மனித குலத்தின் நம்பிக்கை - டாக்ஸி டிரைவர்

 



          தென் கொரியாவின் அரசியல் சூழல் 1980 இல் மிக கொந்தளிப்பான காலக்கட்டமாக இருந்தது. காரணம் 1979 அக்டோபரில் அதிபர் பார்க் சுங் –ஹீ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து  ஜெனரல் சுன் டூ ஹ்வானின் இராணுவ ஆட்சியும், அடக்குமுறையும், நாடு முழுதும் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் வெடித்தெழுந்தன. குறிப்பாக குவாங்ஜூ பகுதியில் ஏற்பட்ட மக்களெழுச்சி காரணமாக இராணுவம் மக்களை அடித்து கொடுமை படுத்தி,  பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், துப்பாக்கி சூட்டில் பலர் மாண்டனர். இச் செய்தியை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கில் வந்த ஜெர்மன் பத்திரிக்கையாளரை தென்கொரியாவின் நகரமான சியோலில் இருந்து குவாங்ஜூ அழைத்துச் சென்ற ஓட்டுநரின் கதையும் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதனைக் கடந்து அவர்கள் குவாங்ஜூவிலிருந்து எப்படித் தப்பி வந்தார்கள் என்பதைப் பற்றி பேசும் படம் TAXI DRIVER.

தென் கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி டுக்கின் உதவி இயக்குநர் ஜாங் கூன் 2017 இல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்