அம்பல் அலர்


அம்பல் அலர் கௌவை என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.திருக்குறளில் திருவள்ளுவர் அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.சரி அம்பல் அலர் என்றால் என்ன என்று பார்த்தோம் என்றால் தலைவன் தலைவி காதல் கொண்டு ஒழுகும் செய்தி சிலருக்கு மட்டும் தெரிந்தால் அது அம்பல் எனப்படும்.பலர் அறிந்தால் அதற்கு பெயர் அலர் எனப்படும்.இப்பொழுது கூறுகின்றோமே கிசுகிசு என்று அதைதான் முன்பு அம்பல் அலர் என்று பிரித்துக் கூறியிருக்கின்றார்கள்.

அதாவது அம்பல் என்பது மொட்டு நிலை என்றும் அலர் என்பதை மலர்ந்த நிலை என்றும் கூறலாம்.காதல் எப்பொழுது அம்பலாக மாறுகிறதோ அப்பொழுது அது நன்மையில் முடியும் என்ற கருத்தும் பண்டு இருந்துள்ளது.

அம்பலுக்கு உவமை கூறும் போது ஒலி குறைவாக கேட்க கூடிய கோழி,நாரை போன்றவற்றின் சத்ததையும் ,அலருக்கு உவமை கூறுமிடத்து எங்கும் பரவிகாணக்கூடிய சூரியனின் ஒளி,காட்டுத்தீ,அதிர்ந்து கேட்க கூடிய முரசின் ஒலி,களிற்றின் ஆரவாரம்,வீரர்கள் ஆரவாரம்,அருவியின் ஓசை,பறையோசை,போர்கள் ஆரவாரம் போன்றவற்றை உவமையாக கூறுவதாலும் அம்பல் என்பது சிலர் அறிந்த செய்தியாகவும் அலர் என்பது பலர் அறியக்கூடிய செய்தியாகவும் சங்க இலக்கியத்தில் ஆட்சிப்பெற்றுளதை அறியலாம்.நம்முன்னோரின் சொல்லாட்சித்திறத்தையும் எண்ணி வியக்கலாம்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//இப்பொழுது கூறுகின்றோமே கிசுகிசு என்று அதைதான் முன்பு அம்பல் அலர் என்று பிரித்துக் கூறியிருக்கின்றார்கள்.//

நல்ல பகிர்வுக்கு நன்றி
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்...........
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விளக்கம்!
விளக்கத்துக்கு ஏற்ற படம்!
அழகு.!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணா.......
தமிழ் அமுதன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு ! தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி ஜீவன்.........
குமரன் (Kumaran) இவ்வாறு கூறியுள்ளார்…
ஓ. இன்றைக்கு அம்பலம் ஆகிவிட்டது என்று சொல்கிறோமே அது தான் அன்றைக்கு 'அம்பல் ஆகிவிட்டது' என்றனரோ?
அம்பர் முருகன் இவ்வாறு கூறியுள்ளார்…
அம்பல் பற்றிய ஆராய்ச்சி நன்றாக இருந்தது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பூந்தோட்டம் எனும் ஊருக்கு அருகில் உள்ள அழகிய கிராமத்தின் பெயர் அம்பல்.
திருஅம்பர் என்பது தான் பின்னர் மருவி அம்பல் எனும் பெயராயிற்று.
இங்கு அழகிய பழம் பெரும் சிவன் கோயில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது.

இவ்வூரில் நா.தண்டபாணி எனும் தமிழாசிரியர் தமிழ் தொண்டாற்றி வருகிறார்.

முருகன் சுப்பராயன்
கூ . ரஞ்சித் . இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விளக்கமம்மா
நன்றிகளுடன் வாழ்த்துக்கள்..
கூ . ரஞ்சித் . இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விளக்கமம்மா
நன்றிகளுடன் வாழ்த்துக்கள்..
கூ . ரஞ்சித் . இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றிம்மா.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான விளக்கம்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நான் இருக்கும் ஊர் அம்பல் நாகை மாவட்டம்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
எனது ஊர் அம்பல் நா
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
என

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்