தொகைச்சொற்கள்

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண --- மலை,காடு,மதில்,கடல்

அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் ----- தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை ----- பீதம்,கலவை,வட்டிகை,புலி

சொல்வகை ----- பெயர்,வினை,இடை ,உரி

தோற்கருவி ---- மத்தளம்,தண்ணுமை,இடக்கை,சல்லியம்

தோற்றம் ---- பை,முட்டை,நிலம்,வியர்வை

நகை ----- எளெளல்,இளமை,பேதமை,மடன்

நிலம் ---- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்

நிலை ---- பைசாசம்,மண்டலம்,ஆலீடம்,பிரத்தியாலீடம்

பண் ---- பாலை,குறிஞ்சி,மருதம்,செவ்வழி

பதவி ---- சாலோகம்,சாமீபம்,சாருபம்,சாயுச்சியம்

பா ----- வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா

பிச்சை ---- சதானிகபிச்சை,தகுகணாபிச்சை,மாதுகரிபிச்சை,யாசகபிச்சை

புருக்ஷசாதி ---- பூசிமாரன்,கெத்தமாரன்,புத்திரசேனன்

புலமையோர் ---- கவி,கமகன்,வாதி,வாக்கி

பூ ---- கொடிப்பூ,கோட்டுப்பூ,நீர்ப்பூ,புதர்ப்பூ

பெருமிதம் ---- கல்வி,தறுகண்,இசைமை,கொடை

பெண்கள் பருவம் ----- வாலை,தருணி,பிரவிடை,விருத்தை

பெண்வகை ----- பதுமினி,சித்தினி,சங்கினி,அத்தினி

பொருள் ---- அறம்,பொருள்,இன்பம்,வீடு

பொன்வகை ---- ஆடகம்,கிளிச்சிறை,சாதகம்,சாம்பூந்தம்

மகடூஉக்குணம் ----- நாணம்,மடம்,அச்சம்,பயிர்ப்பு

மருட்கை ---- புதுமை , பெருமை,சிறுமை,ஆக்கம்

மார்க்கம் ---- சரிகை,கிரிசை,யோகம்,ஞானம்

யுகம் ---- கிரதம்,திரேதம்,துவாபரம்,கவி

வெகுளி ---- உறுப்பகை,குடிகோள்,அலை,கொலை

-----------------தொடரும்

கருத்துகள்

Admin இவ்வாறு கூறியுள்ளார்…
பல சொற்களை அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்..
முனைவர் மு.இளங்கோவன் இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் தமிழ்ப்பணி தொடர்க.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சந்ரு........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி முனைவர் மு.இளங்கோவன் அவர்களே.......
S.Lankeswaran இவ்வாறு கூறியுள்ளார்…
ஏதோ பதிந்தோம் பதிவினை நிரப்ப வேண்டும் என்று இல்லாமல் பயனுள்ள பதிவினை இட்டுள்ளீர்கள். தமிழர்களுக்கு பயன்படும்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இலங்கேஸ்வரன் அவர்களே...
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பப்பா நல்ல தொகுப்பு, நல்ல பகிர்வு
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சேகரன்.......
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் முனைவர் அவர்களே..,

நான்காம் தொகை..

நன்றாம்..
நயமாம்..
நலமாம்.. - அழகுதமிழ்
நடமாம்..!

நான்காம் தொகை
நல்ல நறுந்தொகை..!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சுப.ந அவர்களே........
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவர் அவர்களே,

'சுப.ந' உங்கள் விளிப்பில் ஒரு சின்ன மகிழ்வு எனக்கிருக்கிறது.
'சுப.வீ' போலவா இது?

நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க மகிழ்ச்சி சுப.ந. அவர்களே.........உங்களைச் சுப.ந என்று விளிக்கவே தோன்றுகிறது..தொடரலாம் அல்லவா?
Useful Shopping Tips இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நன்று
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Respected Madam
I want the actual meaning for 2 of naalvagai pendir gunam -"madam,payirpu" & also naalvagai adavar gunam "arivu,nirai,orpu,kadai pidi".Are these definitions are derived form "tholkaapiyam" or any other vedic book/ilakiyam.Plz clear my doubts.I will be more thankful to you mam.
Plz post these doubt clarifications in this blog itself mam.Thanking you in anticipation mam.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் பத்மா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. இதனை நான் அபிதான சிந்தாமணியில் இருந்து தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
சு.மருதா இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களது தமிழ்ப்பணிக்கு மரியாதைக்குரிய நன்றிகள்
நிலம் பற்றி குறுப்பிடுகையில் பாலைநிலம் இடம்பெறாததன் தகவல் அறிய விரும்புகிறேன்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Deanne, wtf..

Harriett
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Reinaldo FTW?!

Judy
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Great read! I want to see a follow up to this topic :D
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I am very glad you said this!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I need to know just what Milo will say with this.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்