தொகைச்சொற்கள்

மூன்று எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்.........


அரசர் ----- சேர ,சோழ , பாண்டியர்

இசை -----மந்தரம் ,மத்திமம்,தாரம்

இடம் ---- தன்மை ,முன்னிலை , படர்கை

இலக்கணை -----இட்டவிலக்கணை ,விடாத இலக்கணை , விட்டும்விடாத இலக்கணை

இனம் ----- வல்லினம் , மெல்லினம் ,இடையினம்

ஈச்சுரன்பிரபுத்துவ சாமர்த்தியகுணம் --- கர்த்தத்துவம்,அகர்த்தத்துவம்,அன்னிய தாகர்த்தத்துவம்

உயிரில் உள்ள தீ --உதரத்தீ ,விந்துத்தீ,சினத்தீ

உலகம் ---பூலோகம் ,பரலோகம்,பாதாளம்

கடுகம் ----சுக்கு,மிளகு,திப்பிலி

காலம் ---இறப்பு ,நிகழ்வு ,எதிர்வு

குணம் ----சாத்விகம்,இராசதம்,தாமதம்

குற்றம் ----- காமம் ,வெகுளி,மயக்கம்

சத்தி ----- இச்சாசக்தி,கிரியாசக்தி,ஞானசக்தி

சாத்திரம் ---- சாங்கியம்,பாதஞ்சலியம்,வேதாந்தம்

சீவதேகம் ---- தூலம்,சூக்குமம்,காரணம்

சுடர் ----- சூரியன்,சந்திரன்,அக்கினி

தமிழ் ----இயல் ,இசை,நாடகம்

தானம் ----- தலைப்படுதானம்,இடைப்படுதானம்,கடைப்படுதானம்

தீ ----- ஆகவனீயம்,தக்கிணாக்கினீயம்,காருகபத்தியம்

தொழில் ----- ஆக்கல் ,அழித்தல்,காத்தல்

நூல் ---- முதல் ,வழி ,சார்பு

பலை ----- கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய்

பாவபுண்ணிய வழக்கம்--- செய்தல்,செய்வித்தல்,உடன்படுதல்

பாவினம் ---- தாழிசை ,துறை ,விருத்தம்

பிணி --- வாதம் ,பித்தம் ,கபம்

பேதம் ---சுகபேதம் ,சுசாதிபேதம் ,விசாதிபேதம்

பொறி ---- மனம்,வாக்கு ,காயம்

மண்டலம்-----அக்கினிமண்டலம்,இரவிமண்டலம்,சந்திரமண்டலம்

மலம் ----ஆணவம்,கன்மம் ,மாயை

முக்கனி----- கதலி,மா,பலா

முக்தி விக்கினம் ----அறியாம்,ஐயம்,திரிபு

மும்மை ----உம்மை ,இம்மை,மறுமை

மொழி ----- மெய்கூறல்,புகழ் கூறல் ,பழி கூறல்

பொருள் ---- பதி,பசு ,பாசம்

விஷயம் ----- பிறிதிவிஷயம்,துவேக்ஷா விஷயம்,உபேக்ஷாவிஷயம்

-------------------------தொடரும்

கருத்துகள்

சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
மும்மூன்று தொகைச்சொற்கள்...

அழகு..
அருமை..
அப்பப்பா..
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் சுப.நற்குணன் ஐயா அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.......இன்னும் 4,5 எனத் தொடர்ச்சியாக தொகைச்சொற்கள் உள்ளன தொகுத்துத் தருகின்றேன்......
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றிகள் பல. மிகவும் பயன் உள்ள பதிவு.

இப்பொழுது புரிந்து படிப்பதால் இலக்கணம் இனிமையாக உள்ளது.

முன்பு மதிப்பெண்களுக்காக மனம் ஒன்றாமல் படித்தோம்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம்ஜி ......
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
இதுவும் அருமை...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்.......

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்