முதலாமாண்டு- இரண்டாம் பருவம்
பன்னிரு திருமுறைகள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு அருளப்பெற்ற பாடல்கள். வினாயகர், முருகன் பற்றிய சில பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்களை அருளியவர்கள் நாயன்மார்கள் ஆவார்கள்.
இவை 12 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன அந்தப் பெரும் பிரிவுகளுக்கு உள்ளே 1,254 தலைப்புகள் உள்ளன. மொத்தம் 18,246 பாடல்கள். இவற்றுள் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடியவை தேவாரம் என்னும் தொகுப்பாகும்.
தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றது. 10 ஆம் நூற்றாண்டு வாக்கில், இராஜராஜ சோழன் காலத்தில், சிதம்பரம் கோயிலிலே திருமுறைச் சுவடிகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு, அழிந்தது போக மீண்டும் கிடைத்தவற்றை, நம்பியாண்டார் நம்பி என்னும் அடியவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருமுறைப் பாடல்களைப் பண் (இசை) வாரியாகப் பிரிப்பது, தலம் வாரியாகப் பிரிப்பது, பாடியவர்கள் சென்று வந்த வரலாற்றின் படி பிரிப்பது, என்று பல வகைகளில் பிரித்து அச்சிடுவது வழக்கம். தேவார, திருமுறைப் பாடல்களைப் பண்ணுடன் (இசையுடன்) பாடுவது மரபு.
பதிகம் என்றால் 10 பாடல்கள் கொண்டது என்றும், ஒரு பதியின் (தலத்தின்) மேல் பாடப்பட்டது என்றும் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு ஊரில் இருக்கும் இறைவன் மீதும் பாடல் பாடி, சைவம் தழைக்க நாயன்மார்கள் வழிவகுத்தார்கள். பாடல்களில் ஊரில் உள்ள ஆறு, இயற்கை வளம், மரங்கள், இசை முதலிய குறிப்புகள் நிறையக் கிடைக்கின்றன.
திருமுறைகள் 1, 2, 3 - இவை திருஞான சம்பந்தர் அருளியவை.
திருமுறைகள் 4, 5, 6 - இவை அப்பர் அருளியவை.
திருமுறை 7 - இதனைச் சுந்தரர் அருளினார்.
திருமுறை 8 - திருவாசகம், திருக்கோவையார். இவை மாணிக்கவாசகர் பாடல்கள்.
திருமுறை 9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. இதனைப் பாடியவர்கள்: திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர்.
திருமுறை 10 - திருமந்திரம். திருமூலர் பாடல்கள்.
திருமுறை 11 - பிரபந்தங்கள். இதனைப் பாடியவர்கள்: திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமான் நாயனார், நக்கீர தேவ நாயனார், கல்லாடதேவ நாயனார், கபிலதேவ நாயனார்,
பரணதேவ நாயனார், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி.
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான். இவை 63 நாயன்மார்களின் சரித்திரமும், 9 தொகை அடியார்களின் பெருமையும் கொண்ட நூல் ஆகும். அநபாய சோழன் என்ற மன்னன் சேக்கிழாரைக் கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தை அரங்கேறச் செய்தான். அதைப் 12ஆவது திருமுறை ஆக்கினான்.
சைவநெறி தழைத்தோங்க பாடுபட்டவர்களில் தேவார மூவரின் பங்களிப்பு பெரிதாகும். இவர்கள் தந்த பண்சுமந்த பாடல்கள் தோத்திரப் பாக்களாக உள்ளன. இவர்கள் பாடிய தலங்கள் திருமுறைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தேவார மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அழைக்கப்படுகின்றனர். தேவார மூவரில் இளம் வயதிலேயே தெய்வ அருள் பெற்று பாடல்களை இயற்றியவராகத் திருஞானசம்பந்தர் விளங்குகிறார்.
பிறப்பு:
சோழ நாட்டில் பிரமபுரம், வேணுபுரம், காழி என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழியில் சிவபாத இருதயாருக்கும், பகவதியம்மாளுக்கும் மகனாக கி.பி. 637 ஆம் ஆண்டு சம்பந்தர் பிறந்தார்
ஞானப்பால் உண்டல்:
ஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது அவரது தந்தையார் சம்பந்தரைத் தோணியப்பர் ஆலயக்குளக்கரையில் அமரவைத்து விட்டுக் குளிக்கச் சென்றார். நீருக்குள் மூழ்கி தந்தை மந்திர உரு செய்தார். நெடுநேரமாகியும் தந்தை வராதலால் சம்பந்தர் அழுதார். அப்பொழுது திருத்தோணி நாதர் உமாதேவியுடன் காளை வாகனத்தில் எழுந்தருளினார். உமாதேவியார் தன் கையில் வைத்திருந்த அமுதப்பாலை ஞானசம்பந்தருக்குக் கொடுத்தார்.
