பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம்

பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம் பார்வை சரியாக இருந்தால் என்பர் புலவர் இரா.இளங்குமரனார்.ஆம் நம்மை சுற்றி ,நாம் காணும் இடங்கள் அனைந்துமே நமக்கு ஏதோ ஒரு வகையில் பாடங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.அண்மையில் தஞ்சைக்கு அருகில் உள்ள ஒக்கநாடு கீழையூர் என்னும் ஊரில் 80 வயது மதிக்கதக்க

பெண்மணியைச் சந்தித்தேன்.அவர் 1920 இல் பர்மாவிலிருந்து இந்த ஊருக்கு வந்தவர்.அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அங்கு 8ஆம் வகுப்பு வரை படித்ததை நினைவு கூர்ந்தார்கள்.அவர்களிடம் பல செய்திகளை அறிந்து கொண்டேன்.பள்ளிக்குப் போனப் பின்னும் உணவு இடைவெளியின் போதும் ,மாலை வீடி திரும்பும் பொழுதும்,ஆசிரியர்களை எவ்வாறு வணங்கி விடைபெறுவார்கள் என்பதைக் கூறினார்கள்.இந்த வயதிலும் அவர்கள் படித்த

குமரேச வெண்பா ,நீதி நெறிகள்,கம்பராமாயணம் போன்றவற்றை நினைவி நிறுத்தி நன்கு கூறுகின்றார்கள்.அதற்கு அவர்கள் கூறும் காரணம் சிறுவயது முதற்கொண்டே பாடங்களை நன்கு மனனம் செய்ததே என்கிறார்.உரு போடாத மனம் உருப்படாது என்பார்கள் அது உண்மை தான் .ஆனால் இன்று மனனம் செய்வதே குறைந்து வருகிறது.

காலை வந்தவுடன்

காலையில் எழுந்திருந்து
கால்கை சுத்தம் செய்து
கோலமா நீர்கள் பூசி
குழந்தைகள் பசிகள் ஆற
பாடமும் படிக்க வந்தோம்
படியடி வாங்கி வந்தோம்
சீழனே அனுப்புமையா
திருவடி சரணம் தானே

உணவு இடைவெளிக்குச் செல்லும் முன்

சட்டம் சிரவே தானெழுதி
சரியா லக்கம் தொகை கூட்டி
இட்ட கணக்கும் வாசகமும்
எல்லா கணக்கும் தெரிந்து கொண்டோம்
பட்ட பகலே அடிதிரும்பி
பசியால் நாங்கள் வருந்துகிறோம்
திட்டம் பார்த்து அனுப்புமையா
திருவடி சரணம் தானே.

மாலை வீடு திரும்பும் முன்

அந்திக்குப் போறோம் நாங்கள்
அகத்தினில் விளையாடாமல்
சிந்தையாய் விளக்கு முன்னே
சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து
வந்த்து வராத்து எல்லாம்
வகையுடன் படித்துக் கட்டி
தொண்டமான் கோழி கூவ
கூப்பிட வாரோமையா
திருவடி சரணம் தானே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்