விடிவுற்று ஏமாக்க......


விடிவுற்று ஏமாக்க என்ற சொல்லிற்குப் பொருள் துன்பம் நீங்கி இன்புறுக என்பதாகும்.பொதுவாக நாம் வழக்கில் என் வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் தீர்ந்து இன்பம் வருமோ தெரியவில்லையே என்று கூறுவது வழமை,அதேபோல எனக்கு எப்பொழுது விடியுமோ,விடிவுகாலம் வருமோ தெரியவில்லையே என்று புலம்புவதையும் கேட்டிருப்போம்.ஆகையால் விடிவு என்பது இருள் நீங்குவதைக் குறிக்கும்.இங்கு குறிப்பாக விடிவு என்ற சொல் துன்பம் நீங்குதலைக் குறிக்கும்.

சங்க நூல்களில் ஒன்றான பரிபாடலில்,மதுரை மக்கள் வையை ஆற்றுக்குப் புனலாடச்செல்லுகின்றனர்,அப்பொழுது அவர்கள் வையை ஆற்றினை நோக்கி,இன்று நீராடி இன்பம் அடைந்து போல என்றும் உன்னை விட்டுப் பிரியாமல் நீராடி துன்பம் நீங்கி இன்புறுவோம் என்று பாடுகின்றனர்.

பேஎம்நீர் வையை,
நின்பயம் பாடி விடிவுற்று ஏமாக்க ;
நின்படிந்து நீங்காம் இன்றுபுணர்ந் தெனவே.(பரிபாடல் 7)

இன்று இச் சொல்லாட்சியை நாம் பயன்படுத்துவதில்லை.எத்தனையோ சொற்கள் நம்மைவிட்டுச் சென்று கொண்டு இருக்கின்றன.

கருத்துகள்

குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
nice, thanks for sharing
சி.கருணாகரசு இவ்வாறு கூறியுள்ளார்…
கட்டுரை சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. பயனுள்ள பதிவு. அருமை.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி ராம்ஜி.....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வர்கைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கருணாகரன் அவர்களே........
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நாலு வரில நச்சுனு இருக்கு
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்........
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் முனைவர் அவர்களே.

ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வரலாறே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது உங்கள் இடுகை.

ஒரு சொல் காணாமல் போகும்போது அதனுடன் சேர்ந்த வரலாறும் வாழ்வுமே தொலைந்துபோகிறது.

நாம் மெல்ல மெல்ல மிகப்பெரும் இழப்புகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
//நாம் மெல்ல மெல்ல மிகப்பெரும் இழப்புகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்//



வாருங்கள் சுப.ந அவர்களே .......ஆம் நம் தமிழிலக்கியத்தில் உள்ள பல சொற்களை இழந்து கொண்டு இருக்கின்றோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்