குளித்துவிட்டு வந்த சிவபாதர் தன் குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைப் பார்த்த போது, யார் கொடுத்தது என்று வினவினார். ஞானசம்பந்தர் தோணியப்பரைக் காட்டினார். அப்பொழுது ஞானசம்பந்தர் “தோடுடைய செவியென்” என்ற நட்டபாடை பண்ணில் அமைந்த முதற் பதிகத்தைப் பாடியருளினார்.
பொற்றாளம் பெறுதல்:
உமையம்மை அளித்த ஞானப்பாலை உண்ட பிறகு சம்பந்தர் இறைவன் மீது தலந்தோறும் சென்று பதிகங்களைப் பாடிட புறப்பட்டார். திருக்கோலக்காதலம் வந்தார். கையால் தாளமிட்டுக் கொண்டு பாடினார். கைநோக தாளமிடுவதைக் கண்ட திருக்கோலக்கா இறைவன் சம்பந்தருக்குப் பொற்றாளம் கொடுத்தார். அந்த தாளத்திற்கு உமையம்மை ஓசைக் கொடுத்தார். இதனால் திருக்கோலக்கா இறைவன் திருத்தாளமுடையார் என்றும், அம்மை ஓசைக்கொடுத்த நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
திருநீலகண்ட யாழ்ப்பாணரின் நட்பையும் பெற்றார். இவரோடு தலங்கள் பலவற்றிற்குச் சென்று அவ்வவ் தல இறைவனைப் பாடிப் புகழ்ந்தார். திருநெல்வாயில் என்ற தலத்திற்குச் சென்ற பொழுது இறைவன் அங்குள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி, ஞானசம்பந்தன் இங்கு வந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு முத்துச்சிவிகை, குடைச்சின்னம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவரை அழைத்து வருமாறு பணித்தார். அவர்களும் இவற்றைச் சம்பந்தருக்கு வழங்கினர்.
உபநயனச்சடங்கு:
திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கிற்று. இவரது தந்தை சம்பந்தருக்கு உபநயனச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தார். உபநயனநாளில் மறையோர்கள் பல வேதங்களை ஓதி, முப்புரி நூலை அணிவித்தனர். அப்பொழுது மறையோர்கள் தமக்கு ஏற்பட்ட சந்தேகத்தைச் சம்பந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். மந்திரம் தோன்றுவதற்குரிய மூலமந்திரம் எது என்று மறையோர்கள் வினவிய பொழுது “மந்திர நான் மறையாகி வானவர்” என்ற திருப்பாட்டின் மூலம் திருவைந்தெழுத்தே மூலமந்திரம் எனச் சிறப்பாக எடுத்துரைத்தார். முயலகன் நோய் தீர்த்தல்: ஞானசம்பந்தர் நாவுக்கரசருடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடிப் போற்றினார். மழநாட்டில் காவிரியின் வடகரையிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்த போது அங்குள்ள கொல்லி மழவனின் புதல்வி முயலகன் என்னும் கொடிய நோயால் வருந்தி, கோவில் சந்நிதியிலே உணர்வின்றிக் கிடந்தாள். இதனை அரிந்த சம்பந்தர், “துணிவளர் திங்கள் துளங்கி விளங்க” என்று தொடங்கும் பதிகத்தைப்பாடி அப்பெண்ணின் நோயை அகற்றினார்.
யாழ்மூரி பாடியமை:
ஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடினார். சம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த தலமான தருமபுரத்தையடைந்தார். அப்பொழுது திருநீலகண்டரின் உறவினர்கள் தங்கள் யாழ் வாசிப்பினால் தான் ஞானசம்பந்தரின் பாடல்கள் சிறக்கின்றன என்று கூறினர். இதைக் கேட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தரை வணங்கி, தாங்கள் யாழில் வாசிக்க இயலாத ஒரு பதிகத்தைப் பாடி அருள வேண்டும் என்று கூறினார் சம்பந்தர்.
