உணவு எப்படி இருந்தால் என்ன?

குழந்தைகளின் ராஜாவான ரோஜா சூடிய முன்னால் பிரதமர் ஜவர்கலால் நேரு ஒருமுறை சுதந்திரப்போராடத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அப்பொழுது உணவில் ஏராளமான கற்கள் இருந்தன என்று சிறைவாடனிடம் புகார் செய்துள்ளார்.


சிறைவாடன் நேருவை கிண்டல் செய்யும் முகமாக ' சுதந்திரப் போராட்டக் கைதியாக நீங்கள் வந்திருக்கிறீர்கள் .உங்களுக்கு உணவில் கல் இருப்பது பெரும் பிரச்சனையா? இந்த நாட்டை நேசித்து தானே நீங்கள் இங்கு வந்தீர்கள் என்று நான் நினைத்தேன் ' என்றார்.

நேரு அவருக்குச் சரியான பதிலடி கொடுக்க எண்ணி 'நாங்கள் எங்களது நாட்டையும் மண்ணை நேசிக்கின்றோம் என்பது உண்மையே ! அதனால் தான் அந்த மண்ணைத் தின்பதற்கு நாங்கள் விரும்பவில்லை ! என்றார்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//அதனால் தான் அந்த மண்ணைத் தின்பதற்கு நாங்கள் விரும்பவில்லை ! என்றார்.//

அருமை...
jananidevaki இவ்வாறு கூறியுள்ளார்…
நேரு பற்றி தங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நன்றாக உள்ளன. செய்தியின் இரண்டாம் பத்தியில் நேரு என்று இருப்பதற்குப் பதிலாக சேரு என்று தவறுதலாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளது,வழக்கம்போல் என் கண்ணில் அகப்பட்டுவிட்டது,கவனிக்கவும்.
தென்னவன். இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா இருக்குங்க...
இத மட்டும் திருத்திடுங்க...
தப்பா எடுத்துக்காதிங்க ... :)

/*சேரு அவருக்க் சரியான பதிலடி கொடுக்க*/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்