனாய்,தமிழகத்தின் தவப்புதல்வனாய் தோன்றியவன் பாரதி.
சுவை புதிது,பொருள் புதிது வளம்புதிது,
சொற்புதிது,சோதிமிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை
பாரதியுனுடைய கவிதை.

உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப்
புது செறி காட்டியவன் பாரதி

தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்தால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்,
தமிழகம்,தமிழுக்குத் தரும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.

தமிழுக்குப் புத்தொளி பாய்ச்சப் பிறந்தவன் பாரதி எனப் பாடுவர் பாவேந்தர்.

'யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல்
இனிதாவது எங்கும் காணும்'
என்றான் பாரதி,
இன்று அந்த தமிழின் நிலை ,தமிழ் பேசினால் தீட்டு என்று பேசமறுப்போர் பெருபான்மையினராகி விட்டனரே....
தமிழ் நாட்டில் தமிழ் முழங்காமல் தமிங்கிலம் அல்லாவா முழங்கி கொண்டு இருக்கின்றது.
பிற மொழிகளை யாரும் எப்பொழுதும் வெறுக்கவில்லை,பல மொழிகளை அறிந்துகொள்ள வேண்டும்.அது தவறில்லை.நாம் தாய்மொழியை மறவாமல் இருக்க வேண்டும்.

பிற மொழியைத் தவறு இல்லாமல் பேசவேண்டும் என்பதில் எத்தனைக் கவனாமாக

இருக்கின்றோம்.ஏன் தம் தாய் மொழியைத் தவறில்லாமல் பேச வேண்டும் என்பதில் கவனம் கொள்ளவதில்லை.அது தான் வேதனை.

தமிழ மக்களுக்கு இயற்கைக் கடவுள்
நிலமும் வச்சான்,
பலமும் வச்சான்
நிகரில்லா செல்லவமும் வச்சான்
ஒன்று வைக்க மறந்திட்டான்
ஒன்று வைக்க மறந்திட்டான்
அதுதான்
புத்தியில்லை! புத்தியில்லை!
(இதில் நாம் மொழியும் வச்சான் நல்ல தமிழ் மொழியும் வச்சான் சேர்த்துக் கொள்ளலாம்)

என்று பாரதி பாடினான்.இன்றும் அந்நிலையே தொடர்கின்றதே....
பாரதியின் நினைவு நாளில் தமிழராகிய நாம் ஒரு சபதம் ஏற்போம்
தமிழை உயர்த்திட
தமிழனாய் மிளிர்ந்திட
நித்தம் உழைப்போம்...
நிமிர்ந்து நடப்போம்....

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ மக்களுக்கு இயற்கைக் கடவுள்
நிலமும் வச்சான்,
பலமும் வச்சான்
நிகரில்லா செல்லவமும் வச்சான்
ஒன்று வைக்க மறந்திட்டான்
ஒன்று வைக்க மறந்திட்டான்
அதுதான்
புத்தியில்லை! புத்தியில்லை/

உண்மைதான்!
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை! தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் குணா.....
பாரதியின் நினைவு நாளில் தமிழராகிய நாம் ஒரு சபதம் ஏற்போம்
தமிழை உயர்த்திட
தமிழனாய் மிளிர்ந்திட
நித்தம் உழைப்போம்...
நிமிர்ந்து நடப்போம்....
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை பதிவு முனைவர். நன்றிகள் பல.

ஆனால் இன்றும் இளைஞர்கள் இடையே தமிழ் ஆர்வம் உள்ளது, அன்றக்கு இணையத்திற்கும் வலை பதிவிற்கும் நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளோம்.

பல பதிவர்கள் அலுவலகங்களில் பெரிய பொறுப்புகளில் இருந்து, ஆங்கிலத்தில் உரையாடினாலும் வலைப் பதிவில் அழஅகான தமிழில் எழுதி வருகின்றனர்.
.
துபாய் ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு நினைவுப் பதிவு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்