சம்பந்தர் “மாதர்மடப்பிடியும் மட அன்னமு மன்னதோர்” என்று தொடங்கும் பதிகம் பாடினார். அப்பாடலை யாழில் வாசிக்க இயலாமல் போகவே யாழை முறிக்க முற்பட்ட போது, சம்பந்தர் அதனைத்தடுத்து இது இறைவனின் செயல் என்று கூறினார்.
வாசித்தீரக் காசு பெறுதல்:
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவீழிமிழலைச் சென்ற போது, அங்கு கடும் பஞ்சம் நிலவியது. அப்பொழுது திருநாவுக்கரசருக்கு உடனுக்குடன் இறைவன் பொற்காசுகளை வழங்கி வந்தார். ஆனால் சம்பந்தருக்குப்படிக்காசு வழங்குவதில் காலம் தாழ்த்தி வந்தார். அதனை நினைத்து சம்பந்தர் குறிஞ்சிப்பண்ணில் அமைந்த “வாசி தீரவே காசு நல்குவீர்” என்ற திருப்பதிகம் பாடி நற்காசு பெற்று அடியவர்களுக்கு அமுதளித்தார். மேலும், சம்பந்தருக்கு இறைவன் திருவீழிமிழலைக் கோயில் விமானத்திலே திருத்தோணிப் புரத்தைக் காட்டியருளினார். இன்றும் இவ்விமானத்தில் இக்காட்சி காணப்படுகின்றது.
அற்புத நிகழ்வுகள்:
ஞானசம்பந்தர் பாம்பு தீண்டப்பெற்று இறந்த வணிகனை “சடையா யெனுமால் சரண் நீ யெனுமால்” என்னும் பதிகம் பாடி எழுப்பிவித்தார். திருமறைக்காட்டில் மறைகளால் மூடப்பட்டிருந்த மறைக்கதவத்தைத் திருநாவுக்கரசர் திறக்கவும், சம்பந்தர் மூடவும் பாடினர். இத்தலத்தில் பியந்தைக்காந்தாரப் பண்ணில் அமைந்த கோளறு பதிகம் பாடினார்.
மங்கையற்கரசியாரின் அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்றார். ஆலவாய் இறைவனைப் பணிந்தார். வாதுக்கு வந்த சமணர்களோடு அனல்வாதம் புனல்வாதம் செய்து வெற்றி பெற்றார். கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என்று தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த திருநீற்றுப்பதிகம் பாடினார். திருக்கொள்ளம்புதூரில் “கொட்டமே கமழும் கொள்ளம் புதூர் என்று தொடங்கும் காந்தாரப் பஞ்சமம் பண்ணமைந்த பதிகம் பாடி ஓடம் செலுத்தினார்.
திருப்பூந்துருத்தியில் தங்கியிருந்த திருநாவுக்கரசரைச் சந்தித்தார். பின்பு தொண்டை நாடு சென்றார். திருவோத்தூரை அடைந்தார். அங்கு ஒரு சிவனடியாரின் பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனையாக இருந்தன. இதனை,
“பூந்தோர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி” எனத் தொடங்கும் பழந்தக்கராகம் பண்ணமைந்த பதிகம் பாடி பெண்பனையாக்கினார். மயிலாப்பூரில் இறந்து சாம்பலாக விளங்கிய பூம்பாவையை “மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை” எனத் தொடங்கும் சீகாமரப் பண் பதிகம் பாடி பெண்ணாக எழுப்பிவித்தார்.
இறுதியில் திருப்பெருமணம் என்னும் கோயிலை அடைந்தார். இக்கோயில் ஆச்சாள்புரம் என்னும் தலத்தில் உள்ளது. இங்கு இவருக்கு வைகாசி மாதம் மூலநாளில் திருமணம் நடைபெற்றது.
“கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம்” எனத் தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சிப்பண் படிகம் பாடி திருமணத்திற்கு வந்திருந்த அனைவருடன் சோதியில் கலந்தார்.
மூன்று வயதில் பாடத்தொடங்கி 16 வயது வரை தலங்கள் தோறும் சென்று திருநெறியத் தமிழ் பாடினார். தோடுடைய செவியன் எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணில் பாடத் தொடங்கி கல்லூர்ப் பெருமணம் எனத்தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சி பண் பதிகம் வரை பாடியுள்ளர். இவர் பாடியவற்றுள் இன்று வரை 386 பதிகங்கள் கிடைத்துள்ளன. இவை மூன்று திருமுறைகளாகப் பகுக்கப் பெற்றுள்ளன. இவை பண்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
பண் :பழந்தக்கராகம்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.
