வள்ளுவர் கண்ட சமுதாயம்....

இன்றைய நாள்களில் மனிதன் சாதி,மதம் என்னும் தளையினால் கட்ப்பட்டு,சுயசிந்தனை இன்றி தம் மதம் பெரிதென எண்ணுவதும்,அதற்காக தீவிரவாதத்தைக் கையில் எடுப்பதும் வழக்கமாகிவிட்ட ஒன்றாகிவிட்டது.இதனால் என்ன பயன் விளைகின்றது என்பதனை யாரும் சிந்திப்பதில்லை.ஒவ்வொரு மலருக்கும் மணம் வேறுபடுவது போல ,ஒவ்வொரு சமயங்களின் புறம் வேறுபட்டிருந்தாலும் ,மணம் என்பது பொதுவானது போல அச்சமயங்கள் கூறும் அடிப்படைப்படை அழ்பொருள் ஒன்றுதான்.இதனை நாம் மறக்கிறோம்,மறுக்கிறோம் அதனால் பல பூசல்களும்,மோதல்களும்,உயிர்வதைகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையினைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை
தாம் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பத்திலும் இறைவனைப் பற்றிய எந்த குறிப்பும் தரவில்லை.(கடவுள் வாழ்த்தினை வள்ளுவர் பாடவே இல்லை என்று சிலர் கூறுவர்)பத்துப்பாடல்களில் ஏழு இடங்களில் இறைவனின் அடி சிறப்பை கூறிகின்றாரே ஒழிய கடவுளின் முகத்தினைக் கூறினாரிலர்.நற்றாள்(2),மாண்டி(3),இலானடி(4),தாள்சேர்ந்தார்(7,8),தாள்(9),இறைவனடி(10)

முதல் பாடலில் வரும் பகவன் என்று வரும் சொல் சமணசமயக் கடவுளான அருகனைக் குறிக்கும் அதனால் அவர் சமணசமயத்தவர் என்ற வாதத்தினை முன் வைப்பர்.பிறர் குறள் எங்கள் நமயத்திற்கு உரியது என வருந்து கட்டிக்கொண்டு எழுதுகின்றனர்.அவரர் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கின்றது.தேவநேயப்பாவாணர் பகலவன் எனக்கொண்டு,என்றும் உதிக்கும்,எல்லாருக்கும் பொதுவான ,ஒளியினை வழங்க கூடிய சூரியன் எனக்கொள்ளுவர்.இக் கருத்து ஏற்புடையதாக தானே உள்ளது.

இவற்றையெல்லாம் நாம் மறக்கின்றோம்.சாதி,மதங்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நமக்கு பெரும் பங்கு இருக்கின்றது.மாற்றம் மெல்ல மெல்ல தான் நிகழும் .அதற்கு நாம் முயலலாமே.வள்ளுவர் கண்ட சமுதாயத்தை மெய்பித்துக் காட்டி வாழ முயற்சி செய்யலாமே.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கருத்துள்ள் இடுகை....
குட்டிபிசாசு இவ்வாறு கூறியுள்ளார்…
தெய்வத்தால் ஆகாதெனினும் என்று கடவுளையே பின்னுக்குத் தள்ளும் துணிச்சல் திருவள்ளுவருக்கு மட்டுமே உண்டு. நல்ல கருத்து. வாழ்த்துக்கள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்