திருக்குறள் வகுப்பு



தஞ்சாவூர் உலகத் திருக்குறள் சார்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ,தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் திருக்குறள் வகுப்பு நடைப்பெற்று வருகின்றது. பல்வேறு தமிழறிஞர்கள் இவ் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.
பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிமணியம் அவர்கள் மக்களிடம் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாடம் நடத்துகின்றார்கள்.இவர் பல்வேறு திருக்குறள் உரைகளை ஒப்பிட்டு , சிறந்த உரை,அக்குறளுக்குப் பொருத்தமாக அமைந்த உரைகளைக் கூறி, குறளுக்குப் பொருத்தமான நடைமுறை வாழ்வியல் செய்திகளையும் கூறுகின்றார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வகுப்பு கடந்த ஞாயிறு 12.4.2009 அன்று 100 அதிகாரத்தைத் தொட்டது.அதனால் இதனை ஒரு சிறு விழாவாக அமைத்திருந்தார்கள்.அவ்விழாவில் பண்புடைமை அதிகாரத்திலிருந்து ஐந்து குறட்பாக்களைப் பேராசிரியர் கு.வெ.பா.நடத்தினார்கள்.ந.மு.வேங்கடசாமி தாளாளர் பேராசிரியர் பி.விருதாச்சலம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.







கருத்துகள்

ஜகதீஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்க உம் தமிழ்த் தொண்டு.தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்
ஜகதீஸ்வரன்
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்வு..

நன்னாள் வாழ்த்துக்கள் அம்மா.

கடைசி புகைப்படத்தில் இருப்பது நீங்களா?
malarvizhi இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம், உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.திருக்குறள் வகுப்பு முடிந்து தற்போது அங்கே புறநானூறு வகுப்பு நடைபெறுகிறது.அதில் என் தந்தை 'குறள் நெறி செல்வர்' திரு அர .தங்கராசன் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்