பண் :பழந்தக்கராகம்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.
பண் :பழந்தக்கராகம்
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாதநி ழற்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
பண் :பழந்தக்கராகம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பினில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
மேய்ப்போன் குரம்பை புக்கு
முடி மன்னு கூனல் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படியே
பரவி விட்டு என் உச்சி
அடிமன்ன வைத்த பிரான் மூலன்
ஆகின்ற அங்கணனே (36)
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
ஆசையே துன்பத்திற்கு அடிப்படை என்பர். ஆசை அற்றால் அனைத்துத் துன்பங்களும் அழிந்துபோகும். எஞ்சி நிற்பது பேரானந்தமே.
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!
நன்றே நினைமின் நமன் இல்லை
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே .
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே!
கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே!
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல் பாடல் ஆகுமே!
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்?
ஆதி பூசை கொண்டதோ? அநாதி பூசை கொண்டதோ?
ஏது பூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!
பெறுக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்திங்கு உண்மை கூற வல்லீரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடந்து கூடலாகுமே!
நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் வரலாறு
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும்.
இந்நூலில் சுமார் நான்காயிரம் பாடல்கள் உள்ளன. திருமாலின் அடியவர்களாகிய பன்னிரு ஆழ்வார்களால் இந்நூலில் உள்ள பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பதில் திவ்யம் என்ற சொல்லானது இனிமை மற்றும் மேலான என்பதைக் குறிக்கும். பிரபந்தம் என்பது பாடல்களின் தொகுப்பாகும்.
மேலான கருத்துகள் மற்றும் இனிமையான சொற்களால் திருமாலினைப் பற்றி பாடப்பட்ட நான்காயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றழைக்கப்படுகிறது.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்கள் திருமாலின் சிறப்புகள் மற்றும் அவருடைய அவதாரங்களின் பெருமைகளையும் எடுத்து இயம்புகின்றன.
இப்பாடல்கள் பெரும்பாலும் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
கிபி 6 முதல் கிபி 9-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைப் போற்றி பாடல்கள் பலவற்றைப் பாடி வழிபட்டனர்.
அப்பாடல்களை 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமால் அடியவரான நாதமுனிகள் ‘ஆழ்வார்கள் அருளிய செயல்கள்’ என்ற பெயரில் தொகுத்தார்.
ஆழ்வார்கள் அருளிய செயல்கள் நூலில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை 3892 ஆகும்.
நாதமுனிகள் ஆழ்வார்கள் அருளிய செயல்களை முதலாயிரம், திருமொழி, திருவாய்மொழி, இயற்பா என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தினார்.
பின்னர் வந்த மணவாளமுனிகள் என்னும் திருமால் அடியார் திருவரங்கத்து அமுதனார் பாடிய இராமானுசர் நூற்று அந்தாதியை, ஆழ்வார்கள் அருளிய செயல்கள் நூலுடன் சேர்த்து நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உருவாக்கினார்.
இராமானுசர் நூற்று அந்தாதி மொத்தம் 108 பாசுரங்களை உடையது. ஆழ்வார் அருளிய செயல்கள் நூலில் உள்ள பாசுரங்களும், இராமானுசர் நூற்று அந்தாதி நூலில் உள்ள பாசுரங்களும் சேர்த்து மொத்தம் 4000 பாசுரங்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் கொண்டுள்ளது.
இந்நூலானது திராவிட வேதம், திராவிட பிரபந்தம், ஐந்தாவது வேதம், ஆன்ற தமிழ்மறை என்றெல்லாம் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
இன்றைக்கும் வைணவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் இப்பாடல்களைப் போற்றிப் பாடி வழிபாடு செய்கின்றனர்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்களில் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்கள் ஆகும்.
