வால்காவிலிருந்து கங்கை வரை.....

நீண்ட நாட்களாக படிக்கவேண்டும் எண்ணிக்கொண்டிருந்த நூல் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூல். அண்மையில் அந்நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.கோவை சென்றிருந்த பொழுது தோழி மணிமேகலை நூலினைக்கொடுத்தார்.

இந்நூலினை கண.முத்தையா அவர்கள் தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்துள்ளார்கள்.இதுவரை இந்நூல் 28 பதிப்புகளைக் கண்டுள்ளது. தமிழ்ப்புத்தகாலயம் வெளியீடாக வந்துகொண்டு இருக்கின்றது.

நூலின் நுவல் பொருள் கதையாக இருந்தாலும்,கற்பனையாக இருந்தாலும்,ஒரு சமுதாயம் என்பது இப்படி தான் உருவாக்கியிருக்க வேண்டும் என்னும் கருதுகோளை வைத்துக்கொண்டு அதனை நோக்கியே நகர்த்திச் செல்லுகின்றார் ஆசிரியர்.

தனி மனிதன் மட்டுமல்லாமல் ஒரு சமுதாயத்தின் படிநிலைகளையும் ,சமுதாயத்தில் மெல்ல மெல்ல நிகழ்ந்ந மாற்றத்தினையும் சுட்டிக் காட்டுக்கொண்டே செல்லுகின்றார்.

இந்நூல் புனைவாக இருந்தாலும் தர்க்க ரீதியாக,வரலாற்று நோக்கிலும் சில உண்மைகள் முன்வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

20 தலைப்பில் கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. ஆரம்பக் கதைகளான நிஷா,திவா,அமிர்தாஸ்வன்,புருகூதன் என்ற நான்கு கதைகளும் கி.மு.6000 இல் இருந்து 2500 வரை உள்ள சமுதாயத்தினைச் சித்தரிக்கின்றது.இதில் கூறப்பட்டவைகள் எல்லாம் உண்மையாக இருக்குமா என்று எண்ணினால் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

வேட்டைச் சமுதாயம் இருந்த பொழுது பெண்ணே எல்லவற்றிலும் முதன்மையாக இருந்துள்ளாள்.தாய்வழிப்பட்ட சமுதாயமே முன்னால் இருந்துள்ளது.இது மெல்ல மாற்றத்துக்கு உட்பட்டு தந்தைவழி சமூகமாக மாறுகின்றது.இதனை மையமாக வைத்தே கதையினை நகர்த்திச் செல்லுகின்றார்.

முதல் கதையில் வரும் நிஷா அவளுடைய வீரம் குடும்பத்தை வழிநடத்தும் பாங்கு,அதே நேரத்தில் தனக்கு அடுத்த நிலையில் தன் மகளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அவளை அழிக்கும் நிலை இது புனைவாக தோன்றவில்லை. வால்கா நதிக்கரையில் இருந்து தொடங்கும் கதை ,அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்திய எல்லைக்குள் வரும்பொழுது இங்கு மக்கள் நாகரிக நிலையில் இருப்பதைக் காட்டுகின்றார்.

ஆரியர் கலப்பு,இஸ்லாமியர் கலப்பு ,ஆங்கிலேயர் கலப்பு எனப் படிப்படியாக விரித்துச் செல்லுகின்றார் ஆசிரியர்.கி.பி.1942 வரை நீண்டு முடிகின்றது.
வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.

கருத்துகள்

SUREஷ்(பழனியிலிருந்து) இவ்வாறு கூறியுள்ளார்…
மின்னூல் தொடுப்பு ஏதாவது இருந்தால் கொடுங்களேன்..,
அண்ணாமலையான் இவ்வாறு கூறியுள்ளார்…
ஓக்கே..ட்ரை பன்றேன்..
கண்மணி/kanmani இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாம்.தெரிந்து கொள்ளலம்.பெயர் கேள்விப் பட்டிருக்கிறேன்.படிக்கும் அளவு பொறுமையில்லை.சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க சுரேஷ்.உங்கள் வருகைக்கு நன்றி மின் தொகுப்பாக இந்நூல் வரவில்லை என்று எண்ணுகிறேன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க அண்ணாமலையான் உங்களைப் பற்றி கேட்டு இருந்தேன் கூறவில்லையே.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க கண்மணி உங்கள் வருகையால் மகிழ்ந்தேன்.மிக நல்ல நூல் முடிந்தால் படித்துப் பாருங்கள் இப்படியும் இருந்திருக்குமா?என்று வியந்து போவீர்கள்.விரிவாகவும் எழுதுகின்றேன் .நேரமில்லை.
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல நூலறிமுகம்.
mohamedali jinnah இவ்வாறு கூறியுள்ளார்…
I have republished your article without getting your apprvel in my site http://seasonsnidur.wordpress.com/வால்காவிலிருந்து கங்கை வரை…..by முனைவர் கல்பனாசேக்கிழார்
To cotinue I need your kind permission and awaiting for your mail.
nidurali@gmail.com
please visit:-பாருங்கள்

* NIDUR SEASONS
* nidurseasons.com
* seasons nidur (wordpress)
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணா...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க நீடூர் அலி உங்கள் வருகையால் மகிழ்ந்தேன் நன்றி....
Suriya Kumar P இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த புத்தகத்தை முதல் முறை பாதிதான் படித்தேன், சமீபத்தில் நண்பர்களுடன் நடந்த உரையாடலின் பின் இப்பொழுது முழுவதுமாக படித்து முடிக்க படித்துகொண்டிருக்கின்றேன். இந்த புத்தகத்திலுள்ள விஷயங்கள் அலசி ஆராய நிறைய படிக்க, விவாதிக்க வேண்டுமென்பது தெளிவாகியிருக்கிறது. உதாரணமாக முதல் கதையிலேயே, தாய் வேட்டைக்கு குகைக்குள் சென்று திரும்பி வந்து குகையின் வாசலில் காத்திருக்கும் தனது குடும்பத்தினரிடம் உள்ளே மூன்று கரடிகள்( ஒரு ஆண், ஒரு பெண், ஒரு குட்டி) உள்ளன என்பதை சொல்ல மூன்று விரல்களை காட்டுவதாக சொல்கிறார். இந்த கதை நிகழும் காலம் கி மு 6000 அப்பொழுதே எண்களை பற்றிய அறிவு அவர்களிடம் இருந்ததா என்பன போல?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்