விடுதலையின் நிறம்

அமெரிக்காவின் அடிமை வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு
பல நூல்கள் வெளிவந்துள்ளன.அவற்றுள் விடுதலையின் நிறம் என்ற நூல்
அமெரிக்காவில் அடிமையாக இருந்த ஹாரியட் ஏ.ஜேக்கப்ஸ் என்ற
இளம் பெண்ணின் வாழ்க்கையில்
ஏற்பட்ட மிகத் துயரமான நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.இந் நூலை அவரே
1857 இல் எழுதியுள்ளார்.இந்நூல் 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்கா குறித்த இரு வித திறனாய்வு
க்கு வடிவம் கொடுக்கிறது. மனிதர்களை விற்பனைப் பொருளாக எண்ணும் அடிமை முறைக்கும்
அதற்குத் துணை நிற்கும் வெள்ளை இனவாத கருத்தியலுக்கும்,அது போலவே மரபான தந்தை வழி
அமைப்புகள் மற்றும் கருத்தியலுக்கும் சவாலாக விளங்குகின்றது.

1813 ஆம் ஆண்டு கரோலினாவிலுள்ள எடென்டனில்,மோல்லி ஹார்னிப்ளோவுக்கும்,
மார்கரெட் ஹார்னிப்ளோவின் அடிமைக்கும் மகளான டிலைலாவுக்கும்
டாக்டர் ஆண்ட்ரு நாக்ஸின் அடிமையான தச்சுத் தொழிலாளி டேனியல் ஜேக்கப்ஸூக்கும்
மகளாகப் பிறந்தார் ஹாரியட் ஏ.ஜேக்கப்ஸ்.
இவர் அடிமையாகவே பிறந்து ,இரண்டு வயதிலும்,நான்கு வயதிலும் விற்கப்பட்டு
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகும் வரை பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார்.
ஜேக்கப்ஸ் குழந்தையாக இருந்த பொழுதே அனாதையாகிவிட்டார்.அவருடைய முதல்
எஜமானி மார்கரெட் ஹார்னிப்ளோ என்பவர்.அவர் இருந்த வரை எவ்வித துன்பமுமின்றி
இருந்ததோடு மட்டுமல்லாமல்,அவர் எஜமானியின் மூலமாக படிப்பதற்கும்,தையல் வேலை செய்வதற்கும்
கற்றுக்கொண்டார்.அவர் இறந்த பிறகுதான் வாழக்கையில் பல இன்னல்களை எதிர்கொள்கின்றார்.
அத்துன்பங்களில் இருந்து மீண்டு தப்பித்து,தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறார் என்பதை
நம் நெஞ்சம் நெகிழும்படி கதை சொல்லியாய் தன் வாழ்க்கையைக் கூறிச்செல்கின்றார்.
அண்மையில் இந்நூலைப் படித்தேன்.அடிமை வாழ்க்கை முறையில் என்னென்ன துன்பங்களை
எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை இதை படித்தவுடன் உணரமுடிகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்