நாலாயிர திவ்ய பிரபந்தங்களின் வகைகள்
இந்நூலானது மொத்தம் 24 பிரபந்தங்களைக் கொண்டுள்ளது. அவை
1.திருப்பல்லாண்டு
2.பெரியாழ்வார் திருமொழி
3.திருப்பாவை
4.நாச்சியார் திருமொழி
5.பெருமாள் திருமொழி
6.திருசந்தவிருத்தம்
7.திருமாலை
8.திருப்பள்ளி எழுச்சி
9.அமலனாதிபிரான்
10.கண்ணிநுண்சிறுத்தாம்பு
11.பெரிய திருமொழி
12.திருகுறுந்தாண்டகம்
13.திருநெடுந்தாண்டகம்
14.முதல் திருவந்தாதி
15. இரண்டாம் திருவந்தாதி
16. மூன்றாம் திருவந்தாதி
17.நான்முகன் திருவந்தாதி
18.திருவிருத்தம்
19.திருவாசிரியம்
20.பெரிய திருவந்தாதி
21.திருஎழுகூற்றிருக்கை
22.சிறிய திருமடல்
23.பெரிய திருமடல்
24. இராமானுசர் நூற்றந்தாதி
முதலாயிரம் பாடல்கள்
பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு (12), திருமொழி (461)
ஆண்டாள் – திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி (143)
குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி (105)
திருமழிசை ஆழ்வார் – திருசந்தவிருத்தம் (120)
தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை (45), திருப்பள்ளி எழுச்சி(10)
திருப்பாணன் ஆழ்வார் – அமலனாதிபிரான்(10)
மதுரகவி ஆழ்வார் – கண்ணிநுண்சிறுத்தாம்பு (11)
இரண்டாவது ஆயிரம் பாடல்கள்
திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி (1084),
திருகுறுந்தாண்டகம்(20), திருநெடுந்தாண்டகம் (30)
மூன்றாவது ஆயிரம் பாடல்கள்
பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி (100)
பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி (100)
பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி (100)
திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி (96)
நம்மாழ்வார் – திருவிருத்தம் (100), திருவாஞ்சியம் (7), பெரிய திருவந்தாதி (87)
திருமங்கை ஆழ்வார் – திருஎழுக்கூற்றிருக்கை (1), சிறிய திருமடல் (40), பெரிய திருமடல் (78)
திருவரங்கத்தமுதனார் – இராமானுச நூற்று அந்தாதி (108)
நான்காவது ஆயிரம் பாடல்கள்
நம்மாழ்வார் – திருவாய்மொழி (1102)
ஆழ்வார்களில் அதிக பாசுரங்களைப் பாடியவர் நம்மாழ்வார் ஆவார். இவர் 1296 பாசுரங்களைப் பாடியுள்ளார்.
திருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாருக்கு அடுத்தபடியாக அதிக பாசுரங்களைப் பாடியுள்ளார்.
நம்மாழ்வார் இயற்றிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையாகப் போற்றப்படுகின்றன.
ஆண்டாள்
- பிறந்த ஊர் = ஸ்ரீவில்லிபுத்தூர்
- பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்
- இவர் பூமகள் அம்சமாகப்பிறந்தவர்
- இவர் துளசி வனத்தில்கண்டெடுக்கப்பட்டார்
- இவருக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் = கோதை
- இறைவனுக்கும்ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெற்ற இடம் = திருவரங்கம்
- இவரின் பாடல்களைப் “பள்ளமடை” என்றும், பிற ஆழ்வார்களின் பாடல்களை “மேட்டுமடை” என்றும் குறிப்பிடுவர்
- திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்றவர் = இராமானுஜர்
- நாலாயிரதிவ்வியப்பிரபந்தத்தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாகவைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
- பாவை என்பது சிற்றிலக்கியவகைகளுள் ஒன்று.
- பாவை என்பது இருமடியாகு பெயர்.
- திருப்பாவை பாக்கள் முப்பதும்வெண்டளையால் வந்த எட்டடிநாற்சீர்கொச்சகக் கலிப்பா வகையைசார்ந்தவை.
- இவரின் திருப்பாவை, பாவை நூல்களில்காலத்தால்முற்பட்டது.
- திருப்பாவைக்கு ஆண்டாள் இட்ட பெயர் = சங்கத் தமிழ் மாலை முப்பது
- கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)
- சூடிக்கொடுத்தசுடர்க்கொடி
- நாச்சியார்
- ஆண்டாள்
- திருப்பாவை
- நாச்சியார் திருமொழி
1. மார்கழித் திங்கள்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
2. வையத்து வாழ்வீர்காள்!
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
3. ஓங்கி உலகளந்த
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
4. ஆழிமழைக் கண்ணா
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
5. மாயனை
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
கருத்துகள்