மலையின் வகை.......


சங்க இலக்கியப் பாடல்களில் இயற்கையைப் பற்றிய வருணனை பெருமளவில் காணக்கிடக்கின்றன.இவ்வருணனைகளில் குறிஞ்சி நிலப்பகுதியான மலையைப் பற்றிய வருணனையும் இடம் பெற்றுள்ளது.நம் முன்னோர் மலையின் தோற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பெயரினை இட்டு மகிழ்ந்து பயன்பாட்டில் பயன்படுத்தியுள்ளனர்.

அடுக்கம்,குன்று ,ஓங்கல்,வெற்பு,சிலம்பு,கல்,வரை எனப் பல பெயர்கள் வழங்கப்பெற்றாலும் இவற்றிற்கு இடையே சிறுசிறு வேறுபாடு உண்டு.

அடுக்கம் என்பது மலை பக்கத்தைக் குறிக்கும்.அதாவது அடுக்கம் போன்று தோன்றும் பகுதியைக் குறிக்கும்.

குன்று என்பது குறுகிய மலையைக் குறிக்கும்.குறு என்பது மெல்லின னகரம் பெற்று குன்று ஆயிற்று என்பர்.

ஓங்கல் என்பது ஓங்கிய மலையினைக் குறிக்கும்.

வெற்பு என்பது மிகு உயர்ந்து பிற மலைகளை வென்று நிற்பது.பல மலைகள் சூழ்ந்திருக்கும் போது ஒரு மலை மட்டும் உயர்ந்து காணப்பெறுவது.

சிலம்பு என்பது மலையில் எதிரொலி கேட்கும் பகுதியைக் குறிக்கும்.

கல் என்பது கற்கள் அதிகம் நிறைந்த மலைப் பகுதியாக இருப்பது.

வரை என்பதற்கு சுவர் போல் நிலத்தை வரையறுக்கும் மலை எனப் பொருள் கூறுவர் பாவாணர்.


மலைக்கு இத்தனைச் சொற்களை நம் முன்னோர் பயன்படுத்தியிருக்க நாம் இன்று மலை என்ற ஒரு சொல்லினை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தனித்தமிழில் பேசத் தயங்கும் தமிழர்களுக்கு நல்ல தமிழ்ச்சொற்களின் அறிமுகமாக இவ்விடுகை அமையும்...
இன்னும் பல சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வாருங்கள் முனைவரே...
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
தெரிந்துக்கொண்டேன்....மிக்க நன்றிங்க
சப்ராஸ் அபூ பக்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
மலைக்கு இவ்வளவு பெயர்களா?.....

தேவையான ஒரு பதிவு கொடுத்தீர்கள்..... வாழ்த்துக்கள்.....
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
மலை
பற்றி
மணியான
செய்திபடித்து
மலைத்தேன்..!

நன்றி முனைவருக்கு.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முனைவர் குணா அவர்களே.........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சேகரன் அவர்களே.......
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி அபூ அவர்களே........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுப.ந அவர்களே......
கோவி.மதிவரன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் வாழ்க
மலைகளில் இத்தனை வகையா ?

என்னே தமிழின் சிறப்பு ... நமக்கெல்லாம் பெரும் வியப்பு
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோவி.மதி அவர்களே..........
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இவ்விடுகை தமிழிஷில் பிரபலமான இடுகையானதற்கு வாழ்த்துக்கள்!!!!!!!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணா.......
வாய்மை இளஞ்சேரன் இவ்வாறு கூறியுள்ளார்…
இவ்விடுகையினால் நீங்கள் என் ஆசிரியர்.நன்றி.வாய்மைஇளஞ்சேரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்