தொகைச்சொற்கள்

ஆறு எண்ணிக்கையில் அமைந்து தொகைச்சொற்கள்.....




அங்கம் ------ படை,குடி,கூழ்,அமைச்சு,நட்பு,அரண்

அந்தணர் தொழில் ------ ஓதல்,ஓதுவித்தல்,வேட்டல்,வேட்பித்தல்,ஈதல்,ஏற்றல்

அரசர் தொழில் ------ ஓதல் ,வேட்டல்,ஊதல்,ஓம்பல்,படையைப் பயிற்றல்,போர்செய்தாடல்

அரசியல் ------ அறநிலையறத்,மறநிலையறம்,அறநிலைப்பொருள்,மறநிலைப்பொருள்,அறநிலை இன்பம்,மறநிலை இன்பம்

ஆதாரம் ----- மூலம்,சுவாதிட்டானம்,மணிபூரகம்,அனாதகம்,விசுத்தி,ஆஞ்சை

ஈச்சுரன் முக்கிய குணம் ----- சருவஞ்ஞத்துவம்,சருவேச்சுரத்துவம்,சருவநியத்திருத்துவம்,சருவாந்தரியாமித்துவம்,சருவகன்மத்துவம்,சருவசத்தித்துவம்

உட்பகை ----- காமம்,குரோதம்,உலோபம்,மோகம்,மதம்,மாற்சரியம்

உவர்ப்பு ----- ஆசியம்,இரதி,ஆரதி,சோகம்,பயம்,குற்சிதம்

சக்கரவர்த்திகள் ----- அரிச்சந்திரன்,நளன்,முசுகுந்தன்,புருகுச்சன்,புரூரன்,கார்த்தவீரியன்

சாத்திரம் ----- வேதாந்தம்,வைசேடியம்,பாட்டம்,பிரபாகரம்,பூர்வமீமாஞ்சை,உத்தரமீமாஞ்சை

சிறுபொழுது ----- மாலை,யாமம்,வைகறை,விடியல்,நண்பகல்,எற்பாடு

சுவை ----- கைப்பு,தித்திப்பு,புளிப்பு,உவர்ப்பு,துவர்ப்பு,கார்ப்பு

தானை ---- தேர்,பரி,கரி,ஆள்,வில்,வேல்

நாட்டமைதி ----- செல்வம்,விளைவு,செங்கோல்,வளம்,குறும்பின்மை,நோயின்மை

பருவகாலம் ----- கார்,கூதிர்,முன்பனி,பின்பனி,இளவேனி,முதுவேனி

புறச்சமயம் ----- உலகாயதம்,பௌத்தம்,ஆருகதம்,மீமாம்சம்,மாயாவாதம்,பஞ்சராத்திரம்

வைசியர்தொழில் ----- ஓதல்,வேட்டல்,ஈதல்,ஈட்டல்,பசுவைக்காத்தல்,ஏருழுதல்

ருதுக்கள் ---- சித்திரை வைகாசி- வசந்தருது,ஆனி ஆடி - கிரீஷ்மருது, ஆவணி,புரட்டாசி -வருஷருது,ஐப்பசி,கார்த்திகை - சாத்ருது,மார்கழி,தை - ஏமாந்தருது மாசி,பங்குனி - சிசிரருது

-----------------------தொடரும்

கருத்துகள்

சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவர் அவர்களே, வணக்கம்.

ஆறன் தொகைச்சொற்கள்
அறுசுவை மட்டுமல்ல
அருஞ்சுவை.. - நறுந்
தமிழ்ச்சுவை..!
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவர் அவர்களே,

தொல்காப்பியம் சொல்லும் அறிவுநிலையும் ஆறல்லவா?

நினைவைத் தட்டியது..!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சப.ந.அவர்களே,ஆம் தொல்காப்பியர் சுட்டும் நிலையும் ஆறுதான்.நினைவூட்டலுக்கு மிக்க நன்றி........
குறை ஒன்றும் இல்லை !!! இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தகவல்கள் .. நன்றி. வாழ்க ...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
//நல்ல தகவல்கள் .. நன்றி. வாழ்க ...//



உங்கள் வருகைக்கு நன்றி......

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்